நீண்ட இடைவெளி. விடுப்பில் தாயகம் சென்று சுற்றி திரும்ப வந்து 10 நாளாகியும் நூல்களிலோ, வலைப்பதிவிலோ நாட்டம் செல்லவில்லை. வீட்டுக்குச் சென்றால் திரும்ப மனதை ஒருமுகப்படுத்துவது பெரிய சிக்கலாகிவிடுகிறது. இந்தத் தொடர்பதிவை முடிக்கவேண்டும். ‘எங்க ஊரு..’ தொடர்பதிவிற்கு சக பதிவர் ரஞ்சனி நாராயணன் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தருக்கிறார். அதையும் எழுதவேண்டும். (இன்னுமா எழுதலை என்று அவர் கையில் கிடைத்ததை எடுத்து கடாசும் முன்னர் எழுது முடித்துவிடுவேன்)
இந்தப் பயணக்கட்டுரையின் முந்தைய இரண்டு பதிவுகளை்ப பார்க்க..
எல்லோரா பயணத்திலிருந்து மீண்டு, ஒரு வாரம் அலுவலகம் சென்று ஆணிகளை முடித்துவிட்டு அடுத்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து தொடங்குகிறது அடுத்த பயணம். மாலை விரைவாக தங்குமிடம் சென்று ரெண்டு நாள் துணிகளை எடுத்துக்கொண்டு, வெளியே வந்த போது மணி 7. 9 மணி சுமாருக்கு தாதர் ரயில் நிலையத்தில் வண்டி ஏறவேண்டும். விரைவாக போரிவளி நிலையம் சென்று உள்ளுர் ரயிலில் தொத்திக்கொண்டு (இந்த முறை ரெண்டாம் கிளாஸ்தான்! சூடுபட்ட பூனை) தாதர் ரயில்நிலையம் அடைந்த போதுதான் குழம்பம் ஆரம்பித்தது. சென்னை சென்ட்ரல் போன்ற எக்கச்சக்க பிளாட்பார்ம்கள். வந்து நின்ற உடன் கிளம்பும் ரயில்கள், அவற்றில் பெயர் பலகை பெரும்பாலும் இல்லாமலிருப்பது மிகுந்த சிக்கலை உண்டு பண்ணிவிட்டது. பதபதைப்புடன் இருந்தாலும் அங்கிங்கு விசாரித்து சரியான நடைமேடையில் உட்கார்ந்து கொண்டு ரயிலுக்கான காத்திருப்பு தொடங்கியது.
சுத்தமாக இந்தி தெரியாத காரணத்தால், பயண ஏர்பாட்டாளர் பங்கஜ்ஜைத் தொடர்பு கொண்டு ஓட்டுநர் எண் கேட்டுக்கொண்டேன். தவிற இரயில் நிலையத்திற்கே வந்துவிடுவார் அல்லவா என்று ஒன்றுக்கு இருமுறை உறுதிப்படுத்திக்கொண்டேன். ரயில் 10 நிமிடம் லேட்டாக வந்தது. ஒரு வழியாக ஏறி விடிகாலையில் அவுரங்காபாத் வந்து சேர்ந்தாலும், கடும் குளிரின் காரணமாக இரவெல்லாம் தூக்கம்பிடிக்கவில்லை.
சொன்னார் போலவே ஓட்டுநர் என் பெயர் பலகையுடன் காத்திருந்தார். நான் தங்குவதற்கு ஒரு நல்ல விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்தார்.
“நீ தூங்கு. 8 மணிக்குக் கிளம்பலாம். இங்க தென்னிந்திய உணவு விடுதி ஒன்று இருக்கிறது. அங்க கூட்டிப்போறேன்” னு சொல்லிட்டு ஓட்டுநர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இரண்டு மணிநேர தூக்கம். 7 50க்கே வரவேற்பரைக்குச் சென்று காத்திருந்தேன். சொன்னார் போலவே வந்தார். அருகில் உள்ள ஒரு ஓட்டல். தென்னிந்திய உணவு என்று அவர் கேசரி வாங்கிக் கொண்டார். அவர் பரிந்துரையின்பேரில் நான் தோசை வாங்கி, ஏண்டா வாங்கினோம் என்று வருத்தத்துடன் உணவை முடித்துக்கொண்டேன்!! கொஞ்சம் திராபையாகத்தான் இருந்தது.
போலாம் ரைட்!
