http://static.independent.co.uk/s3fs-public/thumbnails/image/2015/11/01/19/23-Myanmar-EPA.jpg

மியான்மரில் மீண்டும் கிரகணம்


இவ்வளவு சீக்கிரம் மியான்மர் மக்களாட்சிக்கு (மீண்டும்) மூடுவிழா நடத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும்.. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

மியான்மர் தேர்தலுக்கு எழுதிய சிறப்புப் பதிவுகள்:

  1. ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1
  2. பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா
  3. மியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்
  4. ஏன் சூ கி நாடாள முடியாது? மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவு
  5. நீரிணை ராணி – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 5

பகானின் தினசரி வாழ்க்கை, 1000-1300


மியான்மரின் மண்டலே நகரின் இர்ரவாடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான நகரம் பகான். கிபி 9 தொடங்கி 23ஆம் நூற்றாண்டு வரை பகான் அரசின் தலைநகரமாக இருந்த பகான், பின்னாளில் தற்கால மியான்மராக ஆகியிருக்கும். இந்தக் காலகட்டத்தில் மகானில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல கோயில்கள், பகோடாக்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன.

bagan_burma
பகான் -படம்: விக்கி.

பகானின் எழுச்சி

அவற்றில் 2200 கோயில்களும் பகோடாக்களும் தற்காலத்தில் காணக்கிடக்கின்றன.  தேராவத பௌத்த மதத்துடன், மஹாயான பௌத்தம், தந்திரீக பௌத்தம் மற்றும் பிற இந்துப் பள்ளிகள் (சைவம், வைணவம்) இங்கு இருந்தன.

நேற்று இரவு ஆசிய நாகரீக அருங்காட்சியகத்தில் ‘பகானின் தினசரி வாழ்க்கை, 1000-1300’ என்கிற தலைப்பில் தேசீய தொழில்நுட்பக் கல்லூரி இணைப் பேராசிரியை கோ கியொக் யிவான் உரையாற்றினார். நானும் கண்ணனும் போயிருந்தோம்.

p_20170203_190020.jpg

அங்கு நடந்த அகழாய்வுப் பணியில் ஈடுபட்டவர் என்பதால், அந்தச் செயல்திட்டத்தைப் பற்றியும் அதில் கிடைத்த பொருட்களைப் பற்றியும் புகைப்படங்களுடன் உரையைத் தயாரித்திருந்தார்.அதில் நான் புரிந்து கொண்டவை இவை.

pagan_empire_-_sithu_ii

புத்தமதமும் பழங்கால வியாபாரமும் இந்தப் பகுதிகளை இந்தியாவுடன் நெருக்கமாகப் பிணைத்திருந்தன. எனவே இது போன்ற நிகழ்வுகளில் துண்டு போடுவது இங்குள்ள இந்தியர்கள் வழக்கம். எதிர்பார்த்த படி, இந்தியாவின் தொடர்பு பற்றிய எந்தப் பேச்சும் இவர் உரையில் ஈடுபடவில்லை. ஆனால் விக்கியில் கொடுத்துள்ள தகவலின் படி,
– இந்தியா, இலங்கை மற்றும் கெமெர் பேரரசிலிருந்து பகானுக்கு துறவிகள் சென்றிருக்கின்றனர்.
– ஆந்திராவின் அமராவதி மற்றும் நாகார்ஜுனகொண்டா, இலங்கையின் சில பகுதிகளின் புத்த ஸதூபிகளின் சாயலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவையாக இருக்கலாம்.
– பகானின் தொன்மையான பெயர் அரிமதனபுரம் (Arimadanapura)

உரையின் இறுதியில், ஒர இந்தியர் பகானின் ஆலயங்களை, வங்காளத்தின் பாலர் பேரரசின் ஆலயங்களோடு ஒப்பிட்டு வினவினார். அப்போது, இந்தியாவிற்கும் பகானிற்கும் வியாபார, கலாச்சார கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பதில் அளித்தார்.

இதில் எனக்கு விதான ஓவியங்களைப் பற்றிய செய்திகள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன. தவிர. இன்று பகான் சென்றால் என்ன பார்க்கவேண்டிய ஆலயங்கள் பற்றியும் கூறினார்.

பகானின் சிறப்பான காலகட்டம்

கியான்சித்தா அரண்மனை – அகழாய்வு

பத்தாம் நூற்றாண்டில் பகானின் பேரரசின் அரசராக இருந்தவர் கியான் சித்தா. தனது தந்தை அனவிரதரைப் பின்பற்றி, சமூக, பொருளாதார, கலாச்சாரப் பரிமாற்றங்களைத் தொடர்ந்தார். பகான் அரண்மனை என்று இன்றைய பிரதான சுற்றுலா மையத்தில் இருந்து எடுத்த அகழாய்வுப் படங்கள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன.

bagan-palace13

bagan-palace9

bagan-palace8

bagan-palace7

bagan-palace6

bagan-palace5

bagan-palace3

bagan-palace2

சீனாவுடன் நெருக்கமான உறவு இருந்ததை அகழாய்வு காட்டுகிறது. நிறைய சீன கலன்கள், தென்கிழக்கு ஆசிய பொருட்கள், மண்பாண்டங்கள், சிதலமடைந்த புத்தர் தலை சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

வட்ட வடிவமான நிறைய கட்டுமானங்கள் கிடைத்துள்ளன. படங்களில் பார்த்தாலே தெரிகிறது.

bagan-palace1

bagan-palace4

பௌத்தத்தின் விதான ஓவியங்களை வியக்காதவர் யார். ஏற்கனவே அஜந்தா பற்றி சுருக்கமாக இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன். அதனைப் போன்ற அழகான விதான ஓவியங்கள் பகான் ஆலயங்களில் இருக்கின்றன. கூகிள் படங்களில் தட்டிப் பாருங்கள்.

ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் என்பதால், நீர் வழிப் பயணங்கள் விதான ஓவியங்களில் வரையப் பட்டிருக்கின்றன.

bagan-mural1

bagan-mural2

bagan-mural3
பகானில் பார்க்கவேண்டியவை

பகானில் பார்க்க வேண்டியவையாக இதனைக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனந்த ஆலயம் (Lozong Ananada Temple)

ananda_temple_bagan_wiki
Ananda Temple – Picture: Wiki

தம்மயங்கி ஆலயம் (Dhammayangyi Temple (Old Bagan))

dhammayangyi-temple2

தத்பியின்யூ ஆலயம் – இருப்பதிலேயே உயரமான ஆலயம் (Thatbyinnyu Temple (Nyaung U & Wetkyi-In)-Tallest Temple)

thatbyinnyu-temple-bagan

ஆமா, அதென்ன பகானின் தினசரி வாழ்க்கை –

மடாலயங்களில் மலரிட்டு வழிபாடு

புத்த மத மந்திரம் ஓதுதல்

விவசாயம்

இப்படிப் போய்கொண்டிருந்திருக்கவேண்டும்.

பகானின் வீழ்ச்சி

பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி 11, 12ல் உச்சத்தை அடைந்து விளங்கியிருக்கிறது பகான். அனவிரதரின் ஆட்சியில் கலாச்சாரம் பொருளாதாரம் சிறந்து விளங்கியிருக்கிறது. பகான் என்றாலே பணம் படைத்த நகரம் என்கிற பெயர் விளங்கியிருக்கிறது. தீராது சேர்ந்த பணம் அதனுடன் பிரச்சினைகளையும் கொண்டு வந்து சேர்த்தது. செல்வத்தைப் பார்த்து மதி மயங்கிய சேவகர்கள், இராணுவ அமைப்பினர் பகானின் அரசியலமைப்பைச் சீர் குலைத்தனர். இந்தியாவின் கஜினி முகமது படையெடுப்பைப் போல, மங்கோலியர்கள் மீண்டும் மீண்டும் படையெடுத்து கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் பர்மாவின் இனக்குழுக்களான அரக்கனீயர்கள்மான்கள், தென்கிழக்கு ஆசிய இனக்குழுவான ஷான்கள் (அஸ்ஸாம் பகுதியைச் சேர்ந்தவர்களின் வழி வந்தவர்கள்) என்று பலரால் இந்த நகரம் சிதைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஒரு சிற்றூராக இருப்பதாகத் தெரிகிறது. எனக்கு கொடும்பாளூர் நினைவிற்கு வருகிறது.

bikkhu

படங்களுக்கும் உரைக்கும் –

Chairperson of The National League for Democracy of Myanmar, Aung San Suu Kyi, poses with her book during her Nehru Memorial Lecture in New Delhi on November 14, 2012. Myanmar opposition leader Aung San Suu Kyi urged the people of India to help her country achieve democracy as she paid a landmark visit November 14 to New Delhi. AFP PHOTO/RAVEENDRAN

ஜனநாயகக் கடன் – மியான்மர்


Update: 2016 March 23 6:20 PM.

Suu Kyi would take Foreign Affairs, President’s Office, Education and Energy ministries.

‘ம்ஹூம். அவன் அதுக்கெல்லாம் சரிப்படமாட்டான்’.

வாஜ்பேயி வந்தாரு. கிழக்கைப் பாருன்னாரு. ‘நீ வேலையைப் பாரு’ அப்டின்னு கீழ இறக்கி உட்டாங்க. பின்னே ஒரு பத்தாண்டு மன்மோகன் அரசில கிழக்கைப் பார்த்தால், ‘சுசுவா’ ‘சுசுவா’ என்று கண்ணத்தில் போட்டுக்கொள்வதோடு சரி. கிழக்கைப் பார் என்றால் பாரம்பரிய இந்தியாவின் பார்வை சிங்கப்பூரைத் தாண்டாது.

அதையும் மீறி, வியத்நாமில் போய் ஆயில் தோண்டுறேன் பேர்வழி என்று போனோம். ‘அத்துப் புடுவேன் அத்து’ என்று அந்தப் பக்கமாக ஒரு சத்தம் கேட்டது. வாலைக் கக்கத்தில் சுருட்டிக்கொண்டு ஓடி வந்துவிட்டோம். இதுதான் இந்தியாவின் கிழக்காசிய கொள்கை! நேரு காலத்தில் பொற மண்டையில் வாங்கிய அடியில் நமக்கு இன்னமும் சித்தம் தெளியவில்லை. பர்மாவின் நிலைத்தன்மை ஏன் இந்தியாவிற்குத் தேவை என்கிற இந்தப் பதிவோடு, இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.

Oh we need power for the sake of making change. Let us not be pusillanimous about it. If we want to bring about the kind of changes we want, we need power, not power for the sake of power, but power for the opportunity of bringing about the changes we would like to bring about.

தி இந்து பத்திரிகைக்கு 2012ல் சூ கி அளித்த பேட்டி

ஆசியானும் இந்தியாவும் பின்னே IMTயும்

சமீப காலமாக இந்தியா ஆசியான் கூட்டமைப்பு நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ள முயன்று வருகிறது (காலம் கடந்து). மிலிட்டரிப் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தியா ஆசியானுடன் வர்த்தக மற்றும் இராணுவ ஒத்துழைப்பை விரும்புவதாக சமிஞ்ஞை உலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆசியானை, இந்தியாவுடன் சாலை வழி இணைக்க, ஒரு ரோடு தேவை. தெற்கே ஆசியான். மேற்கே இந்தியா. வடக்கே சீனா. முச்சந்தியில் புள்ளையார் கோயிலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்துள்ளது மியான்மர்.

imt-highway2

ஆக, இந்தியா, மியான்மர், தாய்லாந்து சாலை வழி பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து திட்டமிடப்படுகிறது (இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரம், சாலைகள் அமைச்சகம் இன்னும் 15 நாட்களில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தெரிவித்துள்ளது).

