கொடும்பாளூர் – ஒரு கோடை மழைப் பயணம்


வேண்டுக, வந்தாகவேண்டும்.
விழைக, பொழிந்தாகவேண்டும்.
அறம்நின்று ஆணையிடுக, அமுதாகிச் சுரந்தாகவேண்டும். நீர் ஒரு வாக்குறுதி. ஒரு கருணை. ஒரு பேரருள். நீரென்றாகியது பருவெளியின் கனிவு. கற்பாறைகளும் கடுமண்ணும் அளிகொண்டல்லவா நீர்மையென்றாகின்றன?
– கிராதம்

வருணனைப் பற்றிய ஜெயமோகனின் வர்ணனைகள் இவை. தகிக்கும் கோடையில், எங்கள் விழைவிற்கு வருணன் இசைந்தது போலப் பெய்த கோடை மழையின் ஊடே மோட்டார் பைக்கில் சுற்றித் திரிந்த கதை இது. கண்ணனை எழுதச் சொன்னேன். புல்வயல், குடுமியான்மலை அன்று பார்த்தது போல இன்றும் அப்படியேதான் இருக்கிறது.

கொடும்பாளூரின் தற்கால தோற்றம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நேர்த்தியாக தோட்டமிட்டுள்ளார்கள். கல் தளம் வைத்து பாதை வைத்துள்ளார்கள். புல்வெளி பார்ப்பதற்கு மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது. தொல்லியல் துறையின் புத்தக வெளியீடுகள் விற்பனைக்கு உள்ளன. (நுழைவுக் கட்டணம் 15 ரூபாய்).

map

மூவர் கோயிலில், ‘சுந்தர சோழனின் சிற்றரசனான இருக்குவேள் அரசன் பூதி விக்கிரம கேசரி கட்டியது’ என்று தொல்லியல் துறையின் பலகையில் வாசித்த உடன் சஞ்சய், ‘சுந்தர சோழன் ராஜராஜனின் அப்பா’ என்று பதிலளித்தான். ஒரு வரி பதில்தான் என்றாலும் எங்களுக்கு ஒரு காலக்கோடு கண் முன்னே வந்து நின்றது. அதாவது, ராஜ ராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலைக் காட்டிலும் காலத்தால் முந்தையது.

நகரம் முழுதாய் அழிந்து, அமைதியாய் இங்கே உறங்கிக் கொண்டுள்ளது.

இனி கண்ணன் எழுதியது

எங்களுக்கு ஒரு நல்ல பயணம் அமைந்தது. நாங்கள் மொத்தமாக 4 இடங்களைப் பார்த்தோம்.

  • பழங்கால சிவன் கோயில், புல்வயல்
  • நாயக்கர் கால சிவன் கோயில், குடுமியான்மலை
  • மூவர் கோயில், கொடும்பாளூர்
  • ஐவர் கோயில், கொடும்பாளூர்

பழங்கால சிவன் கோயில், புல்வயல்

சிவன் கோயில் புல்வயல். Photo (c) http://www.panoramio.com/user/6254896
சிவன் கோயில் புல்வயல். Photo (c) http://www.panoramio.com/user/6254896

பாதி இடிந்து போய்விட்டது. முக்கியமாக கோபுரம் இடிந்து இருந்தது. அங்கே ஒரு பெரிய சிவன் கோயிலும் அதைச் சுற்றிச் சிறிய பரிவாரக் கோயில்களும் இருந்தன. இந்தக் கோயிலை யாரும் தற்போது வழிபடுவதில்லை.

நாயக்கர் கால சிவன் கோயில், குடுமியான்மலை

மலை மடிப்பில் செதுக்கப்பட்டுள்ள நாயன்மார்களின் புடைப்புச் சிற்பம்
மலை மடிப்பில் செதுக்கப்பட்டுள்ள நாயன்மார்களின் புடைப்புச் சிற்பம் Pic (c) pudukkottai.org

நாங்கள் சிவன் நரசிம்மர் இன்னும் பல சிற்பங்கள் பார்த்தோம். அங்கே ஒரு மலை இருந்தது. மலையில் 63 நாயன்மார்கள் சிற்பங்கள் சிவன் பார்வைதி இருந்தன.

