எனிட் பிளைட்டனின் புதையல் தீவில் ஐந்து என்பது குழந்தைகளுக்கான ஈர்க்கக்கூடிய மற்றும் மகிழ்ச்சிகரமான சாகசக் கதையாகும். இது முதல் பக்கத்திலிருந்து வாசகரை உள்ளிழுத்துக்கொள்கிறது (இதில் பல குழந்தைகளுக்கான அல்லது வயது வந்தோர் புத்தகங்கள் கூட சருக்கிவிடுகின்றன). இறுதிவரை உற்சாகம் நிறைந்த வாசிப்பாக இது அமையக்கூடும். 7 முதல் 12 வயதுக்குட்பட்ட இளம் வாசகர்களுக்கு இந்த நாவல் சரியான தீனி. நான் ஏன் இதை படிக்கிறேன் என்று என்னிடம் கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்ன? அது 1942 இல் வெளியிடப்பட்டது, நான் அப்போது பிறக்கவில்லை, அதான்! 🙂 ஆனால் பாருங்க, சிறந்த கதைகள் ஒருபோதும் பழையதாக மாறாது! இப்படி சொல்லலாமே, பழையதாக ஆக ஆகத்தான் திராட்சை ரசத்திற்கு மதிப்பு கூடுகிறது. அது போல!
ஜூலியன், டிக் மற்றும் ஆன்னி கோடை விடுமுறைக்கு தங்கள் உறவினர் ஜார்ஜை (அவள் பெயர் ஜார்ஜினா, ஆனால் அவள் ஜார்ஜ் என்று அழைக்கப்படுவதை விரும்புகிறாள்!, ஆனால் அவள் பழகுவதற்குக் கடினமானவள்) சந்திக்கின்றனர். அவள் சில சமயங்களில் கொஞ்சம் எரிச்சலாக இருக்கலாம். ஆனால் ஜூலியன் முதிர்ச்சியடைந்த முறையில் நடந்துகொண்டு சிறந்த நட்புக்கு வழி வகுக்கிறான்.
ஜார்ஜ் அவர்களை (அவளது நாய் டிம்முடன் – நாயுடன் சேர்ந்து அவர்கள்தான் அந்த ஐந்து பேர்!) அவளது தாயாருக்குச் சொந்தமான கிரின் தீவை ஆராய்வதற்காகவும், அதன் அருகிலுள்ள விபத்துக்குள்ளாகி மூழ்கிப்போன கப்பலைக் காட்டவும் அழைத்துச் செல்கிறாள். ஒரு பெரிய புயல் தாக்கும் போது, அந்த விபத்துக்குள்ளான கப்பல் இவர்களின் தீவில் கரையொதுங்குகிறது (தசாவதாரம் படத்தில் சுனாமி அடித்து பள்ளி கொண்ட பெருமாள் சிலை கடலை விட்டு வெளியே வருமே! அது போல!). அப்போது இருந்து நடக்கும் சம்பவங்கள் மற்றும் சம்பாஷனைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. மர்மமான தடயங்கள், பொறிகள், அந்நியர்கள் போன்றவற்றை சந்தித்து அந்தக் குழந்தைகள் புதையல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பிட தேவையில்லை, இந்த கதை மிகவும் ஈர்க்கக்கூடியது, The Secret Seven | எனிட் பிளைடன் போன்று. இது குழந்தைகளுக்கான நட்பு மற்றும் துணிச்சல் போன்றவற்றைச் சொல்லிச் செல்லும் சாகசக் கதை. குழந்தைகள் வளர்ப்பு குறித்த பெரியவர்களுக்கும் இது ஒரு தவிர்க்க முடியாத செய்தியைக் கொண்டுள்ளது. இந்த புத்தகம் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போன்றது! ஒவ்வொரு பக்கமும் உங்களை ஒரு புதிய சாகசத்திற்குத் தள்ளுகிறது, அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க நீங்கள் பந்தயத்தில் ஈடுபட விரும்புவீர்கள். மிகவும் குழப்பமான வார்த்தைகள் எல்லாம் எதுவும் இல்லை, எனவே நீங்கள் இதனை எளிதாக அணுகலாம்.
புகழ்பெற்ற ஆங்கில குழந்தைகள் எழுத்தாளர், எனிட் மேரி பிளைடன் (1897 – 1968), மிகவும் வெற்றிகரமான தொடர்ச்சியான நூல்களைப் பதிப்பித்தவர். அவருக்குப் பின்னால் ஒரு கவர்ச்சிகரமான பின்னணி இருக்கிறது. விக்கியின் கூற்றுப்படி, அவரது முதல் கதை 1947 இல் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து பல வெற்றிகரமான புத்தகங்கள் வெளிவந்தன. அவரது படைப்புகள் உலகளாவிய பரபரப்பை ஏற்படுத்தின, மேலும் அவர் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளராக 4 வது இடத்தைப் பிடித்தார் – ஒரு நம்பமுடியாத சாதனை!
நான் இதை என் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கிறேன், உங்கள் குழந்தைகளும் படிக்க பரிந்துரைக்கிறேன்.
தமிழகத்தில் குழந்தைகள் இடைய பரவலாக புழங்க விடப்படும் போதை பற்றிய செய்திகள் நம் சமூகத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கின்றன. குழந்தைகளை புனைவின் போதை தொடரட்டும், நார்காட்டிக்ஸ் போதை அல்ல. இனிமையான வார இறுதியாக இது அமையட்டும்.
—
I’m participating in the #TBRChallenge 2024 by Blogchatter