இலங்கையை விட்டு வெளியேறுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அத்தகைய ஒரு நல்ல பயணம்.
எங்கள் சுற்றுலா வழிகாட்டி திரு. துஷார. இலங்கையில் அந்த 8 நாட்களில் இலங்கையில் எங்கள் நண்பராக இருந்தார். அவர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்.
எங்கள் விடுதி ஒரு இருட்டானது. நடை பாதையில் இருட்டு மட்டும் தான் என் கண்ணுக்குத் தெரிந்தது. நட்சத்திர ஓட்டல் என்றால் வெளிச்சம் இன்றி அழுது வடியவேண்டும் போல. எனக்கு இதுதான் முதல் முறை. அதுவுமின்றி காலை உணவு வேறு தாமதம். எங்கள் விமானத்திற்குத் தாமதம் ஆனது. அரை மணிநேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக நாங்கள் விமான திருச்சி சென்றடைந்தோம். காலை உணவும் சரியில்லை. மதிய உணவும் சரியில்லை. புதுகைக்குச் சென்ற பிறகுதான் எல்லாம்.
காலியில் நாங்கள் தங்கிய விடுதி அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. கடற்கரையைப் பார்க்க இயலவில்லை. வாகனம் நிறுத்த வசதி இல்லை. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. குளிர் சாதனம் நேரக்கருவி (timer) வேலை செய்யவில்லை. உணவு மற்றும் பணியாளர்கள் விடுப்பில் சென்றுவிட்டிருந்தனர். நாங்கள் தங்கின அறை வசதியானது. மற்றும் சுத்தமானது. காலி சாலைக்கு அருகில் வசதியாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி பயணம் செய்யும் போது நீங்கள் தூங்க ஒரு விடுதியைப் பார்த்தால், இந்த விடுதி சரியான விடுதி. எல்லா விடுதிகளிலும் எங்களை பழச்சாருடன் வர வரவேற்றார்கள். ஆனால் இந்த விடுதி தான் எங்களுக்கு ஒரு தண்ணீர் கூட தரவில்லை. இரவு சமைக்க யாருமில்லை. வெளியில் கடைகளும் இல்லை. நுவரெலியா போகும் வழியில் நாங்கள் வாங்கியிருந்த பழங்கள் கை கொடுத்தன. இலங்கை பயணத்தில் உணவு இல்லாத ஒரே இரவு காலி விடுதியில் தங்கிய இரவு.
காலை எழுந்ததும் நீண்ட நேரம் கடற்கரையில் கழித்தோம். நன்கு பசி வரும்வரை கடற்கரையில் இங்கும் அங்குமாய் நடந்து இந்துமாக்கடலின் அழகினை ரசித்தோம். எங்களைத் தேடி துஷார வந்ததும், விடுதிக்குத் திரும்பினோம்.
காலை உணவிற்காக பழங்களையும் ரொட்டிகளையும் பார்த்தபோது எங்களுக்குக் கண்கள் கலங்கிவிட்டன!
இன்று நாம் கொழும்பு திரும்பப் போகிறோம்.
நாங்கள் போகும் வழியில் காலிக் கோட்டையை (Galle Fort) பார்த்தோம்.
இது கடல் முன் உள்ள அழகான கோட்டை. கடைகள், உணவகங்கள், பார்கள் போன்ற சிறிய கடைகளை நீங்கள் காணலாம். சிறிய விருந்தினர் இல்லங்கள், ஹோட்டல்கள் உள்ளன. கலங்கரை விளக்கம் வரை நடந்து செல்லுங்கள், நீங்கள் கடலுக்கு நல்ல காட்சிகளைப் பெறுவீர்கள். இது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு உண்மையான நகரமாக இருந்தது, இன்னும் அந்த உணர்வைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நாங்கள் தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலையைப் பிடித்து சல்லென்று இரண்டே மணிநேரத்தில் கொழும்புவை அடைந்தோம். இது காலியிருந்து கொழும்புவிற்குச் செல்வதற்கான மிக வேகமான வழியாகும். அம்பாந்தோட்டை, மத்தாரா, காலி நகரங்களை கொழும்புவுடன் இணைக்கிறது.