மூவர் கோயில், கொடும்பாளூர்

Photo0196
மூவர் கோயில் கொடும்பாளூர்

அங்கு மூன்று கோயில்கள் இருந்தன. ஆனால் ஒரு கோயில் இடிந்து இருந்தது. அங்கே ஒரு அழகான தோட்டமட் இருந்தது.

Photo0191
மூவர் கோயில் வளாகத்தில் பெய்த மழை, அதன் பாதையில் ஓடி, படிக்கிணறுக்குள் இறங்குகிறது. வறண்ட பூமியில் நிறைந்திருந்த கிணறு.
Photo0193
படிக்கிணறு களிப்பு
Photo0195
படிக்கிணறு களிப்பு
Photo0198
மூவர் கோயில் – புல்வெளித் தோட்டத்திற்கான பாதை.

ஐவர் கோயில், கொடும்பாளூர்

ஐவர் கோயிலில் ஐந்து கோயில்கள் இருந்தன (ஒரே தளத்தில்). ஆனால் எல்லாம் இடிந்து உள்ளன.

ஐவர் கோயில் வளாகம். Massive structure ஆக இருந்திருக்க வேண்டும். சுத்தமாக அழிந்து புதைந்துள்ளது.
மழைக் கருக்கலில் ஐவர் கோயில் வளாகம். Massive structure ஆக இருந்திருக்க வேண்டும். சுத்தமாக அழிந்து புதைந்துள்ளது.

அழகிய பள்ளி


நண்பர்களே,

பசங்களுக்கு கோடை விடுப்பு விட்டாச்சு. அவர்களுக்கு வீட்டில் இருப்பதென்றால் வேப்பங்காயாய் கசக்கிறது. ஏதாவது ஒரு கேசை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக அலசும் சிபிஐ போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கழட்டிப்போட்ட 3 கால் சைக்கிளாக இருக்கலாம், ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கணினியின் கீபோர்டாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த பரபரப்புச் சூழலுக்கு இடையே ஊருக்குச் சென்று குலதெய்வத்துக்கு ஒரு சல்யூட்டை வைத்திட்டு வந்திடலாம் என்று இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டோம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ஒரு தொலைதூர கிராமம் (ரிமோட்டு வில்லேஜு)தான் இந்தப் பதிவில் பேசப்படுகிறது. அங்கே சமீப வருடங்களில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்கிற காலம் மாறி, கோவில் வாசல் வரை இந்த வருடம் சாலை வசதி வந்திருக்கிறது. கோயில்களுக்கு அருகிலேயே தண்ணீர் வசதி இத்யாதிகள்.

வழக்கம்போல சாப்பாடு கட்டிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம். சாப்பிட ஒரு சரியான இடம் கிடைக்கவேண்டுமே. சிறு வயதில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு ஒரு நெடும் பயணமாக வந்து சேர்ந்தோம். வழியில் நீர் கிடைக்கும் குளம் மற்றும் ஊருணிகளில் சாப்பாட்டை முடித்துக்கொள்வது வாடிக்கை. இப்போதைக்கு அவை எல்லாம் இதமான நினைவுகளாகத் தேங்கி நிற்கின்றன. இப்ப மகிழுந்துகளில் 1 மணி நேரத்தில் சென்று சேர்ந்துவிட முடிகிறது. எனவே இப்ப ஊருக்குள் ஒரு நல்ல இடம் பார்த்து சாப்பிட வேண்டும் அல்லவா. அந்த இடத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.

அந்த ஊருக்கான அரசினர் தொடக்கப்பள்ளி கட்டிடம் அது. சென்ற முறையும் இங்குதான் சாப்பாடு ஆனது. சிறிய பள்ளி என்றாலும் மிகச் சிறப்பான வசதிகள் அங்கே உண்டு.