பர்மா வழியான பட்டுப் பாதை பற்றி முந்தைய பதிவு வில் பேசினோம். அதனுடன் சேர்ந்து இந்தியாவும் ஆசியானும், இந்த ஐஎம்டிஐ முன்னெடுக்கின்றன.

And I think, sometimes I think rather than disappointment, sad is the word I would use because I have a personal attachment to India through my friends as well as because of the friendship that existed between my father and Jawaharlal Nehru, because of the closeness that existed between the countries. So rather than disappointed, I was sad that it had to be like that.

இந்தியாவுக்கு மியான்மர் எந்த அளவில் உதவலாம்?

இந்தியாவின் பார்வையிலிருந்து – கடந்த சுதந்திர தினத்தன்று ஒரு வட கிழக்கு மாநிலங்களின் சாலைவழி தொடர்பு பற்றி ஒரு நாளேட்டின் செய்தியைப் பகிர்ந்திருந்தேன். இவ்வளவு வேகமாக ஒப்பந்தம் வரை சென்றிருப்பது நல்ல ஒரு மாற்றம். தவிர சீனாவிலிருந்து கோல்கத்தா  வழி பங்களாதேஷ் சாலையும் பேசப்படுகிறது.

I’d like to see a closer relationship between our two peoples, because I’ve always felt we had a special relationship — India and Burma — because of our colonial history, and because of the fact that the leaders of our independence movement were so close to one another.

வட கிழக்கு மாநில சச்சரவுகளை ஒழிக்க ஒரே வழி, அவர்களின் முன்னேற்றம் தான். அடங்கிக் கிடந்தால் ஆகாது. நாகாலாந்துக் காரன் பெங்களூர் வந்தால், ‘சீனாக்காரனை அடி’ என்று கல்லால் அடிக்கிற தேசம் இது. ஆக, அவர்களின் முன்னேற்றத்திற்கு, வட கிழக்கை எளிதில் ஒரு துறைமுகத்துடன் இணைக்க, இந்தியாவிற்கு பர்மா உதவலாம். ஐஎம்டி வடகிழக்கு மாநிலங்களை, அத்துறைமுகத்துடன் இணைக்க உதவும்.

(c) http://www.asiasentinel.com
(c) http://www.asiasentinel.com

மியான்மரில் இந்திய எதிர்ப்பு முகாம்கள் நிறைய உள்ளது. கடத்தல் ஆசாமிகள் உள்ளனர். அதற்கெல்லாம் உதவிய ஒரு ராணுவ பூட்சுக்காரனைப் பிடித்து சிறையில் தள்ளியுள்ளது பர்மா அரசாங்கம். இந்தக் கழிசடைகளின் ஆக்கிரமிப்பை ஒடுக்க, இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவிற்கு இன்றியமையாதது.

சீனாவின் மியான்மர் திட்டங்கள் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. சுரண்டலாகவும், சுற்றுப்புற பிரச்சினையாகவும் அது பார்க்கப்படுகிறது. இந்துமாக்கடலை எளிதில் அடைய மியான்மரின் உதவி சீனாவிற்குத் தேவைப்படுகிறது. மியான்மரின் புதிய அரசுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாக சீனா அறிவித்துள்ளதன் காரணங்களில் இதுவும் ஒன்று. சீன அளவிற்கு இந்தியாவிடம் பணமில்லாது இருக்கலாம். ஆனால் ஒரு நம்பிக்கையான நட்பு நாடாக அரசியல், வியாபார மற்றும் இராணுவ ரீதியில் இந்தியா இருக்க இயலும்.

சுற்றலா பற்றிப் பெரிதாகப் பேசுகிறார்கள். அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. ‘இந்தியாவா.. ரேப் பண்ணிடுவானுங்கள்’ என்பதுதான் கிழக்காசிய யுவதிகளின் பயமாக இருக்கிறது. வேண்டுமானால், இந்தியர்கள் பர்மா, தாய்லாந்து, கம்போடியா என்று காரை எடுத்துக்கொண்டு சுற்றி வரலாம். முடிந்தால் நானும் நீங்களும் போய்வரலாம்.

இராணுவ ரீதியாக மியான்மர் சீனாவின் பிரதேசமாக ஆக்காமல் இருக்க இந்தியா அங்கு செல்லவேண்டும் என்று பேசுகிறார்கள். அதுவும் ஒரு டைம்பாஸ். உன்னை அடிக்க, அவன் ஒளிஞ்சி ஒளிஞ்சி வரனுமாக்கும்.

மியான்மருக்கு இந்தியா என்ன செய்யலாம்?

மியான்மரின் பார்வையிலிருந்து பார்த்தால், ஏற்கனவே இந்தியா அங்கு முதலீடு செய்யத் தொடங்கி உள்ளது. தவிர, வியாபார ரீதியில் அங்கிருந்து நாம் இறக்குமதி செய்வதுதான் அதிகம். எனவே இந்தியாவின் வியாபார உறவு என்பது மியான்மருக்கு நட்டத்தை அளிக்காது.

பர்மா காளி கோயில்
பர்மா காளி கோயில் (விக்கிபீடியா)

சும்மா அசமந்தமா இல்லாமல், இலங்கை மாலத்தீவுகளில் தூங்கி வழிந்தது போல் இல்லாமல், மியான்மரின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்த, மக்களாட்சிச் சீர்திருத்தங்களை அமல் படுத்த உதவவேண்டும். பர்மிய உறவுகளை தொடர்ந்து ‘வைடு’ பந்துகளைப் போட்டு வந்த இந்தியா, இனிமேலாவது பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும்.