நெடுஞ்சாலையிலிருந்து கொழும்புவிற்கு வெளியில் உள்ள பத்திரமுல்லை நகருக்குச் சென்று சேர்ந்தோம். என் அம்மா அங்கு ஒரு பல்பொருள் அங்காடியில் நியாபகார்த்தமாக, சிரட்டை (கொட்டாச்சி)யில் செய்த கொள்கலன் ஒன்றை வாங்கினார்.
பிறகு மதிய உணவிற்காக கொழும்புவின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே பகுதியில் உள்ள மில்லேனியம் உணவகத்திற்குச் சென்றோம். பின் மதிய வேளை ஆகி இருந்தது. உணவு சிறப்பாக இருந்தது. இலங்கைப் பயணத்தில் நாங்கள் எடுத்துக்கொண்ட சுவையான தென் இந்திய உணவு. நல்லா இருக்கிறதே. இன்னொரு தோசை கொடுங்கள் என்று நாங்கள் கேட்ட பொழுது சமைப்பவர் இல்லை. வேலை முடிந்துவிட்டது என்று வெளியே போய்விட்டார். காலியிலிருந்து சோதனை மேல் சோதனை.
உணவிற்குப் பிறகு கொழும்பு நகரைச் சுற்றி அலைந்தோம்.
அதற்கு பின் கங்காராமய புத்த விகாரைக்குச் சென்றோம். அது எனக்கு பிடித்த கோவில். அங்கு எல்லாம் சுத்தமாக இருந்தது. அங்கு இருக்கும் தலைமை பிக்குவிற்க்கு உடல் நலம் சரியாக இருந்த காரணத்தால் அவர் சிங்கப்பூர் வந்தார் என்று துஷாரா கூறினார்.
இந்த கோவிலில் தான் புத்தரின் தலை முடியை பாதுகாத்து வருகிறார்கள். இந்த கோவிலில் பழைய பொருட்களை போக்கிஷமாக பாதுகாத்து வருிறார்கள். இந்த கோவிலின் கீழே பழைய வண்டிகள் (Cars), குதிரை வண்டி மற்றும் பல பழங்கால ஊர்திகளைப் பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த கோவிலைப் பார்த்து விட்டோம். இப்பொழுது நாம் நம் விடுதிக்கு செல்லலாம். நாம் தங்கிருக்க விடுதியின் பெயர் ரமடா. இதற்க்குப் பக்கத்தில் தான் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த செய்தியை என் தந்தை கூறினார். இத்துடன் எங்கள் பயணத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
எனக்கு தூக்கம் தூக்கமாக வந்தது.
அடுத்த வாரம் சந்திப்போம்.
டாடா
-கண்ணன். திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி வருடம், வைகாசி 10, சனிக்கிழமை.
யால தேசிய வனத்தை நேற்று மாலையில் சுற்றிப் பார்த்ததால் எனக்கு மிகக் களைப்பாக இருந்தது, என்னை ஒரு பத்து நபர்கள் அடித்து போட்டது போல. இரவு திஸ்ஸமஹாராம வந்து ஓர் இரவு தங்கினோம். ஆனால் பயணங்கள் முடிவதில்லை. நமது இன்றைய பயணத் திட்டம்:
• திஸ்ஸமஹாராமத்தில் இருந்து கதிர்காமம் செல்வது.
• அங்கு இருந்து கடற்கரை நகரமான காலி செல்வது.
• மாலையில் கடலில் விளையாடுவது.
நாங்கள் தங்கியிருந்த விடுதியில் சிறு சிறு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் எதிரெதிராக நான்கு அறைகள் இருந்தன. இது உங்கள் வீட்டை போல வாசல் கதவைக் கொண்டிருந்தது. புகுபதிகை (செக்-இன்) செய்தபின், எங்கள் அறைக்குக் காண்பிக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் பழச்சாருடன் வரவேற்கப் பட்டோம். விடுதியில் ஆட்களே இல்லை.
அங்க ஒரு இரவு தான் தங்கியிருந்தேன், ஆனால் திரும்பி வந்து நீண்ட காலம் தங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்கிறேன். இந்த விடுதி யால தேசிய பூங்கா மற்றும் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு அருகில் உள்ளது. அதில் ஒரு நல்ல நீச்சல் குளமும் இருந்தது. நான் நீந்த வேண்டாம் என்று என் தந்தை சொன்னதால் என்னால் நீந்த முடியவில்லை 😭😭😭.