பயணம் கிளம்பியது. அவுரங்காபாத் நம்ப ஓட்டுநருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. புகழ்ந்து கொண்டே வந்தார். 15 நிமிடங்களில் நகர் நீங்கினோம்.
குல்தாபாத்
அவுரங்கசீப் சமாதியைக் காட்டினார். எல்லோரா மிகுந்த நேரம் எடுக்கும் என்று பட்டது. எனவே நான் அவரை எல்லோராவிற்கே போகச்சொன்னேன்.
போகிற வழியில்…
எல்லோரா பயணம், தமிழ்நாட்டு சாலைகள் போல. அங்கங்கே பள்ளம்From Ellora
மலைகள், மேடு பள்ளங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் காடுகள்From Ellora
இப்படி சுத்தி வர மலைகள் இருந்தால் வேறு என்னதான் செய்வது? எல்லோரா உருவாகாமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்From Ellora
தவுலதாபாத் கோட்டை
பீரங்கி ஏந்திய கோட்டை. முகமது பின் துக்ளக்கின் தலைநகராக விளங்கியது. பிறகு தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக இந்த இடம் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள். பழைய பெயர் தேவகிரி!
தவுலதாபாத் கோட்டை, தவறிப்போய்விட்டது. உள்ளே நுழைய நேரம் அனுமதிக்கவில்லைFrom Ellora
இதுமாதிரி நிறைய வாயில்கள் அவுரங்காபாத் நகரில் உள்ளனFrom Ellora
இந்த இடத்தை எல்லாம் நான் தேர்ந்தெடுக்கவில்லை. “எங்க ஊருக்கு வந்திட்டு இதையெல்லாம் பார்க்காம போனா எப்படி” என்று ஓட்டுநர் நண்பர் என்னை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு உள்ளே தள்ளிவிட்டார்.
12 ஜோதிர் லிங்கம் ஆலயங்களில் ஒன்று. எல்லோராவிற்கு மிக அருகில் வெருல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.
grineshwar one of the hindu temple ini ndia at maharastra
சர சரவென மேலையேறி பர பரவென கீழிறங்கி எல்லோரா வந்து சேர்ந்தோம்.
உள்ளே நுழைந்ததும் கைலாசநாதர் கோயில் தென்படுகிறது. “ஏய், நிப்பாட்டுப்பா. நிப்பாட்டு..” என்று அலறினேன். “பொறு. நான் சொல்கிறமாதிரி பார்” என்று 32வது குகை வாசலில் இறக்கிவிட்டார். ஓரிடத்தில் வண்டியை நிப்பாட்டுவார். அருகில் உள்ள குகைகளைப் பார்த்துவிட்டு திரும்ப தொத்திக்கொள்வேன். பிறகு குகை வரிசையில் உள்ள அடுத்த இடத்தில் நிப்பாட்டுவார். இவ்வாறாக 4 இடங்களில் அவர் நிப்பாட்ட அனைத்து குகைகளையும் பார்க்க முடிந்தது.
குகைகளை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கினால் இது பதிவாக இல்லாது, புத்தகமாக ஆகிவிடும். எனவே குறிப்பிட்ட படங்கள் மட்டும் கீழே!
மொத்தம் 34 குகைகள். இந்து குகைகள், பவுத்த குகைகள் மற்றும் ஜைன குகைகள். கலந்து கட்டிய ஒரு கலைப் பொக்கிஷம் இது.
பயணம் துவங்குகிறது, நேரடியாக கடைசி குகை 32. இந்திரசபா என்று இதனை அழைக்கிறார்கள் From Ellora
32வது குகை ரஜினி introduction மாதிரி. செம மாஸ்!
கொடி மரம், ஓங்கி வளர்ந்திருக்கிறது. என்னை விட உங்களை விட உயரம். From Ellora
கொடிமரம் இடப்புறம், இந்த கல்யானை வலப்புறம் From Ellora
கொடி மரத்திற்கு அருகில் குருவிக்கூடுகள் போல செதுக்கப்பட்ட குகைகள் From Ellora
என்னை மன எழுச்சி கொள்ள வைத்தவை, இதன் பிரமாண்டங்கள்!
குகைக்கோயிலில் மாடிகளும் விதானங்களும்
மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள்
அதன் அளவு! எவ்ளோஓஓஓ பெர்சுசு!! Massive!