பிரிவினை வாத கும்பல், கடத்தல் அட்டகாசம் எல்லாம் நடக்கும் வடகிழக்குப் பிராந்தியத்தை, மியான்மருடன் இணைத்து ஆசியானுடைய, இந்திய வாசலாக மியான்மரை வைக்கலாம்.

சூ கி யை ஏமாற்றி உள்ளது இந்தியா. வேறு வழியில்லை என்று இராணுவ அரசுடன் உறவு வைத்துக்கொண்டு, உலகின் பெரிய ஜனநாயக நாடாக இருந்த போதிலும், பர்மிய ஜனநாயக முயற்சிகளுக்கு ஆதரவு தராமல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பர்மிய ஜனநாயக முயற்சி என்பது எளிதானதல்ல. ஆனால் நடந்து வரும் முன்னேற்றங்களை இந்தியாவும், உலக நாடுகளும் ஊக்குவித்து, அங்கீகரிக்கவேண்டும் என்கிறார் சூ கி.

And we have to do all that building ourselves, and I think this needs to be recognised by India and by the rest of the world — that we are not on the smooth road to democracy. We still have to be given the chance to build the road to democracy.

ஆசியான், சீனாவிற்கு மியான்மரின் உறவு என்பது வியாபார ரீதியாலானாது.  அதனை விட ஒரு படி மேலே போய், அந்நாட்டில் மக்களாட்சியை வளர்த்தெடுக்க, இந்தியாவைத் தவிர வேறெவருக்கும் பொறுப்பு இருக்காது. கிழக்காசியாவில் எத்தனை ஜனநாயக நாடு? விரல் விட்டு எண்ணிவிடலாம். பக்கத்தில நந்தி மாதிரி இருந்திட்டு, மக்களாட்சிக்கு ஏங்கும் பர்மாவை, மீண்டும் ஒரு முறை தவிரவிடக்கூடாது, இந்தியா.

பலருக்கு மியான்மர் முக்கியம்

சீனாவிற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளை அடைய, பட்டுவழியை இந்துமாக்கடலில் இணைக்க, பர்மாவின் ஸ்திரத்தன்மை அவசியம்

இந்தியா ஆசியானுடன் வர்த்தக உறவு கொள்ள, வடகிழக்கு மாநிலங்களை துறைமுகத்துடன் இணைக்க மியான்மரில் ஒரு நிலையான அரசு தேவைப்படுகிறது

கிழக்காசியாவில் அமைதி, வளர்ச்சிக்காக, மியான்மரில் நிலையான அரசு அமைய ஆசியான் விரும்புகிறது

எல்லாவற்றுக்கும் மேல், 50 ஆண்டு காலம் பூட்ஸ் காலடியில் மிதிபட்டிருந்த நாட்டை, மக்களாட்சிக்கு மாற விரும்பும் அந்நாட்டு மக்களின் கனவு பலிக்கவேண்டும்.

ஆம், முச்சந்தியில் அடைப்பு ஏற்பட்டால், எல்லா பக்கமும் தண்ணீர் தேங்கும்.

You may divorce a spouse, but you can’t move away from your neighbouring country. So it’s very important that you maintain good relations. And again, I think, it’s people to people relationships which are most important. It’s not government to government. Governments come and governments go. But the peoples of the countries, they remain. And if we manage to establish genuine friendship between our peoples, then the future will be good for us. That’s not impossible.

Must read interview – ‘Let’s not be over-optimistic about Burma’

(இறுதி)

வளர்க பாரதம்

முந்தைய பதிவுகள்

  1. ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1
  2. பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா – மியான்மர் கூத்து – 2
  3. 2

 

Chinese President Xi Jinping (R) meets Myanmar's pro-democracy leader Aung San Suu Kyi at the Great Hall of the People in Beijing on June 11, 2015. Myanmar's Aung San Suu Kyi met Chinese President Xi Jinping in Beijing on June 11, state media said, during her closely watched first visit that China hopes will establish a line of communication with the influential opposition leader. (CNS)

பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியா


“மன்னர் ‘லெவன்’ பிங் அவர்களே, தங்களைக் காண ஒற்றர் வாத கோடாரி வந்துள்ளார்.”

“வரச் சொல்” சீன பங்குச் சந்தை வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜின் பிங் காவலாளியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னார்.

ஜின்- “வாய்யா கோடாரி, என்ன விசேசம்?”

கோடாரி – “விசேசம் இருந்தால் ஏன் வரப்போறேன் தலிவரே? இந்தப் பிக்காளி பயபுள்ளைக பன்ற அக்குருமம் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே போகிறதே. அதைத்தான் காதில போட்டுட்டுப் போகலாம்னு பார்த்தேன்”

ஜின் – “நமக்கு நிறைய பிக்காளிகள் இருக்காய்ங்க. எந்தப் பிக்காளியைப் பத்திப் பேசற நீயி”

கோடாரி – “பர்மா பத்திதான் சொல்றேன் தலிவரே. நம்ப கண்ட்ரோல்ல இருந்த பயக, இப்ப மேற்குப் பக்கமா சாய்ஞ்சிட்டு இருக்காய்ங்க. பிரசிடெண்டா இருக்கறப்ப, கடைசில இந்தியாவுக்கு சாமி கும்பிடப் போறேன்னு கிசும்பு பண்ணினான். அவனுக்கு அப்புறமா வந்து, இந்த மாசம் பதவி விலகப் போகிற த்தேய்ன் ஸெய்ன் தொடர்ந்து நம்மிடமிருந்து விலகிப் போயிட்டே இருக்கான் தலிவரே. ரிஃபார்ம் பண்றேன் அப்டின்னு கூத்தடிச்சிட்டு இருக்கான். மீடியா மீதான சென்சார்சிப்பைக் குறைத்தான். அரசியல் கைதிகளை விடுவித்தான், ஆங் ஸான் சூ கி உட்பட. 2012 பை எலக்சன்ல சூ கி தலைமையிலான எதிர் கட்சி NLDஐ எலக்சன்ல நிக்க வெச்சான்.”

