முழுக்க முழுக்க சிலைகள் மற்றும் அலங்காரங்கள் நிறைந்த குகைகளை இதற்கு முந்தைய பதிவுகள் காண்பித்தன.
பயணத்திற்கு முத்தாய்ப்பாக இறுதி நாளில் அமைந்தது அஜந்தா பயணம். ஊருக்குள் போவதற்கு முன்னாடி ஒரு அறிமுகம் கொடுத்தாகவேண்டும். உங்களை மாதிரி ஒரு பெரியவர் சொல்லி நான் கேட்ட அறிமுகம் இது. பழங்கால இந்திய ஓவியங்கள் என்று பார்த்தோமானால் நமக்கு பெரிய சான்றுகள் கிடையாது. இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் 5 ஆம் நூற்றாண்டு, சித்தன்னவாசல் ஓவியம் 7ஆம் நூற்றாண்டு, காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலய ஓவியங்கள் 7ஆம் நூற்றாண்டு. எல்லாவற்றுக்கும் முன்னதாக – அதாவது – கிமு 2 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 6, 7 ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியங்கள், இந்திய ஓவியக்கலைக்கு சான்றாக அஜந்தாவில் கிடைத்துள்ளன.
அஜந்தா நம் கண்களுக்குப் புலப்பட்ட விதம் விந்தையானது. காட்டுக்கு வேட்டையாடப்போன ஒரு வெள்ளைக்கார துரை ஜான் ஸ்மித் கண்களுக்கு புலி தெரியவில்லை, மாறாக ஒளி தெரிந்திருக்கிறது. அடர்ந்த காட்டுக்கு நடுவே, அரை வட்ட வடிவில் சலசலத்து ஓடும் நதியின் கரையில் துயில் கொள்ளும் புத்தரின் ஒளியாக இருந்திருக்கவேண்டும். பிறகு இந்தக் கலைப்பொக்கிஷம் நாட்டுடமையாக்கப்பட்டு, ஆய்வுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்திருக்கிறது.
From Ajanta |
சாதவாகனர்கள் காலத்திலும் (கிமு 2) வாகாடகர்கள் காலத்திலும் (கி பி 6, 7) இங்கு குகைகள் குடையப்பட்டுள்ளன. அனைத்தும் புத்த மடாலயங்கள். அவற்றின் பக்கவாட்டு சுவர்கள், விதானங்கள் தூண்கள் என்று எங்கு தொட்டாலும் வர்ணமயம். புத்த ஜாதகக் கதைகள் ஓவியங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. ஜாதகக் கதைகளும் தெரிந்து, தொல்பொருள் ஆர்வமும் மிக்கவரா நீங்கள். சொல்றேன் கேட்டுக்கோங்க! அஜந்தாவை ஒரு நாளில் உங்களால் சுற்றிப்பார்க்க இயலாது.
அஜந்தா பயணம் தொடங்குகிறது, அவுரங்காபாத் ஜல்காவ் இந்தூர் நெடுஞ்சாலை. இங்கிருந்து தோராயமாக 100 கிமீ. From Ajanta |
மலைகள் பள்ளத்தாக்குகள் அவற்றை கோந்து போட்டு ஒட்டுவது மாதிரி ஓடி வரும் சிற்றாறுகள் From Ajanta |
ஜாதகக் கதைகள் என்றாலும், வரையப்பட்டுள்ள ஆடை அணிகலன்கள், இசைக் கருவிகள், பறவைகள் என்று பல சங்கதிகள் ஆய்வாளர்களுக்குத் தீனிபோட்டுக்கொண்டே இருக்கின்றன. அஜந்தா ஓவிய காலத்திற்கும் சம காலத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆய்வாளர்கள் வியப்புடன் சொல்கின்றனர்.
முதல் இரண்டு குகைகளிலேயே, உங்கள் எண்ணத்தை நிறைக்கும் ஓவியங்கள் அள்ள அள்ளக் குறையாமல் வந்து விடும். வந்து நிற்பது பிட்சுக்கள் பூமி. அவர்கள் அழிந்தாலும், அவர்களின் ஆன்மாக்கள் உறைந்துள்ள ஒரு அமானுட சாட்சியம் அந்த குகைகளும், சிற்பங்களும் ஓவியங்களும்.