அலங்கரிக்கப்பட்ட வாயில், வாயில் உயரத்தி்ற்கு அலங்காரம்!From Ellora
34 வது குகை, சமண ஆச்சரியரும் அடியவர்களும் From Ellora
அதே பாசிமணி மாலைதான். எத்தணை தடவை பார்த்தாலும் போதுமென்று தோணாது From Ellora
இதென்ன குகையா, இல்லவே இல்லை. மாட மாளிகை From Ellora
மறுபடி 33ஆம் குகை, (உள்ளுக்குள்ளயே பாதை இருக்கு இல்லையா. அதனால கொஞ்சம் ஓடிப்பிடிச்சு விளையாண்டேன்) இவங்க இந்திராணி From Ellora
பிரம்மாண்டமான தூண் அதில் அலை அலையாக அலங்காரங்கள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் மிக நேர்த்தியான சிற்பங்கள், என்ன சொல்றதுன்னே தெரியலை, கல்லுக்கு அலங்காரமா, அவங்க கடவுளுக்கே அலங்காரமா? From Ellora
இது தூண்தான், அதுவும் பாறையைக் குடைந்த தூண்தான். நம்பனும் From Ellora
பாரத்தைத் தாங்கவா, மனதைத் தாக்கவா, அவ்வளவு அழகான தூண்கள் From Ellora
கண்களுக்கு விருந்தாக இந்திரசபா குகை-33 From Ellora
சும்மா இருக்க முடியாம காலுக்குத் தோன்றியபடி நடந்தா இந்த குகை வருது.. என்ன விந்தை என்ன விந்தை. மலைக்குள் கண்டெடுத்த சொத்துக்கள், கண்களுக்கு நல்ல வேட்டை இன்று!! From Ellora
குகை 29 இந்து குகைக் கோயில், கோபக் கனலாய் கொதிக்கும் சிவன். நான் நிற்கும் போது என் தோளில் நிற்கும் இன்னொருவரால்தான் அய்யனின் முகத்தைப் பார்க்க முடியும் From Ellora
ராவணனும் கயிலை மலையும், இந்த சிற்பம் எல்லோராவில் எத்தணை முறை உள்ளது என்று ஒரு புதையல் தேடும் போட்டி வைக்கலாம். From Ellora
பிறகென்ன, அக்கரைக்கு ஓடி வந்தாச்சு. பாதை சற்று சிரமம்தான், தடுக்கி விழுந்தால் முகம் பெயர்வது நிச்சயம். மழைகாலத்தில் இங்குதான் அருவி விழுமாம். ஆறு அல்லது ஏழு மாதத்திற்கு விழுமாம். நமக்குக் கொடுப்பினை இல்லை From Ellora
பலராமன், ஸ்ரீ கிருஷ்ணன், சேஷசாயி விஷ்ணு, குகை 27 From Ellora
மகிஷாசுர மர்தினியில் துவங்கி முன்னர் பார்த்த அத்தனை சிற்பங்களும் உள்ள மண்டபம், குகை 27 From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 17ஏ (இந்த குகை வெளியே இருந்து பார்க்க சாதாரணமா இருக்கும். உள்ளே ஒரு சிற்பக் கிட்டங்கியே இருக்கும்!) From Ellora
கைலாசநாதர் கோயில்
இன்றளவும் எல்லோரா என்றால் கைலாச நாதர் கோயில்தான் யாருக்கும் நினைவிற்கு வரும். காரணம் இதன் அழகா? அப்படிப்பார்த்தால் அங்குள்ள எல்லாம் அழகுதானே! இதன் வடிவம்தான் முக்கியம் என்று தோன்றுகிறது. இவ்வடிவம் மேற்கிந்திய சிற்பக்கலைக்கு உரியதல்ல. தென்னிந்திய கோயில் கட்டடக்கலைக்கு உரியது. அத்ததண்டி கோயில்… ஆனால் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது (மகாபலிபுரம் உங்களுக்கு நினைவிற்கு வந்தால், சபாசு!)
திராவிட – ராஷ்ட்ரகூடர்களின் கோயில் கட்டிடக்கலைக்கு இந்த கைலாசநாதர் கோயில் மிகச்சிறந்த உதாரணம். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஷ்ட்ரகூட மண்ணன் முதலாம் கிருஷ்ணனின் ஆட்சி கர்நாடகா வரை பரவியிருந்தது. பட்டடக்கல்லில் உள்ள விருப்பாக்ஷர் கோயில் வடிவில் இது அமைந்தது என்கிறார்கள்.