ஜின் – “மீடியா, எதிர் கட்சி, எலக்சன் இந்த வார்த்தை எல்லாம் கேட்டால் குடலைக் குமட்டுது கோடாரி”

Narendra Modi with Thein Sein at Presidential Palace in Myanmar - PTI Photo
Narendra Modi with Thein Sein at Presidential Palace in Myanmar – PTI Photo

கோடாரி – “அதுக்குள்ளயேவா, இந்தப் பிக்காளிப் பயபுள்ள, இன்னொரு வெவகாரத்தையும் செஞ்சிட்டு இருக்குறான்ங்க. அவிய்ங்க ஊருல மையிட்சோன் அணை கட்டி அதில புனல் மின்சாரம் உற்பத்தி செய்து, `உனக்கு உமி எனக்கு அரிசி’ ன்னு ஒரு அஜ்ஜீஸ்மெண்டுல கரண்டு வாங்கிட்டு இருந்தோம். ‘வெள்ளம் சாஸ்தியா இருக்குது. பர்மாவுக்குக் கரண்டு வரலை. நாம் அதிகமா மின்சாரம் எடுத்துக்கிறோம். சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது’ அப்டின்னு பல கரச்சல் பண்ணிட்டு இருந்தாய்ங்க. நீங்களே சொல்லுங்க தலை. ஆப்பிரிக்காவில நாம பண்ணாத அழிச்சாட்டியமா. அவிங்க எல்லாம் எப்புடி காசு வாங்கிட்டு கம்முன்னு இருக்கறாய்ங்க. இந்த பயகளுக்கு மாத்திரம் ஏன் இவ்வளவு சண்டித்தனம்? இந்தத் த்தேய்ன் ஸெய்ன் நம்ப அணை திட்டத்தை நிறுத்திபிட்டான் தலிவரே.”

ஜின் பிங்குக்கு கும்பியோடு சேர்த்து உடலே எரிய ஆரம்பிக்கிறது. மேலும் வெறியேற்றிக் கொள்ள, சூடான சீன டீயை உள்ளே இறக்கிக் கொண்டார்

A Myanmarese living in Malaysia displays a placard in protest against the Myitsone dam project, outside Myanmar's embassy in Kuala Lumpur September 22, 2011.  REUTERS/Bazuki Muhammad
A Myanmarese living in Malaysia displays a placard in protest against the Myitsone dam project, outside Myanmar’s embassy in Kuala Lumpur September 22, 2011. REUTERS/Bazuki Muhammad

Burmese living in Malaysia display placards in protest against the China-backed Myitsone dam project, outside the Burmese Embassy in Kuala Lumpur in September 2011. (Photo: Reuters)
Burmese living in Malaysia display placards in protest against the China-backed Myitsone dam project, outside the Burmese Embassy in Kuala Lumpur in September 2011. (Photo: Reuters)

கோடாரி – “போதாக் குறைக்கு கொக்கான் பகுதி பிரச்சினை வேற நமக்கு எதிரா போயிருச்சு. இந்தியாவோட அருணாச்சல் பிரதேசமும், பர்மாவோட கொக்காங் பிரதேசமும் நம்பளோட பகுதிகள்தானே தலிவரே. பர்மா கம்யூனிஸ்ட் தோழர் கட்சிகளோட சார்பில MNDAA படைகள் ரொம்ப காலமா வாய்ப்பு எதிர்பார்த்திட்டு இருந்தானுக. மித்த புரட்சிப் படைகள் மாதிரியே கடத்தல் செய்து வயிறு கழுவிட்டு இருந்தானுக. அந்தப் பசங்கள ‘கொக்காங் எல்லைப் பாதுகாப்பு படையா, மிலிட்டரிக்குக் கீழ இருங்கடா’ன்னு பர்மா பேசப்போக ரோசம் வந்து பொங்கி, போன வருசம் பிப்ரவரி மாசம் கொக்கான்ல தாக்குதல் நடத்தினாய்ங்க.”

Children queue for food at a refugee camp in the Kokang region of Myanmar, near the border with China, on February 21, 2015. (Stringer/Courtesy: Reuters)
Children queue for food at a refugee camp in the Kokang region of Myanmar, near the border with China, on February 21, 2015. (Stringer/Courtesy: Reuters)

“கிட்டத்தட்ட 40 லேருந்து 50 ஆயிரம் பேரு வீடு வாசல விட்டு சீனா பார்டர் தாண்டி அகதியா போனாங்க. 4500 பேரு மட்டும் பர்மாவோட ஷான் மாநிலத்துக்கு வந்தாய்ங்க.  அந்த சமயத்தில அவிய்ங்க கூட சண்டை போடுறேன்னு சொல்லி இந்த பர்மாகாரய்ங்க நம்ப ஊரு கரும்புக் காட்டுல பாம் போட்டு 8 பேரைக் கொன்னு போட்டாய்ங்க. அப்புறமா நாம் மிரட்டப்போக, மன்னிச்சிருங்க சாமின்னு கால்ல விழுந்தாய்ங்க.”

“ஆனா தலிவரே, பர்மா மிலிட்டரி உளவு பார்த்து சொன்ன ரிப்போர்டு வேற மாதிரி இருந்தது. முன்னாள் சீன ராணுவத்தினரை கூலிக்கு வைத்துக்கொண்டு, MNDAA படைகள் ஆதரவு தேடிகிட்டதா சொல்லுது. ஆனா அதெல்லாம் கிடையாது அப்டின்னு இந்தியாவில இருந்து வந்த கற்பூரத்தை அணைச்சி சத்தியம் பண்ணிட்டோம். பின்னால பிரச்சினை ஏதும் வந்தா, அது இந்தியா கற்பூரம், சத்தியம் செல்லாதுன்னு சொல்லிக்கலாம் பாருங்க.”