முதல் தரிசனம், அதாங்க குகை 1 From Ajanta |
பத்மபாணி (கருவரைக்கு இடப்பக்கம்) From Ajanta |
பத்மபாணி, கருவரை, வஜ்ரபாணி From Ajanta |
கண்களுக்கு விருந்தாக குகை 2 From Ajanta |
Miracle of Sravasti கண்களுக்கு விருந்தாக குகை 2 From Ajanta |
கண்களுக்கு விருந்தாக குகை 6 From Ajanta |
ஓங்கி வளர்ந்த ஆலமரம் போல, பெரிய சைத்திய வடிவ குகைகளை இங்கு காணலாம். கிமு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் ஒன்றான பத்தாம் எண் குகைதான் வெள்ளைக்காரர் கண்களுக்குத் தென்பட்டிருக்கிறது.
கண்களுக்கு விருந்தாக குகை 9. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சைத்திய வடிவ குகை From Ajanta |
கண்களுக்கு விருந்தாக குகை 9. மனிதனின் தினசரி வாழ்க்கையை சித்திரிக்கும் சிற்பங்கள் இருக்கின்றன From Ajanta |
அனேகமாக அஜந்தா குகைகளில் பழமையானது இந்த 10ஆம் எண் குகைதான். இதன் பெரிய வடிவம்தான் எட்டி நின்று பார்த்த ஆங்கிலேயருக்கு அஜந்தாவை அடையாளம் காட்டியுள்ளது. இவ்வளவு சிறப்பு இருந்தாலும் இன்னொரு முக்கிய விஷயம், இந்தியாவின் மிகப் பழமையான ஓவியம் (கிமு 2) இங்கேதான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறது From Ajanta |
அந்த கிமு காலத்திய குகைகளின் ஓவியங்களைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படவே செய்யும். பிறகென்ன, அவ்வளவு தத்ரூபமாக, மிகச் சரியான அளவுகளில் முகம், பாவனை, நகை நட்டுகள்!! யாருப்பா நீங்க எல்லாம். அந்தக் காலத்திலேயே அவ்வளவு அறிவாளிகள் வாழ்ந்த மண்ணா இது!!
கிமு 2ஆம் நூற்றாண்டு ஓவியம். அதற்காக ஏனோதானோ என்று இருக்கும் என்று நினைக்கவேண்டாம். நேர்த்தியாக உள்ளது. ஹீனயான காலத்தைச் சேர்ந்த அந்த ஓவியங்களில் காணப்படும் ஆடை அணிகலன்கள், நம்மை ஆச்சிரியப்படுத்தும் வகையில் உள்ளன. பெண்பிள்ளைகளுக்கு மிகவும் ஆர்வமான ஓவியங்களாக இருக்கும்! பல ஓவியங்களில் உள்ள உருவங்களை அவற்றின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தே அடையாளம் காண முடிந்தது From Ajanta |
கிமு 2ஆம் நூற்றாண்டு ஓவியம். அதற்காக ஏனோதானோ என்று இருக்கும் என்று நினைக்கவேண்டாம். நேர்த்தியாக உள்ளது. ஹீனயான காலத்தைச் சேர்ந்த அந்த ஓவியங்களில் காணப்படும் ஆடை அணிகலன்கள், நம்மை ஆச்சிரியப்படுத்தும் வகையில் உள்ளன. பெண்பிள்ளைகளுக்கு மிகவும் ஆர்வமான ஓவியங்களாக இருக்கும்! பல ஓவியங்களில் உள்ள உருவங்களை அவற்றின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தே அடையாளம் காண முடிந்தது From Ajanta |
குகை 10 From Ajanta |
Dying princess, cave 16 From Ajanta |
யானைக் கதை குகை 17 From Ajanta |
மேகக்கூட்டத்தில் பறந்து வரும் இந்திரன், குகை 1 From Ajanta |
பானம் அருந்தும் தம்பதியர், குகை 17 From Ajanta |
கண்களுக்கு விருந்தாக, குகை 17, இப்ப சொல்லுங்க என்ன மாதிரியான இடம் இது. பிரம்மாண்டமான உயரத்தில் ஓரிடம் பாக்கியிலல்லாமல் சுவர், விதானம் என்று அனைத்து இடங்களிலும் ஓவியத்தால் நிரப்பிவைத்துள்ளது மட்டுமின்றி, ஜாதகக்கதைகளையும் விளக்கியிருக்கிறார்கள் From Ajanta |
ஓவியத்திறமையுடன் சிற்பத்திறமையையும் இங்கே காணமுடியும். அலங்கார வளைவுகள் என்ன, அதன் அலங்காரங்கள் என்ன, அதில் உள்ள சிற்பங்களின் நேர்த்தி என்ன…
குகை 19, பிற்கால மகாயான காலத்தைச் சேர்ந்த இந்த சைத்திய குகை மிக அழகான நேர்த்தியான சிற்பங்களையும், கல் அலங்கார வேலைப்பாடுகளையும் உள்ளடக்கியது From Ajanta |
கண்களுக்கு விருந்தாக குகை 19 From Ajanta |
சரியா சொல்லுங்க. மேல உள்ள டிசைன் நல்லா இருக்கா, கீழ உள்ள டிசைன் நலலா இருக்கா. குகை 23 From Ajanta |
மஹாபரிநிர்வாண்!