எங்களுக்கு காலை உணவு ரொட்டிகள், பழங்கள் மற்றும் தேங்காய் சாம்பலுடன் இடியப்பம். என் தம்பிக்காக வாங்கிய இடியப்பத்தை அவன் வீண் அடித்து விட்டான். பொதுவாக இந்தியர்கள் சிலர் விடுதியில் வழங்கப்படும் இலவச காலை உணவைக் கட்டி எடுத்து செல்வார்கள். வெளிநாடுகளில் அதைச் செய்யாதீர்கள். அதற்கு அனுமதி கிடையாது. நாங்கள் எங்கள் பணியாளரிடம் கேட்ட பொழுது அந்த இடியாப்பத்தை அவர் எங்களுக்குப் பொட்டலமாகக் கட்டித் தந்தார்.
கதிர்காமம்
முந்திய நாள் மாலையில் கதிர்காமம் கோயில் அருகில்தான் உள்ளது என்று என் அப்பா சொன்னார். அதை அடுத்து என் அம்மா கதிர்காமம் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஒத்தை காலில் நின்றார். சுற்றுலா திட்டங்களை யாரும் மாற்ற மாட்டார்கள். நாங்கள் துஷாரவிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவரும் அதைப் பரிசீலித்து, அவருடைய நிறுவனத்துடன் பேசினார். நாங்கள் அதிகப்படியான கட்டணத்தைத் தருவதாகச் சொன்னோம். ஆனாலும், இலவசமாகவே செய்து தருவதாக Blue Lanka Tours நிறுவனம் ஒப்புக் கொண்டது. Thanks to Tushara and Prameela of Blue Lanka Tours.
அதனால் திஸ்ஸமஹராம – காலி என்று இருந்த பயணத் திட்டத்தை திஸ்ஸமஹராம – கதிர்காமம் – காலி என்று மாற்றிவிட்டார் என் அம்மா. நாங்கள் கதிர்காமம் சென்றோம். அது ஒரு புனிதமான இடம். இலங்கை முருகன் எங்களை வரச் சொன்னது போல இருந்தது.
சிங்கப்பூர் முருகனுக்கு அரோஹரா!
பத்துமலை முருகனுக்கு அரோஹரா!
கதிர்காமம் முருகனுக்கு அரோஹரா!
உலகெங்கும் இருக்கும் முருகனுக்கு அரோஹரா!
இந்தியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில் கதிர்காமம். இந்த கோவில் சிறிதளவில் இருந்தாலும் இது ஒரு அழகான மற்றும் பழங்கால கோயில். இந்த ஆலயம் சிறியது, எனவே அதன் கூட்டம் அதிகமாக இருக்கும்போது நீங்கள் சென்றால், கொஞ்சம் காத்திருக்க வேண்டும். நீங்கள் முருகன் சிலையைப் பார்க்க முடியாது. திரை போட்டு மூடி இருப்பார்கள். அதுதான் சாமி. பூசாரி உங்களுக்காக அர்ச்சனைகள் / பூஜைகள் செய்து பிரசாதங்களை பெறுவார். ‘மக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பிரதான தெய்வத்தைக் காண முடியும்’ என்று துஷார சொன்னார்.
முருகனை பற்றி பேசிட்டு இருக்கும் போது இந்த பாட்டை பாடலாமே:
உள்ளுர் புத்த மதத்தின் தாக்கம் இங்கே தெரியும். கதிர்காமம் கோயில் உள்ளேயே புத்தருக்கான ஆலயம் உள்ளது. விஷ்ணுவும் பெருமாளும் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள். கண்டியிலும் இதைக் கண்டோம். (பார்க்க: புத்தர் பற்கோயில் கண்டி). வழிபாடுகளிலும் வித்தியாசம் இருந்தது. முதலில் சந்நிதானத்தைக் கூட்டி சுத்தம் செய்தார்கள். அனைவரும் வெள்ளை அணிந்திருந்தார்கள். தலையில் சிவப்பு நிற முண்டாசு கட்டியிருந்தனர். சாமி அருகில் உள்ளவர்களுக்கு வெள்ளை முண்டாசு. சிவப்பு கம்பளம் விரித்தனர். மணிகள் ஒலித்தன. அன்னக்காவடி போன்று பிரசாதத்தை எடுத்து வந்தார்கள். நமக்குத் தெரியாது. அனைவரும் திரைக்கு அப்பால் சென்றுவிட்டனர். மணி ஓசையைக் கேட்க முடிகிறது. ஆனால் நமக்குப் பார்க்க அனுமதி இல்லை. பக்தர்கள் அனைவரும் மலர், பழம் கொண்டு வந்திருந்தனர். பூசனைக்குப் பிறகு சாம்பார் சாதம் போன்ற பிரசாதம் எங்களுக்கு கிடைத்தது.