குடிநீர்,

கழிவறை,

பள்ளி முழுக்க மரங்கள்,

சுத்தம்

இவை அனைத்தும் சேர்ந்து அந்த இடத்தை ஒரு மினி பாலைவனச் சோலையாக மாற்றிவிட்டது.

இது தானே நிகழாது. ஒரு பொறுப்பும், ஆர்வமும் நிறைந்த ஆசிரியராக இருக்கலாம், மாணவர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அந்தப் பள்ளியில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு

காபி - 18 ரூபாய்
காபி – 18 ரூபாய்

சென்னையிலிருந்து புதுகை செல்லும் வழியில், தங்கமணியின் விருப்பப்படி அதிகாலையில் திருச்சியில் காப்பி!! பில்லைப் பார்த்ததும் திடீல் என்று பிண்ணனியோசை கேட்டது. 18 ரூபாய்/காபி! நாட்டு நிலைமை அறிந்து கொள்ள அப்பப்ப உணவகங்களுக்குச் சென்று வரவேண்டும்.

உயிர் வேலி. இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியது இவை நடப்பட்டபோது நட்டவர்களின் எதிர்பார்ப்பையும் மனநிலையையும்தான்.
உயிர் வேலி. இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியது இவை நடப்பட்டபோது நட்டவர்களின் எதிர்பார்ப்பையும் மனநிலையையும்தான்.

கோடைகாலத்திற்கு நிழல் தரவேண்டும் என்பதற்காக புங்கை மரங்களை நட்டுள்ளார்கள் என்றார் சகோதரர்.

அவற்றைப் பாதுகாக்கவும், தண்ணீர் விட்டுக் காபந்து செய்யவும் ஆசிரியர்களும், மாணவர்களும் கவனம் எடுத்திருப்பார்கள். அவர்கள் முழு கவனம்தான் அந்த அழகிய நிழலையும் இனிமையான காற்றையும் தந்திருக்கிறது
அவற்றைப் பாதுகாக்கவும், தண்ணீர் விட்டுக் காபந்து செய்யவும் ஆசிரியர்களும், மாணவர்களும் கவனம் எடுத்திருப்பார்கள். அவர்கள் முழு கவனம்தான் அந்த அழகிய நிழலையும் இனிமையான காற்றையும் தந்திருக்கிறது

சுற்றிலும் வயல்வெளி இருந்தாலும் ஏனைய இடங்களில் அனல் பறக்கிறது. அந்த அனல் காற்றின் சீற்றத்தைத் தடுத்து இதமான தென்றலைத் தரும் இந்த மரங்களை வைத்தவர்களை எத்தணை பாராட்டினாலும் தகும்

பாம்பின் கால் பாம்பறியும். அதுமட்டுமல்ல, ஆசிரியரின் கால் ஆசிரியர் அறிவார் - என் சகோதரர்
பாம்பின் கால் பாம்பறியும். அதுமட்டுமல்ல, ஆசிரியரின் கால் ஆசிரியர் அறிவார் – என் சகோதரர்

முதலில் இந்த மர நிழலில் அமர்ந்து சாப்பிடத்தான் விரும்பினோம். துரதிருஷ்ட வசமாக மரங்களின்மேல் முசுடு ஊர்ந்து கொண்டிருக்க, அது ஏற்கனவே சுட்டிகளைத் தாக்கத் தொடங்கியிருக்க வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டோம்.

மைதானத்தின் சுத்தத்தையும், இந்த மரங்களை வைத்தவர்களையும் சிலாகித்துப் பேசினார் என் சகோதரர். அவரும் அரசுப் பள்ளியில் ஆசிரியரே. உண்டு முடித்ததும் இலைகளைத் தூரச்சென்று போடவேண்டும் என்று இடத்தின் சுத்தம் காத்தவர். “ஏம்பா.. அவ்ளோ நல்லவனா நீ!!”

சுட்டிகள்
சுட்டிகள்
சுட்டிகள்
சுட்டிகள்

பள்ளிக்கு விடுப்பு, விடுப்பில் பயணம், பயணத்தில் ஒரு காலைச்சாப்பாடு, சாப்பாடு முடிந்தவுடன் வரும் புத்துணர்ச்சியில் சுட்டி சகோதரர்கள்.