மலைக்க வைக்கம் பேரழகு. அந்நிய மண்ணில் என் சொந்தத்தைப் பார்த்தது போன்ற உணர்வு. பித்துப்பிடித்தது போல, அந்த கோயிலின் உள்ளே, வெளியே, மேலே என்று அலைந்து கொண்டிருந்தேன். வாழ்வின் மறக்க முடியாத, மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிற தருணங்களில் அதுவும் ஒன்று.
குகை 16, கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்திய கலையின் பொக்கிஷப் பெட்டகம் தெரியும், கைலாச நாதர் கோயில் From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
லிங்கோத்பவர் (நம்ம ஊர் திருமயத்தில் உள்ளதை விட சின்னதுதான். :)) From Ellora
கோயிலை அணு அணுவாக ரசிக்க மூன்று திசைகளிலும் மாடங்கள் உள்ளன, முதல்மாடி, ரெண்டாம் மாடி, மூன்றாம் மாடி.. ஆகா ஆகா From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
கி பி 760ல் ராஷ்டிரகூடர்களின் பங்களிப்பாக இந்த குகையைக் கூறுகிறார்கள். (முதலாம் கிருஷ்ணன்) From Ellora
மூச்சு வாங்கியது அன்று, பாறை ஏறியதால் இருக்கும் என்று நினைத்தேன். இந்தப் படங்களைத் திரும்பப் பார்க்கும்போதெல்லாம் இதயத்துடிப்பு அதிகரிப்பது ஏன்?? மனமே இல்லாமல் அடுத்த குகையை நோக்கி போகிறேன். From Ellora
குகை 12. இண்டு இடுக்கில இருக்கிறமாதிரி தெரிகிறதல்லவா From Ellora
உள்ள பாருங்க, இது மூன்று மாடி ஆச்சரியம். குகை 12 From Ellora
குகை 10. எல்லோராவி்ன் ஒரே சைத்திய வடிவிலான குகை. புத்தமத குகைகள் துவங்குகின்றன From Ellora
அலங்காரம் மிகுந்த இந்த குகையை தேவலோக எஞ்சினியர் விஸ்வகர்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அவருக்கும் புத்த மதத்திற்கும் என்ன சம்பந்தம்? மகாயானத்தில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள்
From Ellora
ஆதிமூலம். முதல் குகை. அனேகமாக குகை வெட்டுபவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்து, பின்னர் புத்த துறவிகள் பயன்படுத்த ஆரம்பித்திருக்க வேண்டும் என்கிறார்கள். கிபி 6ஆம் நூற்றாண்டு From Ellora
அத்துணை குகைகளும் பாறையில் செதுக்கினார்களா, நம் மனதில் இறக்கினார்களா, மனம் முழுக்க எல்லோரா!
இது நம் முகவரி, நமது மூதாதையர் வீடு. அனைவரும் ஒரு முறையாவது செல்லவேண்டும் என்பது என் ஆவல்.
எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டோம். இப்பொழுது நம்மிடம் இருக்கும் கடைசி கோவணம், நமது பாரம்பரியம், கலாச்சாரம் மட்டுமே.
வணக்கம் சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்தியாவில் நாம் பார்த்தே தீரவேண்டிய இடங்களில் ஒன்று எல்லோரா. நம் காலத்தையும் அவற்றைக் கட்டிய காலத்தையும் இணைக்கும் ஒரு தொடர்புச் சங்கிலி. நம் பெருமையையும், அதை இழந்து இப்போதிருக்கும் நிலைமையையும் கூறுவது.
அடேங்கப்பா ! சூப்பர் பதிவு சார்! எங்களையும் பைசா செலவில்லாமல் குகை கோயிலை அருமையாக சுத்தி காட்டியதற்கு எனது நன்றிகள் 🙂
வணக்கம் சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்தியாவில் நாம் பார்த்தே தீரவேண்டிய இடங்களில் ஒன்று எல்லோரா. நம் காலத்தையும் அவற்றைக் கட்டிய காலத்தையும் இணைக்கும் ஒரு தொடர்புச் சங்கிலி. நம் பெருமையையும், அதை இழந்து இப்போதிருக்கும் நிலைமையையும் கூறுவது.
நன்றி.