குகை 26, அஜந்தா பயணத்தின் கடைசி அத்தியாயம் இந்த சிறப்பான குகையோடு முடிகிறது. வெளி அலங்காரம் மற்றுமின்றி, உள்ளே உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் உங்கள் நேரத்தைத் தின்பது நிச்சயம் From Ajanta |
இந்த குகை உங்கள் தேடலின் முடிவு, உள்ளத்தின் எழுச்சி.
வலது ஓரத்தில் ஒரு மனிதர் நிற்கிறார், குகையின் உயரத்தை அனுமானித்துக்கொள்ள உதவும் From Ajanta |
இந்த வடிவத்தை புத்தரின் மார்பு எலும்புகளுக்கு உருவகப்படுத்துகிறார்கள் From Ajanta |
புத்தருக்கு இடையூறு செய்ய ஆளா இல்லை?! மாரா இருக்கிறான். முதல் குகையில் ஓவியமாக வந்து தொந்தரவு செய்தவன், இந்த குகையில் சிற்பமாக அதே வேலையைச் செய்கிறான்.
புத்தரும் மாராவும். முதல் குகையில் உள்ள ஓவியம் இங்கே சிற்பமாக உள்ளது From Ajanta |
யானையில் ஏறி தன் தீய சக்திகளுடன் வந்து புத்தரைத் தாக்கவரம் மாரா From Ajanta |
மாராவின் புதல்விகள் புத்தரின் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள் From Ajanta |
பெரிய சிற்பமாக இருந்தாலும் அதில் ஒள்ள ஒவ்வொரு சிறு சிறு சிற்பங்களும் மிக தத்ரூபமாக செதுக்கியிருக்கிறார்கள் From Ajanta |
என்னால் ஏன் புத்தனாக முடியவில்லை என்பதற்ககான பதில் விளங்கியது. இந்த கல் வடிவிலான மாராவின் மகளே என் மனதைக் கவர்ந்துவிட்டாளே! பிறகெங்கே தவம் பயில்வது!
மாராவின் மகள். என்ன ஒரு அசைவு. Dynamism! From Ajanta |
என் தலைவன்… கூடவே இருந்தான்.. கூடவே நடந்தான்.. கூடவே உணவு உண்டான்.. கதைகச் சொன்னான். அற்புதங்கள் நிகழ்த்தினான். எதிர்த்த தீய சக்திகளை வென்றான். கடை சாரி மக்கள் துயர் தீர்த்தான். இதோ என்னை நீங்குகிறான். பிட்சுக்களின் வாழ்வில் நிறைந்தவன். தன் பணி துறந்து உறங்குகிறான்.
மகாபரிநிர்வானம் குகை 26 From Ajanta |
மகாபரிநிர்வானம் குகை 26 From Ajanta |
உலகம் உய்க்க வந்தாயே சித்தார்த்தனே, இவ்வுலகம் திருந்தும் முன்னர் நீ அவ்வுலகம் திரும்பியதேன்?