ஜின் – “ப்ப்ப்பூ….” என்று ஊதிக் கொண்டார்.

ஜின் – “இந்த லட்சணத்தில இந்த சூ கி பொம்பளை வேற அடுத்த மாசம் வரப்போகுது. அவிங்க ஊரு பசங்க அம்புட்டு பயலும் ஒட்டு மொத்தமா இந்த அம்மாவுக்கே ஓட்டு குத்திப்பிட்டாய்ங்க. அந்த அம்மாக் கண்டாலே குமட்டுது கோடாரி. அதென்ன மக்களாட்சி மண்ணாங்கட்டி. 2011க்குப் பிறகு அங்க மேற்கத்திய ஆதிக்கம் அதிகமாயிருக்கு. வெளிநாடுகள் பணம் போட ஆரம்பிச்சிருக்காய்ங்க. அது நமக்கு தலைவலி. நாமதான் முதல்ல அங்க முதலீடு பண்ணியிருக்கோம். இத்தணைக்கும் பர்மா மீதான தடையை அமெரிக்கா நீக்கனும்னு சொன்னதே நாமதான். முதல் அறுவடை நாம செய்யவேண்டாமா. ”

Myanmar's National League for Democracy (NLD) delegation led by its chairperson Aung San Suu Kyi (C) and officials from Chinese Embassy pose for a group photo at Yangon International Airport in Yangon, Myanmar, June 10, 2015. Aung San Suu Kyi left here on Wednesday for her first visit to China aimed at enhancing mutual understanding and promoting cooperation and friendly relations between the two neighbors. [Photo/Xinhua]
Suu Kyi at China -2015 Myanmar’s National League for Democracy (NLD) delegation led by its chairperson Aung San Suu Kyi (C) and officials from Chinese Embassy pose for a group photo at Yangon International Airport in Yangon, Myanmar, June 10, 2015. Aung San Suu Kyi left here on Wednesday for her first visit to China aimed at enhancing mutual understanding and promoting cooperation and friendly relations between the two neighbors. [Photo/Xinhua]
கோடாரி – “யூ ஆர் ரைட். இந்தம்மா வந்ததில இருந்தே பேசுற பேச்சே சரியில்லை. நம்பள பகைச்சிக்க முடியாதுங்கறதையும் உணர்ந்திருக்கு. அதே சமயத்தில ரொம்ப டிப்ளமேட்டிக்கா பேசுது. பொம்பளைங்க எப்படி பேசலாம்? நம்ப ஊரு மிஸ்ட்ரெஸ் நகரத்தில தவிர அவிக எங்கயும் பேசவே கூடாது. ‘பெய்ஜிங் உறவு பற்றி சிறப்பான கவனம் தருவேன்’னு சொல்லுது. அதே சமயத்தில, ‘வெளிநாட்டு உறவுகள்ல நடுநிலைமை நிலையைப் பின்பற்ற முயல்வோம்’னும் சொல்லியிருக்கு.  தேங்காய் எண்ணையைத் தடவிக்கொண்டு, வெறும் கையில் கெழுத்தி மீனைப் பிடிப்பது போல இருக்கிறது தலைவரே. ‘பொருளாதார திட்டங்கள்ல, வெளிப்படைத்தன்மை வேணும்’னு செல்லுது. அப்படி வெளிப்படைத் தன்மை கொண்டு வந்தா, மைஸ்டோன் அணை கரண்டு முழுவதையும் அவிங்களுக்கே கொடுத்திட வேண்டியதுதான். வேணும்னா சொல்லுங்க. இந்தியாவில திருப்பதிங்கிற இடத்தில நாமக்கட்டி கிடைக்கிதாம். வாங்கி ஆளுக்கு ஒரு நாமம் போட்டுக்குவோம்”

Chinese President Xi Jinping (R) meets Myanmar's pro-democracy leader Aung San Suu Kyi at the Great Hall of the People in Beijing on June 11, 2015. Myanmar's Aung San Suu Kyi met Chinese President Xi Jinping in Beijing on June 11, state media said, during her closely watched first visit that China hopes will establish a line of communication with the influential opposition leader.  (CNS)
Chinese President Xi Jinping (R) meets Myanmar’s pro-democracy leader Aung San Suu Kyi at the Great Hall of the People in Beijing on June 11, 2015. Myanmar’s Aung San Suu Kyi met Chinese President Xi Jinping in Beijing on June 11, state media said, during her closely watched first visit that China hopes will establish a line of communication with the influential opposition leader. (CNS)

ஜின் – “டோன்ட் ஒரி. எவ்வளவோ ஆடல்களைப் பார்த்திட்டோம். இதையும் பார்ப்போம். இப்ப இருக்கர பர்மா கவுருமெண்டு அவிங்க ஊரு மக்களாட்சி மெம்பருக, ஆய்வாளருக, பத்திரிகையாளருகளை நம்ப ஊருக்கு சமீபத்தில அனுப்பினாய்ங்க. நல்லா வந்து சுத்திப் பாத்தானுக. குளிப்பாட்டி அனுப்பிருக்கோம். ராவ் ஹுய்ஹுவா வை வெச்சி வேணும்கிறத பேசியிருக்கோம். One Belt, One Road திட்டத்தால பர்மாவுக்கு என்ன என்ன போஷாக்கு கிடைக்கும் என்பதை எல்லாம் அவிக மண்டையில ஏத்தி அனுப்பியிருக்கோம்.”

