Thaipoosam 2022


shri valli deva senapate
shri subramanya namostute

Image
Sri Thendayuthapani Temple, Tank Rd, Singapore

கோவிட் காலத்தில் இன்னொரு தைப்பூசத் திருவிழா இன்று. வழமை போல ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதிகாலை நேரத்தில் அரசன் வேலனை கண்ணாரக் காணும் பேறு பெற்றோம். இக்கடின காலத்தைக் கடக்க, அடுத்த ஆண்டிலாவது முழு அளவிலான கொண்டாட்டங்கள் நடைபெறட்டும். வேலும் மயிலும் துணை நிற்க.

தைப்பூசம் ஸ்பெஷல் – தாயாரிடமிருந்து!

வீடு திரும்பல் – கொழும்பு திருச்சி


இன்று நம் பயணம் முடிகிறது. இன்று நாம் கொழும்புவிலிருந்து திருச்சிக்குச் செல்லப் போகிறோம்.

இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள்

இலங்கையை விட்டு வெளியேறுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அத்தகைய ஒரு நல்ல பயணம்.

எங்கள் சுற்றுலா வழிகாட்டி திரு. துஷார. இலங்கையில் அந்த 8 நாட்களில் இலங்கையில் எங்கள் நண்பராக இருந்தார். அவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்.

எங்கள் விடுதி ஒரு இருட்டானது. நடை பாதையில் இருட்டு மட்டும் தான் என் கண்ணுக்குத் தெரிந்தது. நட்சத்திர ஓட்டல் என்றால் வெளிச்சம் இன்றி அழுது வடியவேண்டும் போல. எனக்கு இதுதான் முதல் முறை. அதுவுமின்றி காலை உணவு வேறு தாமதம். எங்கள் விமானத்திற்குத் தாமதம் ஆனது. அரை மணிநேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக நாங்கள் விமான திருச்சி சென்றடைந்தோம். காலை உணவும் சரியில்லை. மதிய உணவும் சரியில்லை. புதுகைக்குச் சென்ற பிறகுதான் எல்லாம்.

..இலங்கைப் பயணக் கட்டுரை நிறைவு..

சார்வரி ஆண்டு வைகாசி 17
திருவள்ளுவர் ஆண்டு 2051

Galle Srilanka

காலிக் கோட்டையிலிருந்து கொழும்பு கங்காராமய விகாரை


இன்று நம் பயணத்திட்டத்தின் இறுதி நாள்.

காலி | Galle

காலியில் நாங்கள் தங்கிய விடுதி அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. கடற்கரையைப் பார்க்க இயலவில்லை. வாகனம் நிறுத்த வசதி இல்லை. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. குளிர் சாதனம் நேரக்கருவி (timer) வேலை செய்யவில்லை. உணவு மற்றும் பணியாளர்கள் விடுப்பில் சென்றுவிட்டிருந்தனர். நாங்கள் தங்கின அறை வசதியானது. மற்றும் சுத்தமானது. காலி சாலைக்கு அருகில் வசதியாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி பயணம் செய்யும் போது நீங்கள் தூங்க ஒரு விடுதியைப் பார்த்தால், இந்த விடுதி சரியான விடுதி. எல்லா விடுதிகளிலும் எங்களை பழச்சாருடன் வர வரவேற்றார்கள். ஆனால் இந்த விடுதி தான் எங்களுக்கு ஒரு தண்ணீர் கூட தரவில்லை. இரவு சமைக்க யாருமில்லை. வெளியில் கடைகளும் இல்லை. நுவரெலியா போகும் வழியில் நாங்கள் வாங்கியிருந்த பழங்கள் கை கொடுத்தன. இலங்கை பயணத்தில் உணவு இல்லாத ஒரே இரவு காலி விடுதியில் தங்கிய இரவு.

இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள்

காலை எழுந்ததும் நீண்ட நேரம் கடற்கரையில் கழித்தோம். நன்கு பசி வரும்வரை கடற்கரையில் இங்கும் அங்குமாய் நடந்து இந்துமாக்கடலின் அழகினை ரசித்தோம். எங்களைத் தேடி துஷார வந்ததும், விடுதிக்குத் திரும்பினோம்.

காலி | Galle

காலை உணவிற்காக பழங்களையும் ரொட்டிகளையும் பார்த்தபோது எங்களுக்குக் கண்கள் கலங்கிவிட்டன!

இன்று நாம் கொழும்பு திரும்பப் போகிறோம்.

நாங்கள் போகும் வழியில் காலிக் கோட்டையை (Galle Fort) பார்த்தோம்.

காலிக் கோட்டை | Galle Fort

இது கடல் முன் உள்ள அழகான கோட்டை. கடைகள், உணவகங்கள், பார்கள் போன்ற சிறிய கடைகளை நீங்கள் காணலாம். சிறிய விருந்தினர் இல்லங்கள், ஹோட்டல்கள் உள்ளன. கலங்கரை விளக்கம் வரை நடந்து செல்லுங்கள், நீங்கள் கடலுக்கு நல்ல காட்சிகளைப் பெறுவீர்கள். இது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு உண்மையான நகரமாக இருந்தது, இன்னும் அந்த உணர்வைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

காலி | Galle

நாங்கள் தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலையைப் பிடித்து சல்லென்று இரண்டே மணிநேரத்தில் கொழும்புவை அடைந்தோம். இது காலியிருந்து கொழும்புவிற்குச் செல்வதற்கான மிக வேகமான வழியாகும். அம்பாந்தோட்டை, மத்தாரா, காலி நகரங்களை கொழும்புவுடன் இணைக்கிறது.

தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலை | E01 expressway

நெடுஞ்சாலையிலிருந்து கொழும்புவிற்கு வெளியில் உள்ள பத்திரமுல்லை நகருக்குச் சென்று சேர்ந்தோம். என் அம்மா அங்கு ஒரு பல்பொருள் அங்காடியில் நியாபகார்த்தமாக, சிரட்டை (கொட்டாச்சி)யில் செய்த கொள்கலன் ஒன்றை வாங்கினார்.

கொழும்பு | Colombo

பிறகு மதிய உணவிற்காக கொழும்புவின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே பகுதியில் உள்ள மில்லேனியம் உணவகத்திற்குச் சென்றோம். பின் மதிய வேளை ஆகி இருந்தது. உணவு சிறப்பாக இருந்தது. இலங்கைப் பயணத்தில் நாங்கள் எடுத்துக்கொண்ட சுவையான தென் இந்திய உணவு. நல்லா இருக்கிறதே. இன்னொரு தோசை கொடுங்கள் என்று நாங்கள் கேட்ட பொழுது சமைப்பவர் இல்லை. வேலை முடிந்துவிட்டது என்று வெளியே போய்விட்டார். காலியிலிருந்து சோதனை மேல் சோதனை.

கொழும்பு | Colombo

உணவிற்குப் பிறகு கொழும்பு நகரைச் சுற்றி அலைந்தோம்.

கொழும்பு | Colombo
கொழும்பு | Colombo

அதற்கு பின் கங்காராமய புத்த விகாரைக்குச் சென்றோம். அது எனக்கு பிடித்த கோவில். அங்கு எல்லாம் சுத்தமாக இருந்தது. அங்கு இருக்கும் தலைமை பிக்குவிற்க்கு உடல் நலம் சரியாக இருந்த காரணத்தால் அவர் சிங்கப்பூர் வந்தார் என்று துஷாரா கூறினார்.

கங்காராமய விகாரை, கொழும்பு | Gangaramaya vihara, Colombo

இந்த கோவிலில் தான் புத்தரின் தலை முடியை பாதுகாத்து வருகிறார்கள். இந்த கோவிலில் பழைய பொருட்களை போக்கிஷமாக பாதுகாத்து வருிறார்கள். இந்த கோவிலின் கீழே பழைய வண்டிகள் (Cars), குதிரை வண்டி மற்றும் பல பழங்கால ஊர்திகளைப் பாதுகாத்து வருகிறார்கள்.