அம்மா மட்டும்தான் உள்ளே சென்றிருந்தார். புசனை முடிந்து பக்தர்களை உள்ளே விட்டபொழுது நான், எனது அப்பா, என் தம்பி, துஷார அனைவரும் உள்ளே சென்றோம். உள்ளே கூட்டமாக இருந்தது. அங்கே சுவரில் கட்டியிருந்த மணிகளை அனைவரும் அடித்தனர். அதனால் நானும் அடித்தேன். அருகில் இருந்த ஒரு அம்மா என் கையில் நச் என்று அடித்தார். அவர் பிள்ளை என்று நினைத்து, என்னை அடித்துவிட்டார் போல :(. பின்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதனால் என்ன, தாய்களுக்கு மகன்களை அடிக்க உரிமை இல்லையா!
கதிர்காமம் – காலி நெடுஞ்சாலை
நாம் கதிர்காமம் முருகன் அருள் பெற்றுவிட்டோம். இப்பொழுது நாம் காலி (Galle) என்னும் ஒரு நகரத்திற்குச் செல்லப் போகிறோம். 4 மணிநேரப் பயணம். அது இலங்கை கிரிக்கெட் வீரர் தேசாபந்து முத்தையா முரளிதரனின் (Deshabandu Muttiah Muralitharan) சொந்த ஊர். இவர் 800 விக்கெட்டுகளை டெஸ்ட் மாட்ச்சில் பதிவு செய்து பணி ஓய்வு பெற்றார். அத்துடன், சரித்திர முக்கியத்துவம் பெற்ற துறைமுக நகரம் காலி!
கிளம்பலாமா?
வாருங்கள். புதுக்கோட்டையில் வெளிப்புறச் சாலையில் செல்வது போல ஒரு உணர்வு. நீண்ட பயணம். நீங்கள் இரவு நேரத்தில் அந்தப் பக்கமாகச் சென்றால் நீங்கள் காட்டு விளங்குகளை சாலையைக் கடந்து போவதை நீங்கள் கவனிக்கலாம்! உங்களுக்கும் என்னை போல் காட்டு மிருகங்களை கண்டால் டர்ர்ர் என்றால், நீங்கள் பேசாமல் பகல் நேரத்தில் செல்லலாம் ☹☹. வழியே கசக்கச என்று இருந்தது. நாங்கள் போன பாதையில் சில குளங்கள், முள்காடுகள், வயல்கள் இருந்தன.
அம்பாந்தோட்டை துறைமுகம்
காலிக்கு போகும் வழியில் நாங்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் வழியாக சென்றோம். அந்தத் துறைமுகத்தைப் பற்றி நானும் என் தந்தையும் நிறைய பேசி இருக்கிறோம். இது ‘இலங்கைக்குள் ஒரு குட்டி சீனா’. ஏன் என்றால் மொத்த முதலீடு US$3,61,00,00,000யில் 85% சீன வங்கியி நிதி உதவி. அதுவுமின்றி இந்த துறைமுகத்தைக் கட்டியது சீன நிறுவனங்கள் மட்டுமே. அம்பாந்தோட்டை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுக்காக இலங்கை சீனாவுடன் 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று படித்திருக்கிறேன். துறைமுகம் முழுக்க சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கையில் எங்கும் காணமுடியாதபடி, இஙகு மட்டும் நான்கு வழிச்சாலை உள்ளது.
இருந்தாலும் இது ஒரு பெரிய துறைமுகம். பளு தூக்கும் எந்திரங்களை (cranes) நாங்கள் கண்டோம். அதற்குப் பின்னால் விரிந்திருந்த இந்திய பேராழியையும் கண்டேன். இந்த துறைமுகத்தைத் திறந்து வைத்தவர் மஹிந்த ராஜபக்க்ஷ. என் தந்தை அதை கடந்து போகும் போது நிறைய பேசினார். கேட்கமுடியாமல் நான் அப்படியே அவர் மடியில் படுத்து உறங்குவது போல நடித்தேன் 😊.