Silk Road Belt - Source: WSJ
Silk Road Belt – Source: WSJ

கோடாரி – “அப்பவும், நம்ம திட்டம் வெளிப்படையா இருக்கணும்னு பர்மாக் காரனுக சொல்லியிருக்கானுக தலிவரே. நாம சீனாக் காரங்களுக்கே வெளிப்படையா இருக்கிறதில்ல. இந்தப் பர்மா பதர்களுக்கு நாம ஏன் தாழ்ந்து போகனும்னு கேக்கறேன். உள்ளுர் மக்களுக்கு நன்மை நடக்கனும்னு சொல்றானுக. ஆப்பிரிக்காகாரன் அப்டியா கண்டிசன் போட்டு நம்பள உள்ள விடுறான். அவன் பாட்டுக்கு குடுக்கற பணத்தை வாங்கிட்டு கம்முன்னு, இரும்பு ஈயம் எல்லாத்தையும் நமக்கு அனுப்பி விடலை? இவனுகளுக்கு என்னா? பர்மா காரனுக டூர் வந்த சமயத்தில மைஸ்டோன் டாம் பத்தி பேசினானுக. நம்ப ஆளுக வாயத் தொறக்கல. அதனால புது அரசு அமைஞ்ச பின்னர், இது நல்லபடியா போகுமான்னு தெரியலை. திரும்பவும் பர்மா பத்திரிகையாளர்கள சீனாவுக்கு கூட்டி வந்து, ‘புனல் மின்சாரம்’ என்றால் என்ன என்று  கற்றுத்த தந்தால், நம்ப பக்கம் திரும்பினானும் திரும்புவாய்ங்க அப்டின்னு நினைக்கிறேன்.

ஜின் – “பண்ணலாம். ஜாஸ்தி செலவு வராம பார்த்துக்க..” (பங்குச் சந்தை கிராஃபைப் பார்த்துக்கொண்டே முனங்கிக் கொள்கிறார்)

bull-in-a-china-shop-shoreditch-chicken-whisky-restaurant-bar-drunken-monkey-hibiki-whisky-credit-mark-sethi

கோடாரி – “நீங்க One Belt, One Road பத்தி பேசறீங்க. அப்பால ஒருத்தன் இருந்திட்டு இந்தியா-பர்மா-தாய்லாந்து முத்தரப்பு சாலைன்னு குறுக்கு சால் ஓட்றான் தலிவரே. மணிப்பூருல அட்டாக் நடந்தா பர்மாவில வெடி வெடிக்கிது.”

ஜின் – “பர்மா நம்ப பயடா.. பேசும்போது காது ஆடிச்சி பாத்தியாலே.. கண்டிப்பா சொல்றேன். அவன் நம்ப சாதிக்காரப் பயதான்”

பிற பதிவுகள் –

http://static.independent.co.uk/s3fs-public/thumbnails/image/2015/11/01/19/23-Myanmar-EPA.jpg

ரகுபதி ஈ – மியான்மர் கூத்து – 1


இன்று காலையில் எழுந்து பில்டர் காப்பி போட்டுக் குடித்துக் கொண்டிருந்த பெரியவர் யூ தின் க்யாவ் ஐ, மியான்மர் தனது மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.  ‘மியான்மரின் ஓ.பன்னீர் செல்வம் வாழ்க’ என்கிற கோஷம் முழங்க உலக நாடுகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. தின் கியாவ், சூ கி யோடு எந்த பள்ளியில் படித்தார், எந்த கார் ஓட்டினார் என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விசியம். நமக்கு இது எப்படி இருக்கும் என்பதே எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

Photograph - The Guardian - Aung Shine Oo-AP
Photograph – The Guardian – Aung Shine Oo-AP

மக்களாட்சி முன்னேற்றக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, அதிகாரப் பகிர்வு, சரியான (பொம்மை?) ஜனாதிபதி தேர்வு என்று தினசரி சலசலப்பு ஒலிகள் எழுந்துகொண்டிருந்தன. ஒரு வழியாக எல்லாம் முற்றுக்கு வந்துள்ளது. சூ கி-க்கு ஒரு நம்பிக்கையானவராக உடன் பணியாற்றப் போகிறார் தின் க்யாவ்.

இந்தப் பக்கம் இந்தியா 1000 கிமீ அளவின் தன் எல்லையை மியான்மருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தப் பக்கம் புல்டோசர் மாதிரி சீனா நின்று கொண்டுள்ளது. கேக்குக்கு நடுவில் வெண்ணை வைத்தது போல, மியான்மர் அமைந்துள்ளது. அந்த வகையில் சீனா மற்றும் இந்தியாவிற்கு பூகோள ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடு முக்கியத்துவம் பெறுகிறது.

குண்டன் குடுமி

பாகிஸ்தான் மாதிரிதான் சீனாவிற்கு மியான்மரும் என்கிற மாதிரி ஏதோ திருவாய் மலர்ந்திருக்கிறார் சீனாவுக்கான மியான்மர் தூதர்,. (வெளியுறவு இன்னும் மக்களாட்சிக்குப் போகவில்லை. இராணுவ குண்டன்கள் கையில்தான் இருக்கிறது. எனவே குண்டனின் குடுமி இப்படித்தான் ஆடும். வேறு வழியில்லை). பாகிஸ்தானுக்காக சீனா பல முதலீடுகளைச் செய்யதுள்ளது. PoK யில் சாலை, துறைமுகம் என்று. இந்தியா இருப்பதால் பாகிஸ்தானுக்குக் கிடைத்த வாழ்வு இது. அது போன்ற வாழ்வை மியான்மர் விரும்புவதாகவும் இவருடைய இந்தக் கூற்றை எடுத்துக் கொள்ளலாம்.