கங்காராமய விகாரை, கொழும்பு | Gangaramaya vihara, Colombo
கங்காராமய விகாரை, கொழும்பு | Gangaramaya vihara, Colombo
கங்காராமய விகாரை, கொழும்பு | Gangaramaya vihara, Colombo
கங்காராமய விகாரை, கொழும்பு | Gangaramaya vihara, Colombo
கங்காராமய விகாரை, கொழும்பு | Gangaramaya vihara, Colombo
புத்தரைப் பார்க்கும் யசோதரையும் ராகுலனும் கங்காராமய விகாரை, கொழும்பு | Yasodara, Rahula and and Buddha, Gangaramaya vihara, Colombo

இந்த கோவிலைப் பார்த்து விட்டோம். இப்பொழுது நாம் நம் விடுதிக்கு செல்லலாம். நாம் தங்கிருக்க விடுதியின் பெயர் ரமடா. இதற்க்குப் பக்கத்தில் தான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த செய்தியை என் தந்தை கூறினார். இத்துடன் எங்கள் பயணத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

எனக்கு தூக்கம் தூக்கமாக வந்தது.

அடுத்த வாரம் சந்திப்போம்.

டாடா

-கண்ணன்.
திருவள்ளுவர் ஆண்டு 2051
சார்வரி வருடம், வைகாசி 10, சனிக்கிழமை.

வீரகெட்டிய - மத்தார சாலை

கதிர்காமம் – காலி


வணக்கம்!

யால தேசிய வனத்தை நேற்று மாலையில் சுற்றிப் பார்த்ததால் எனக்கு மிகக் களைப்பாக இருந்தது, என்னை ஒரு பத்து நபர்கள் அடித்து போட்டது போல. இரவு திஸ்ஸமஹாராம வந்து ஓர் இரவு தங்கினோம். ஆனால் பயணங்கள் முடிவதில்லை. நமது இன்றைய பயணத் திட்டம்:

• திஸ்ஸமஹாராமத்தில் இருந்து கதிர்காமம் செல்வது.
• அங்கு இருந்து கடற்கரை நகரமான காலி செல்வது.
• மாலையில் கடலில் விளையாடுவது.

இந்தத் தொடரின் முந்தைய பாகங்கள்

நாங்கள் தங்கியிருந்த விடுதியில் சிறு சிறு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் எதிரெதிராக நான்கு அறைகள் இருந்தன. இது உங்கள் வீட்டை போல வாசல் கதவைக் கொண்டிருந்தது. புகுபதிகை (செக்-இன்) செய்தபின், எங்கள் அறைக்குக் காண்பிக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் பழச்சாருடன் வரவேற்கப் பட்டோம். விடுதியில் ஆட்களே இல்லை.

அங்க ஒரு இரவு தான் தங்கியிருந்தேன், ஆனால் திரும்பி வந்து நீண்ட காலம் தங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்கிறேன். இந்த விடுதி யால தேசிய பூங்கா மற்றும் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு அருகில் உள்ளது. அதில் ஒரு நல்ல நீச்சல் குளமும் இருந்தது. நான் நீந்த வேண்டாம் என்று என் தந்தை சொன்னதால் என்னால் நீந்த முடியவில்லை 😭😭😭.

IMG_2262

எங்களுக்கு காலை உணவு ரொட்டிகள், பழங்கள் மற்றும் தேங்காய் சாம்பலுடன் இடியப்பம். என் தம்பிக்காக வாங்கிய இடியப்பத்தை அவன் வீண் அடித்து விட்டான். பொதுவாக இந்தியர்கள் சிலர் விடுதியில் வழங்கப்படும் இலவச காலை உணவைக் கட்டி எடுத்து செல்வார்கள். வெளிநாடுகளில் அதைச் செய்யாதீர்கள். அதற்கு அனுமதி கிடையாது. நாங்கள் எங்கள் பணியாளரிடம் கேட்ட பொழுது அந்த இடியாப்பத்தை அவர் எங்களுக்குப் பொட்டலமாகக் கட்டித் தந்தார்.