பள்ளியின் பின்புறம்
பள்ளியின் பின்புறம்
பள்ளியின் இடது புறம்
பள்ளியின் இடது புறம்
பள்ளியின் பின்புறம்
பள்ளியின் பின்புறம்

பள்ளியின் முன்புறம் மட்டுமல்ல. பின்புறமும், இன்னும் இடமிருக்கும் இடங்களில் எல்லாம் அழகான மர நிழல் காணப்படுகிறது.

வாழை, அலங்கார வாழை, தென்னை, வேம்பு. இவை எல்லாம் இருக்க நிழல் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

Weekend trip to Vedanthangal bird sanctuary


This was a quick decision on day before yesterday. Vedanthangal bird sanctuary is 80 kilometers away from Chennai, 27 kilometers away from chengalpattu. I collected information about transportation and food from my colleague. Finally, we had a packed breakfast and started from chennai at 7-15AM.

I dint think or this irritating traffic on GST. The traffic is on its worst condition on upward and downward journeys.

But chilled wind and warm sunlight made the trip as pleasant one. 7:45 tambaram and 8:30 at Chengalpattu. So it is well and safely driven trip, I can say. After Chengalpattu, we felt shivering. So coldddd.. Earlier we planned for a early morning trip, which was suppose to start by 4:00 am, it is good, we didn’t do that.

After chengalpattu, next 12 kilometers went as enjoyable as it can. Beautiful sunlight, chilled wind, less vehicles except few sand trailers. We took a very quick break at Padalam X road.

20130203-115630.jpg

Read More »

Baby’s day out – An early morning weekend trip to Mahabalipuram


We (my wife & I) decided yesterday about a short weekend trip. After getting my new Yamaha SZ R, we didn’t have a longer ride. My first choice was Siruvapuri – one hamlet on Chennai – Calcutta Highway, but our option changed to Mamallapuram because of the scenic highway. Ofcourse, this is first time for my son to come along with me for a ride.

We got up after 4-15 AM, Started from our home, After 2 minutes we reached the Mount Road.
The Journey continued in Old Mahabalipuram Road/IT Corridor. We could see the my cyclists with blinking head wears passing through out our journey.

The light is very poor in Navalur, Since street lights are off. I could see how poor, the headlight of SZ series is! One of the huge drawback of this model. After Kelambakkam, we took the left to reach ECR near Covelong beach. These are the pics I’ve taken earlier. I could feel the chill wind and insects falling and committing suicide in my helmet. Poor Bees.

We have reached Covelong, I preferred to go to the beach for sunrise, Still it is only quarter to six – But my wife preferred to ride along. Yes, that could be the best option to have the sunrise on the go.

We stopped our ride on the way for a nice photoshoot! Really we enjoyed this, Grassfield is full of water drops, wind with good amount of humidity, a free and nice looking highway beside my bike. What else you need?!

I didn’t go above 50 or 55 – because we three travelled together, also it may be too early to go 60+ on my new horse. But I still remember, I was at my best on this road. 109KMPH in Gladiator 125 earlier. But this time…,mhmm… family man boss Ofcourse, it is a good feeling to write both the experiences on BCMTouring!

Yes, we started again, ride along with coast. Poor guys, we couldn’t have sunrise due to cloud. Before reaching Mamallapuram, we could see many statue workshops. My son got enthoo on seeing that. what else, go for another photography! As I have told in my earier travelog (Coimbatore to Malampuzha) I usually like to ride between 50 – 60, since that is much convenient to enjoy both the riding and the scenic highway. Torque – always second priority for me. I’m not that much comfortable with it.

After 1 hrs and 45 minutes travel with two photo sessions, we have reached the Arjuna Penance at 06-45. Already many tourists started exploring places. Lets join with them!

I need to mention, it is good feeling to sit on the lawn behind the shore temple!

After a good breakfast, we started from Mamallapuram at 09-45, had row boating at Muttukadu on the way – reached our house at 11-40 AM!


Bye Bye MP!