Source: The Economist
Source: The Economist

சூ கிக்கு இந்தியா ஆதரவாகவே இருந்துள்ளது. பூட்சு காரர்கள் வந்து அவரை அலேக்காக வீட்டுக்காவலில் வைத்துவிட்டு, நாட்டைக் கையிலெடுத்துக் கொண்டதும், இந்தியா அவரை ஆதரித்துள்ளது. 90களில் அவருக்கு விருதையும் வழங்கி கவுரவப் படுத்தியது. துரதிருஷ்ட வசமாக, அவருடைய சிறை வாசம் நீண்டு கொண்டே இருந்தது. இடைப்பட்ட நாட்களில், இந்திய எதிர்ப்பு குழுக்களின் கூடாரமாக மியான்மர் ஆகிப் போனது. மியான்மரின் மக்களாட்சிப் போராட்டத்தை ஆதரித்த இந்தியா, ஒரு கட்டத்தில் தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு, பூட்சுக் காரர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொள்ள ஆரம்பித்தது. இந்தியாவில் உள்ள பர்மிய அகதிகள் கொதித்துப் போனார்கள். 2010ல் ராணுவ ஜெனரல் த்தான் ஷ்வே, எதிர்ப்புகளுக்கிடையில், இந்தயாவிற்கு வந்து, புத்தர் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு புளியோதரை தின்றுவிட்டுப் போனார். (இதே ஷ்வேதான் இந்தியாவிற்கு எதிராக சீனா விளையாடும் வண்ணம் பர்மிய கடல்படைத் தளங்களை சீனாவிற்குத் திறந்துவிட்டார்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு அரசு அமைந்துள்ள இவ்வேளையில் சூ கி உடனான உறவுகளைச் செப்பனிட இந்தியா முயன்று கொண்டுள்ளது.

A protest in New Delhi by Burmese pro-democracy groups against the visit of Than Shwe head of Burmas military junta. Photograph -Gurinder Osan-AP
A protest in New Delhi by Burmese pro-democracy groups against the visit of Than Shwe head of Burmas military junta. Photograph -Gurinder Osan-AP

ரகுபதி ஈ

பூட்சு காரன் காலடிக்குப் போன மியான்மர், சர்வதேச நாடுகளின் அனுசரணையிலிருந்து விலகத் தொடங்கியது. ஆள் இல்லாத இடத்தில் எருக்கு முளைப்பது நடப்பதுதானே. எனவே இடைப்பட்ட காலத்தில், பூட்சுக் காரனுக்கு பாலீஷ் டப்பியிலிருந்து, இராணுவ டாங்கி வரை அனைத்திற்கும் ஏகபோக சப்ளையராக சீனா மாறி வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சீனாவின் நிழல் மியான்மர் முழுவதும் படற ஆரம்பித்தது. இன்று சீனாவின் தாக்கமில்லாமல் ஏதுமில்லை என்கிற அளவிற்கு மியான்மரின் தினசரி வாழ்க்கை முறை மாறியுள்ளதாக சொல்கிறார்கள். ஏசியான் நாடுகளின் கூட்டமைப்பில், மியான்மரைச் சேர்ந்தது சீனா என்று சொல்கிறார்கள். தெரியலை. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வங்காள விரிகுடாவிற்கும் பொடிநடையாகவே போய் சேர்ந்துவிடலாம் என்று சீனா கணக்குப் போட்டு செய்து வந்திருக்கிறது.

மக்களாட்சித் தத்துவம் பேசி, சந்தோஷமாக கிழக்கைக் கவனிக்கத் தவறவிட்ட இந்திய மத்திய அரசாங்கங்கள் மகிழும்படி, மியான்மர் சீனாவின் கோட்டையானது. அதன் இயற்கை வளங்களைச் சுரண்ட ஆரம்பித்ததோடு, இந்தியாவிற்கெதிராக முகாம்களையும் குஷியாக வளர்த்துவிட்டது சீனா. சீனா கொடுத்த அடியில் காங்கிரசுக்குப் பிடித்த சளி, இன்னும் கொட்டிக்கொண்டுள்ளதால், கிழக்கைப் பார்த்தாலே பதறுகிறது. அதை வசமாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா மியான்மருடன் வியாபாரம், எரி சக்தி மற்றும் இராணுவ உறவுகளை பலப்படுத்திக் கொண்டது.

Chinas President Xi Jinping R and Myanmars President Thein Sein shaking hands. China is the biggest investor in Myanmar. Photo REUTERS - China Daily
Chinas President Xi Jinping R and Myanmars President Thein Sein shaking hands. China is the biggest investor in Myanmar. Photo REUTERS – China Daily

இந்தியா ஈயை அடிக்கக் கிளம்பியது அப்போதுதான். ஏட்டின்படி, மியான்மரின் மக்களாட்சியை ஆதரித்தாலும், தனது மூலோபாய நலன்களைக் கணக்கில் கொண்டு, பூட்சுக் காரர்களுடன் வியாபாரம் பேச ஆரம்பித்தது. மக்களாட்சி கிளர்ச்சியாளர்கள் மீது மியான்மர் இராணுவம் வெறியாட்டம் நடத்திய பொழுது, இந்திய பெட்ரோலிய அமைச்சர், யங்கூனில் தங்கி ஒப்பந்தம் கையெழுத்துப் போடப் போயிருந்தார். சீனா ஆக்கிரமிக்கும் கரம் என்றாலும், இந்தியா ஒரு நட்பு மற்றும் நம்பிக்கையான நண்பன் என்று பூட்சுக் காரர்களின் ஹெல்மெட் மண்டைக்குள் இருந்த மூளைக்கு உரைக்கும் வண்ணம் சொல்லப்பட்டது. இந்த ஒரு நம்பிக்கையை இழக்க இந்தியா விரும்பாது.

-முடிந்த வரை வரும் 🙂

வளர்க பாரதம்

பிற பதிவுகள்