கதிர்காமம்

முந்திய நாள் மாலையில் கதிர்காமம் கோயில் அருகில்தான் உள்ளது என்று என் அப்பா சொன்னார். அதை அடுத்து என் அம்மா கதிர்காமம் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஒத்தை காலில் நின்றார். சுற்றுலா திட்டங்களை யாரும் மாற்ற மாட்டார்கள். நாங்கள் துஷாரவிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவரும் அதைப் பரிசீலித்து, அவருடைய நிறுவனத்துடன் பேசினார். நாங்கள் அதிகப்படியான கட்டணத்தைத் தருவதாகச் சொன்னோம். ஆனாலும், இலவசமாகவே செய்து தருவதாக Blue Lanka Tours நிறுவனம் ஒப்புக் கொண்டது. Thanks to Tushara and Prameela of Blue Lanka Tours.

ella to yala 07

அதனால் திஸ்ஸமஹராம – காலி என்று இருந்த பயணத் திட்டத்தை திஸ்ஸமஹராம – கதிர்காமம் – காலி என்று மாற்றிவிட்டார் என் அம்மா. நாங்கள் கதிர்காமம் சென்றோம். அது ஒரு புனிதமான இடம். இலங்கை முருகன் எங்களை வரச் சொன்னது போல இருந்தது.

பழனி முருகனுக்கு அரோஹரா!
வடபழனி முருகனுக்கு அரோஹரா!
அறுபடை முருகனுக்கு அரோஹரா!
மருதமலை முருகனுக்கு அரோஹரா!

திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோஹரா!
திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா!
ஸ்வாமிமலை முருகனுக்கு அரோஹரா!
திருத்தணி முருகனுக்கு அரோஹரா!

சிங்கப்பூர் முருகனுக்கு அரோஹரா!
பத்துமலை முருகனுக்கு அரோஹரா!
கதிர்காமம் முருகனுக்கு அரோஹரா!
உலகெங்கும் இருக்கும் முருகனுக்கு அரோஹரா!

இந்தியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில் கதிர்காமம். இந்த கோவில் சிறிதளவில் இருந்தாலும் இது ஒரு அழகான மற்றும் பழங்கால கோயில். இந்த ஆலயம் சிறியது, எனவே அதன் கூட்டம் அதிகமாக இருக்கும்போது நீங்கள் சென்றால், கொஞ்சம் காத்திருக்க வேண்டும். நீங்கள் முருகன் சிலையைப் பார்க்க முடியாது. திரை போட்டு மூடி இருப்பார்கள். அதுதான் சாமி. பூசாரி உங்களுக்காக அர்ச்சனைகள் / பூஜைகள் செய்து பிரசாதங்களை பெறுவார். ‘மக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பிரதான தெய்வத்தைக் காண முடியும்’ என்று துஷார சொன்னார்.

கதிர்காமம்
கதிர்காமம்

முருகனை பற்றி பேசிட்டு இருக்கும் போது இந்த பாட்டை பாடலாமே:

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

– அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்

உள்ளுர் புத்த மதத்தின் தாக்கம் இங்கே தெரியும். கதிர்காமம் கோயில் உள்ளேயே புத்தருக்கான ஆலயம் உள்ளது. விஷ்ணுவும் பெருமாளும் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள். கண்டியிலும் இதைக் கண்டோம். (பார்க்க: புத்தர் பற்கோயில் கண்டி). வழிபாடுகளிலும் வித்தியாசம் இருந்தது. முதலில் சந்நிதானத்தைக் கூட்டி சுத்தம் செய்தார்கள். அனைவரும் வெள்ளை அணிந்திருந்தார்கள். தலையில் சிவப்பு நிற முண்டாசு கட்டியிருந்தனர். சாமி அருகில் உள்ளவர்களுக்கு வெள்ளை முண்டாசு. சிவப்பு கம்பளம் விரித்தனர். மணிகள் ஒலித்தன. அன்னக்காவடி போன்று பிரசாதத்தை எடுத்து வந்தார்கள். நமக்குத் தெரியாது. அனைவரும் திரைக்கு அப்பால் சென்றுவிட்டனர். மணி ஓசையைக் கேட்க முடிகிறது. ஆனால் நமக்குப் பார்க்க அனுமதி இல்லை. பக்தர்கள் அனைவரும் மலர், பழம் கொண்டு வந்திருந்தனர். பூசனைக்குப் பிறகு சாம்பார் சாதம் போன்ற பிரசாதம் எங்களுக்கு கிடைத்தது.

கதிர்காமம்
கதிர்காமம் – picture (c) Wikipedia

அம்மா மட்டும்தான் உள்ளே சென்றிருந்தார். புசனை முடிந்து பக்தர்களை உள்ளே விட்டபொழுது நான், எனது அப்பா, என் தம்பி, துஷார அனைவரும் உள்ளே சென்றோம். உள்ளே கூட்டமாக இருந்தது. அங்கே சுவரில் கட்டியிருந்த மணிகளை அனைவரும் அடித்தனர். அதனால் நானும் அடித்தேன். அருகில் இருந்த ஒரு அம்மா என் கையில் நச் என்று அடித்தார். அவர் பிள்ளை என்று நினைத்து, என்னை அடித்துவிட்டார் போல :(. பின்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதனால் என்ன, தாய்களுக்கு மகன்களை அடிக்க உரிமை இல்லையா!

கதிர்காமம் – காலி நெடுஞ்சாலை

நாம் கதிர்காமம் முருகன் அருள் பெற்றுவிட்டோம். இப்பொழுது நாம் காலி (Galle) என்னும் ஒரு நகரத்திற்குச் செல்லப் போகிறோம். 4 மணிநேரப் பயணம். அது இலங்கை கிரிக்கெட் வீரர் தேசாபந்து முத்தையா முரளிதரனின் (Deshabandu Muttiah Muralitharan) சொந்த ஊர். இவர் 800 விக்கெட்டுகளை டெஸ்ட் மாட்ச்சில் பதிவு செய்து பணி ஓய்வு பெற்றார். அத்துடன், சரித்திர முக்கியத்துவம் பெற்ற துறைமுக நகரம் காலி!

கிளம்பலாமா?

IMG_2282

வாருங்கள். புதுக்கோட்டையில் வெளிப்புறச் சாலையில் செல்வது போல ஒரு உணர்வு. நீண்ட பயணம். நீங்கள் இரவு நேரத்தில் அந்தப் பக்கமாகச் சென்றால் நீங்கள் காட்டு விளங்குகளை சாலையைக் கடந்து போவதை நீங்கள் கவனிக்கலாம்! உங்களுக்கும் என்னை போல் காட்டு மிருகங்களை கண்டால் டர்ர்ர் என்றால், நீங்கள் பேசாமல் பகல் நேரத்தில் செல்லலாம் ☹☹. வழியே கசக்கச என்று இருந்தது. நாங்கள் போன பாதையில் சில குளங்கள், முள்காடுகள், வயல்கள் இருந்தன.

அம்பாந்தோட்டை துறைமுகம்

காலிக்கு போகும் வழியில் நாங்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக சென்றோம். அந்தத் துறைமுகத்தைப் பற்றி நானும் என் தந்தையும் நிறைய பேசி இருக்கிறோம். இது ‘இலங்கைக்குள் ஒரு குட்டி சீனா’. ஏன் என்றால் மொத்த முதலீடு US$3,61,00,00,000யில் 85% சீன வங்கியி நிதி உதவி. அதுவுமின்றி இந்த துறைமுகத்தைக் கட்டியது சீன நிறுவனங்கள் மட்டுமே. அம்பாந்தோட்டை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுக்காக இலங்கை சீனாவுடன் 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று படித்திருக்கிறேன். துறைமுகம் முழுக்க சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கையில் எங்கும் காணமுடியாதபடி, இஙகு மட்டும் நான்கு வழிச்சாலை உள்ளது.

அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை

இருந்தாலும் இது ஒரு பெரிய துறைமுகம். பளு தூக்கும் எந்திரங்களை (cranes) நாங்கள் கண்டோம். அதற்குப் பின்னால் விரிந்திருந்த இந்திய பேராழியையும் கண்டேன். இந்த துறைமுகத்தைத் திறந்து வைத்தவர் மஹிந்த ராஜபக்க்ஷ. என் தந்தை அதை கடந்து போகும் போது நிறைய பேசினார். கேட்கமுடியாமல் நான் அப்படியே அவர் மடியில் படுத்து உறங்குவது போல நடித்தேன் 😊.

அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை

அப்படியே கொஞ்ச தூரம் சென்றால் வீரகெட்டிய நகரை அடையலாம். இது மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர். அவருடைய வீட்டையும் காணலாம். அந்த ஊரில் நிறைய D.A ராஜபக்ஷவின் சிலையும் மஹிந்த ராஜபக்ஷவின் சிலையும் அங்கு இருந்தன.

அங்கிருந்து நமது பயணம் இன்னும் அழகாகிறது. இடது பக்கம் பேராழி. வலது பக்கம் கிராமங்கள், காடுகள், ஆறுகள். வளைந்து வளைந்து சென்றது சாலை. இது பழங்கால ரத்தின பூமியாம். பூமியில் இருந்து விலை உயர்ந்த கற்கள் அகழ்ந்து எடுத்தார்களாம்.

IMG_2313

ஒரு நல்ல இடத்தில் இறங்கி, கடற்கரையில் இளைப்பாறிக் கொண்டோம்!

வீரகெட்டிய - மத்தார சாலை
வீரகெட்டிய – மத்தார சாலை

பிறகு மத்தார நகரை அடைந்தோம். கடற்கரையில், இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை எடுத்துக்கொண்டோம். மாலை நேர சாலை நெரிசல் இங்கிருந்து தொடங்கியது.

மத்தார
மத்தார

எப்படியோ இப்பொழுது நாம் காலி வந்து சேர்ந்து விட்டோம். நீங்கள் சற்று நேரம் கடல் கரையில் விளையாடிக் கொண்டு இருங்கள். நான் என் நீச்சல் உடையை அணிந்து வருகிறேன்.

காலி | Galle
காலி | Galle

வாருங்கள். கொஞ்சம் விளையாடி விட்டு விடுதிக்குத் திரும்பிச் செல்லலாம்.

காலி | Galle
காலி | Galle

உப்பு நீர் வேர்க்கிறது. வாயெல்லாம் கரிக்கிறது. என்னால் முடியவில்லை. Darrrrrrrr.. என்ன ஏதோ சத்தம் வருது. அய்யோ! என் நீச்சல் உடை கிழிந்துவிட்டது! நான் ஜட்டி கூட போட வில்லை!! யாரும் பார்ப்பதற்கு முன் நான் விடுதிக்கு போகிறேன்.

விடை பெறுவது,
மு. கண்ணன்
சார்வரி வருடம், வைகாசி 4, திருவள்ளுவர் ஆண்டு 2051

DSC00944

யால தேசிய வனம் | Yala National Park

யால தேசிய வனம்


வணக்கம்

இன்று ஐந்தாம் நாள். எல்லவிலிருந்து நீங்குகிறோம்.