Up and Down: 112 Kms
Top Speed: 55 KMPH (!)

Written in BCMTouring

இது ஒரு பொன்மாலைப் பொழுது – ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்


ஒரு நண்பரைச் சந்திக்க கும்பகோணம் பயணம் செய்யவேண்டியிருந்தது. திருச்சி – புதுகை சாலை ஒற்றைச் சாலையாக இருந்த போது கூட தஞ்சை – புதுகை மாநிலச் சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தது. என்றாலும் பொதுவான தேவைகளுக்கு புதுகை மக்கள் திருச்சியையோ அல்லது மதுரையையோதான் இன்றும் சார்ந்திருக்கிறோம். இதனால் காரண காரியம் இல்லாமல் தஞ்சைத் தரணிக்கு விஜயம் செய்வது மிகக் குறைவு. காரணம் ஒன்று இருக்கிறது என்றவுடன் மனதில் தோன்றியது அழகு கொட்டிக் கிடக்கும் தாராசுரம்.

யுனெஸ்கோவினால் கடந்த காலத்தில் தத்தெடுக்கப்பெற்ற 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐராவதேஸ்வரர் கோயில் வார்த்தைகளால் வடிக்க இயலாத பிரம்மிக்கத்தக்க ஒரு இடம். தஞ்சை பெரியகோயில் பிரம்மாண்டமானது என்றால் தாராசுரம் கோயில் பிரம்மிப்பானது. அழகானது. இந்தக் கோயிலைப் பார்த்து மனதைப் பறிகொடுக்காதவர்கள் கிடையவே கிடையாது.

அதை நினைத்து கிளம்பும்போதே மனது பரபரப்பானது. திட்டமிடப்படாத பயணம் என்பதால் காமிராவும் அதன் சகா பாட்டரியும் முழுத்தூக்கத்தில் இருந்தார்கள். அலைபேசியில் இருந்த அரைகுறை காமிராவை சிரமேல் வைத்து பயணத்தைத் தொடங்கினோம்.

அம்மா புண்ணித்தில் பேருந்து கட்டணங்கள் ஏறிய பின் முதல் தஞ்சை பயணம் இல்லவா. எனவே 30 ரூபாய் பணத்தை எடுத்து டிக்கட் எடுக்க நீட்ட..

“அண்ணே தஞ்சாவூர் ஒரு டிக்கட் தாங்க”

“3 ரூபாய் கொடுங்க”

“சில்லரை இல்லையே”

“அட டிக்கட் 33 ரூபாய். 30தான் கொடுத்திருக்கீங்க.”

அசடு வழிந்து இன்னொரு 3 ரூபாயைக் கொடுத்து தஞ்சை வந்து இறங்கினோம். பின்னர் தஞ்சை – கும்பகோணம். இந்த வழியில் பேருந்தில் பயணம் செய்வதற்கு அதிகப் பொறுமை வேண்டும். சந்து, தெரு, தார்ச்சாலைகளாக மாற்றப்பட்ட அந்தக் காலத்து மாட்டு வண்டிப்பாதை என்று அனைத்திலும் பயணம் செய்தல் வேண்டும்.

செல்லும் வழியில் பெரிய கோயில் தரிசனம்!
தஞ்சை பெரிய கோயில்

தொடர்ந்த பயணம் வாய்க்கால் ஓடும் சிற்றூர்கள், அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்தாத அரசியலடியவர்களின் கட்வுட் போஸ்டர்கள், காலைநேரப் பனி, ….. மிக அழகானதொரு பயணத்தொடர்ந்து தாராசுரம் வந்து சேர்ந்தோம். கும்பகோணத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அதன் நுழைவாயில்  போன்று அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.

இங்கு அமைந்திருக்கும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில்தான் நமது இலக்கு.

பெரியகோயில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான அங்கீகரிக்கப்பட்டதும் வெகுவாக முயற்சி செய்து இந்தக் கோயிலையும் யுனெஸ்கோ குடையின் கீழ் வரச் செய்த வரலாற்று மற்றும் தொல்லியல் அறிஞர்களை வணங்கியாகவேண்டும்.

