பிறகு ராபின் ஆர்வமாக ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தான்.
“அந்த எலி, அந்தப் பூனை அப்புறம் அந்த லோவல் என்ற நாய்
எல்லா இங்கிலாந்தையும் ஆள்கின்றன, ஒரு காட்டுப் பன்றியின் கீழ்.”
“அதற்கு என்ன பொருள்?” ஜார்ஜ் வினவினான்.
The Knight Of Swords And Spooks – Terry Deary’s Knights’ Tales
ஆசிரியர்: Terry Deary
பதிப்பு: A & C Black Publishers Ltd, லண்டன். முதல் பதிப்பு 2009.
NLBயில் முன்பதிவு செய்ய: The knight of swords and spooks / by Terry Deary ; illustrated by Helen Flook.
கன்னிமாராவின் முன்பதிவு செய்ய: இல்லை
அருஞ்சொற்கள்: கடினமான வார்த்தைகளின் தொகுப்பு
இந்தக் கதை இங்கிலாந்தில் நடந்த கதை. இது ஒரு வரலாற்றுக் கற்பனை, சாகசக் கதை (thriller).
முக்கியமான கதாபாத்திரங்கள்

ஹென்றி டூடர் – கிளர்ச்சியாளன்




இந்தப் புத்தகத்தை நான் கரடி தேன் சாப்பிடுவது மாதிரி படித்தேன்.
ஜார்ஜின் அப்பா ஒரு தேச துரோகி. ஜார்ஜின் அப்பா சர் தாமஸ் ஸ்டான்லிக்கு முதல் திருமணத்தில் பிறந்தவன் ஹென்றி டூடர்.
எனக்கு இந்தக் கதையில் எல்லாம் பிடித்திருந்தது. என் கற்பனையில் இது வேறு மாதிரி இந்தக் கதை இருக்கும் என்று நினைத்தேன்.
ரிச்சர்டு – III தான் ராஜாவாக அவன் குடும்பத்தையே கொன்றவன். அதில் எல்லாரும் 10 பிள்ளைகள்.
எனக்கு இதைப் படித்தவுடன் ஒரு போர் வீரர் ஆகவேண்டும் என்று மனதில் பதிந்தது. ஆனால் அது பழைய காலத்தில் தான் நடக்கும். அதனால் அது ஒரு நொடியில் அழிந்து போனது. ஆனால் போர் வீரராய் இருக்கும் வாழ்க்கையே தனி. ஆனால் அது ஜெயிக்கும் பக்கம் இருந்தால்தான் உண்டு.
கடைசியில் ஜார்ஜுக்கு என்ன ஆனது? இங்கிலாந்து என்ன ஆனது? என்பதுதான் கதை.