எல்ல

இன்றைய பயணத் திட்டம்:
• யால தேசிய வனத்திற்குச் செல்வது
• வழியில் இராவணா அருவியைப் பார்வையிடுவது
• போகும் வழி எங்கும் உங்களுடன் கதை அடிப்பது

முந்தைய பதிவுகள்

அமைதி மற்றும் பசுமையான நகரம் எல்ல. நம் ஊர் போல் அங்கு மாசு இல்லை. ஒரு இடத்திலிருந்து தூரத்தில் இருக்கும் ஒரு இடத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். அங்கு பெரும்பாலான மக்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்க்க முடியவில்லை. அங்கு சிறிய தூரம் செல்ல அவர்கள் மிதி வண்டி உபயோகப் படுத்துகிறார்கள்.

எல்ல

எல்லவில் இருந்து கிளம்புவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. எங்கள் பணியாளர் அதிகாரி இலங்கை மீண்டும் வந்தால், அந்த விடுதியில் தான் தங்க வேண்டும் என்றார். நாம் கிளம்புவதற்கு முன் நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.

நாங்கள் நேற்று போல உண்டோம். (ஆனால் அந்த இட்லி என்னும் கல்லை மட்டும் சாப்பிட வில்லை 😊😊)

உண்டு முடித்தோம். சரி, வாருங்கள் யால தேசிய வனத்திற்குக் கிளம்பலாம்!

இப்பொழுது நாம் எல்லவிலிருந்து நாம் வெளி நகரம் வந்து விட்டோம். இந்த பாதையில் வருவது மிக நன்றாக இருக்கிறது. எல்ல மலை பிரதேசத்திலிருந்து அரை மணி நேரத்தில் கீழே வந்துவிட்டோம். ‘வரும்வழியில் பனிமலையில்’ ராவணா நீர்வீழ்ச்சியை கண்டோம்.

இராவணா அருவி
இராவணா அருவி

உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர். ஆபத்தான வழுக்கும் பாறைகள். இந்த அருவி நிறைய பேரைப் பலிகொண்டதாக துஷார கூறினார். நீர் ஜில்லென்று இருந்தது. அருவிப் பக்கம் போகக்கூடாது என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள். அருவியின் பிரம்மாண்டமான காட்சியைக் கண்டு, புகைப்படம் எடுத்துவிட்டு, நீரில் விளையாடி  பின்னர், கிடைத்த நீரை எடுத்து தலையில் தெளித்துவிட்டு, கிளம்பிவிட்டோம்.

நாங்கள் மலையில் இறங்கிய பிறகு வெல்லவாய என்ற ஊரைக் கடந்தோம். அன்று புத்த மதத்தினருக்கு ஏதோ சிறப்பான நாளாம். அங்கு நிறைய மக்கள் திரண்டு இருந்தனர். அங்கே சிறுவயது புத்த துறவிகளைக் கண்டோம். அவர்கள் ஊருக்குள் சென்று மடத்தில் அன்னம் பெற்றுக் கொண்டு இருந்தார்கள்.

வெல்லவாய
வெல்லவாய

அவர்களைக் கடவுளாகப் பாவித்து உணவு மற்றும் பழங்களைக் கொடுத்தார்கள். துஷார ‘அந்த சிறுவயது புத்தர் பிக்குகள் புத்தர் மடாலயத்தில் இருக்கும் வயதான பிக்குகளுக்காக உணவு எடுத்து செல்வர்’ என்று கூறினார்.

நீண்ட பயணம்
நீண்ட பயணம்

நீண்ட பயணத்திற்குப் பிறகு திஸ்ஸமஹாராம சென்றடைந்தோம். வரும் வழியில் சீனப் புகழ்பெற்ற அம்பாந்தோட்டை வானூர்தி நிலையம் பற்றிய மைல் கற்களைப் பார்த்தோம்.

ella to yala 02
நீண்ட பயணம்

கதிர்காமம் கோயில் 18 கிமி என்று ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தோம். அது என் அம்மா கண்களை உறுத்தி இருக்க வேண்டும். ஏன் என்று அப்புறம் சொல்கிறேன்.