தொல்லியல் துறையின் கீழ் இருந்தாலும் பெருவாரியான அறிஞர் பெருமக்கள் முயற்சி எடுக்கும் முன்னர் தாராசுரத்தின் கைவிடப்பட்ட கோயிலாக மாறிக் கொண்டிருந்தது அந்த ஆலயம். அதன் பின்னர் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பெற்று சுற்றி வர பச்சைப் பாட்டாடையென அழகுற அமைக்கப்பெற்ற  பூங்கா என்று கண்ணைக் கொள்ளை அடிக்கிறது இப்போதுள்ள அழகு….. என் கண்ணே பட்டுவிடுமே!

Temple surrounded by Park

அழிந்த நிலையில் பழைய முன் கோபுரம்

பழைய முன்கோபுரம்

ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவத யானைகளால் இழுக்கப்படும் அழகு இந்தக் கோயிலின் சிறப்பு. இதில் உள்ள சக்கரம் தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.
ரதம்

யானையின் அலங்காரத்தைப் பார்க்கவே கண் கோடி வேண்டும். சிற்பியின் கற்பனையைக் கண்டு வியப்பதா. கற்பனையை நிஜமாக்கிய அவரது திறமையைக் கண்டு வியப்பதா?

குதிரை

ரதம் 2

மண்டபத்தின் தூண்கள் பார்ப்பவரை மலைக்கவைக்கும் அழகுடையவை.

மாடங்கள்
மாடங்களில் உள்ள எழில்மிகு தெய்வ உருவங்கள்

கல் அலங்காரம்
நம்ப ஊர் கல்லில் இத்தணை அலங்காரம் செய்ய முடியுமா என்ன?

சிலைகள்
புராணக் கதைகள் அறிந்து கொண்டு இந்தக் கோயிலுக்குச் சென்றால் அன்று ஆர்வத்திற்கு செம தீனிதான்

தூண்களில் நடன மாதர்கள் தரும் நடன பாவனைகள் செதுக்கப்பட்டுள்ளன.
நடனமாது

சிறிய அளவில் மிக நேர்த்தியாக உள்ள அந்த சிலைகள்தான் நம்மைத் திரும்ப திரும்ப இந்தக் கோயிலுக்கு வரத் தூண்டுகின்றன.
தூண்கள்

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

வீணாதாரர்
வீணாதாரர் – மேலே இருக்கும் நர்த்தன கணபதியைப் பார்க்க மறவாதீர். விரக்கடை உயரமுள்ள இடத்தில் எத்தணை நேர்த்தி?

காளை வாகனர்
காளை வாகனர்

சிவதாண்டவம்
சிவதாண்டவம்

கஜ சம்ஹாரர்
கஜ சம்ஹாரரும் அவரது தீரத்தை பயத்துடன் நோக்கும் பார்வதியும்

கோயில்
கோயிலின் ஒவ்வொரு அடியிலும் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது. புராணக் கதைகள் ஒளிந்துள்ளன.

சிற்ப வரி
சிற்ப வரி மட்டுமல்ல – புராணக் கதைகளின் விளக்கமும் கூட

ஜன்னல்
வித்தியாசமான ஜன்னல் வடிவங்கள்

ஓவியம்
நாயக்கர் காலத்தில் கோயில் முழுக்க வண்ணம் பூசப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்

அழகு
அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு

சுற்று
இந்த திருச்சுற்றில் கரிகாலனும் இராஜராஜனும் சுற்றி வந்து சிவனை வழிபட்டார்களாம். அந்த ராஜகம்பீரக் காட்சியைப் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடாதா?

லிங்கோத்பவர்
பின்புற மாடத்தில் லிங்கோத்பவர்

நடனமாதர்
வட்டம்
சிற்பிகளின் சித்து விளையாட்டுக்கள்

பிரசவம்
கிராமத்தில் பிரசவம்

வாலி வதம்
வாலி வதம்

சில்லுட்

கும்பகோணம் பக்கம் சென்றால் அவசியம் சென்று வாருங்கள்.