ஒரு நாள் ஒரு பெண் கடைசியாக உயிர் பிழைத்த ஒரு பூவைப் பார்த்தாள். அவள் அன்றுதான் முதன் முதலாகப் பூவைப் பார்த்தாள். கடைசிப் பூ கூட வாடப் போகிறது என்று அவள் மற்றவர்களுக்குப் புரிய வைத்தாள்.
கடைசிப் பூ
ஆசிரியர் – ஜேம்ஸ் தர்பெர்
மொழி மாற்றம் – கொ. மா. கோ. இளங்கோ
பதிப்பு – Books for Children, Jan 2016
நூலக முன்பதிவு
- NLB : கடைசிப் பூ = The last flower
- கன்னிமாரா – காணோம்!
- மின்நூல் – arvindguptatoys
முதலாம் உலகப்போரின் போது நிறைய மக்கள் இறந்து போனார்கள். ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் எல்லோருமட் விலங்குகளை விட மோசமான நிலையை அடைந்தார்கள். காரணம், கணவுத் தட்டுப்பாடும், அன்பு இல்லாததுமே. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரே பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவைக் காப்பாற்றியது யார்?
அந்த ஊர் மக்கள் எல்லாம் மிருகம் மாதிரி ஆனவுடன், ஒரு பெண் குழந்தை ஒரு காய்ந்து போகப்போகும் பூவைப் பார்த்துவிட்டு, ஐயோ பாவம் என்று எல்லா ஊர் மக்களிடமும் சொன்னது. அதை அவளால் காப்பாற்ற முடிந்ததா, இந்தக் கதையைப் படித்தால் தெரியும்.
அன்புடன்
கண்ணன்.