ella to yala 07

ஓரிடத்தில் இயற்கை அழைப்பிற்காக வண்டியை நிறுத்தினோம். அங்கே குண்டுமணிகளைப் பார்த்தோம். என் தம்பியின் பள்ளி வளாகத்தில் கூட இருந்தது.  எங்கள் வீட்டுக் கொள்ளையிலும் முன்னர் இருந்தது என்று என் தந்தை கூறினார். அதில் கொஞ்சம் பிடுங்கி பையில் போட்டுக்கொண்டோம். அழகான நஞ்சு மணி!

ella to yala 05

திஸ்ஸமஹாராம நகரில் மதிய உணவிற்கு ஒரு சுற்றுலா உணவகத்திற்குச் சென்றோம். இந்த உணவகத்தில் நாங்கள் வயிறு நிறைய உண்டோம்! நானும் அம்மாவும் சப்பாத்தி கேட்டோம். என் அப்பா உள்ளுர் rice & curry கேட்டார். கடைசியில் மாற்றிச் சாப்பிட வேண்டி ஆகிவிட்டது.

yala 01

நாங்கள் இலங்கையில் சாப்பிட்டதிலேயே அதிக விலை உயர்வான சாப்பாடு அது. கொழும்பு நட்சத்திர ஓட்டல் உணவகத்தைக் காட்டிலும் அதிகம்! பர்சு பழுத்துவிட்டது.

நாங்கள் உண்ட பின் யால தேசிய வனத்திற்க்குச் சென்றோம்.

யால தேசிய வனம் | Yala National Park
யால தேசிய வனம் | Yala National Park

யாலா தேசிய பூங்கா அமைதியாக இருந்தது. நாங்கள் வந்த வண்டியை உணவத்தியே நிறுத்திவிட்டு, ஒரு தனியார் ஜீப்பை எடுத்துக்கொண்டு, அந்த நாளின் மீதியை வனத்தில் கழித்தோம்.

yala national park 01
யால தேசிய வனம் | Yala National Park

யானைகள், முதலைகள், பறவைகள் போன்றவற்றை நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பார்த்தோம்.

யால தேசிய வனம் | Yala National Park
காட்டுப் பன்றியும் முதலையும், யால தேசிய வனம் | Yala National Park

சிறுத்தையைப் பார்த்துவிட்டு சோம்பல் முறிப்பது எனது முக்கிய இலக்கு :D.

yala national park 03
யால தேசிய வனம் | Yala National Park

நீங்கள் சீக்கரமாகவே விலங்குகளுடன் சூழப்படுவீர்கள். நீங்கள் சிறுத்தையைப் பார்க்காத வரை அந்த வனம் அழகாக இருக்கும். பார்த்துவிட்டால்….

yala national park 04
யால தேசிய வனம் | Yala National Park

வரண்டு போன வனம் இது. முள் காடு. கண்டியிலிருந்து, எல்ல வரை ஜில்லென்று இருந்த பிறகு, அதற்குத் தலைகீழான தட்பவெப்பம். வியர்த்துக் கொண்டியது. வெயில் உரைத்தது. புழுதி பறந்தது. கணேசர் தரிசனம் கிடைத்தது 🐘🐘🐘.

யால தேசிய வனம் | Yala National Park
யால தேசிய வனம் | Yala National Park

நாங்கள் பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பும் போது பொழுது சாய்ந்துவிட்டது. இரவு உணவிற்காக தயிர், வாழைப் பழங்கள் வாங்கிக் கொண்டு எங்கள் விடுதிக்கு சென்றோம். எங்கள் இராத்திரி உணவிற்காக வெந்த சோறு மட்டும் வாங்கிக் கொண்டோம். இலங்கைத் தயிர் ஊற்றி நீங்கள் அவசியம் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு முடித்த பின் உங்கள் கையில் வெண்ணெய் பிசுபிசுக்கும். மிக நல்ல உணவு 😋😋😋. ரூஸியோ தனி!

அடுத்த வாரம் பார்க்கலாம்.

yala national park 05