அப்படியே கொஞ்ச தூரம் சென்றால் வீரகெட்டிய நகரை அடையலாம். இது மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர். அவருடைய வீட்டையும் காணலாம். அந்த ஊரில் நிறைய D.A ராஜபக்ஷவின் சிலையும் மஹிந்த ராஜபக்ஷவின் சிலையும் அங்கு இருந்தன.
அங்கிருந்து நமது பயணம் இன்னும் அழகாகிறது. இடது பக்கம் பேராழி. வலது பக்கம் கிராமங்கள், காடுகள், ஆறுகள். வளைந்து வளைந்து சென்றது சாலை. இது பழங்கால ரத்தின பூமியாம். பூமியில் இருந்து விலை உயர்ந்த கற்கள் அகழ்ந்து எடுத்தார்களாம்.
ஒரு நல்ல இடத்தில் இறங்கி, கடற்கரையில் இளைப்பாறிக் கொண்டோம்!
பிறகு மத்தார நகரை அடைந்தோம். கடற்கரையில், இருந்த ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை எடுத்துக்கொண்டோம். மாலை நேர சாலை நெரிசல் இங்கிருந்து தொடங்கியது.
எப்படியோ இப்பொழுது நாம் காலி வந்து சேர்ந்து விட்டோம். நீங்கள் சற்று நேரம் கடல் கரையில் விளையாடிக் கொண்டு இருங்கள். நான் என் நீச்சல் உடையை அணிந்து வருகிறேன்.
வாருங்கள். கொஞ்சம் விளையாடி விட்டு விடுதிக்குத் திரும்பிச் செல்லலாம்.
உப்பு நீர் வேர்க்கிறது. வாயெல்லாம் கரிக்கிறது. என்னால் முடியவில்லை. Darrrrrrrr.. என்ன ஏதோ சத்தம் வருது. அய்யோ! என் நீச்சல் உடை கிழிந்துவிட்டது! நான் ஜட்டி கூட போட வில்லை!! யாரும் பார்ப்பதற்கு முன் நான் விடுதிக்கு போகிறேன்.
விடை பெறுவது,
மு. கண்ணன்
சார்வரி வருடம், வைகாசி 4, திருவள்ளுவர் ஆண்டு 2051
அமைதி மற்றும் பசுமையான நகரம் எல்ல. நம் ஊர் போல் அங்கு மாசு இல்லை. ஒரு இடத்திலிருந்து தூரத்தில் இருக்கும் ஒரு இடத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். அங்கு பெரும்பாலான மக்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்க்க முடியவில்லை. அங்கு சிறிய தூரம் செல்ல அவர்கள் மிதி வண்டி உபயோகப் படுத்துகிறார்கள்.
எல்லவில் இருந்து கிளம்புவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. எங்கள் பணியாளர் அதிகாரி இலங்கை மீண்டும் வந்தால், அந்த விடுதியில் தான் தங்க வேண்டும் என்றார். நாம் கிளம்புவதற்கு முன் நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.
நாங்கள் நேற்று போல உண்டோம். (ஆனால் அந்த இட்லி என்னும் கல்லை மட்டும் சாப்பிட வில்லை 😊😊)
உண்டு முடித்தோம். சரி, வாருங்கள் யால தேசிய வனத்திற்குக் கிளம்பலாம்!
இப்பொழுது நாம் எல்லவிலிருந்து நாம் வெளி நகரம் வந்து விட்டோம். இந்த பாதையில் வருவது மிக நன்றாக இருக்கிறது. எல்ல மலை பிரதேசத்திலிருந்து அரை மணி நேரத்தில் கீழே வந்துவிட்டோம். ‘வரும்வழியில் பனிமலையில்’ ராவணா நீர்வீழ்ச்சியை கண்டோம்.
உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர். ஆபத்தான வழுக்கும் பாறைகள். இந்த அருவி நிறைய பேரைப் பலிகொண்டதாக துஷார கூறினார். நீர் ஜில்லென்று இருந்தது. அருவிப் பக்கம் போகக்கூடாது என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள். அருவியின் பிரம்மாண்டமான காட்சியைக் கண்டு, புகைப்படம் எடுத்துவிட்டு, நீரில் விளையாடி பின்னர், கிடைத்த நீரை எடுத்து தலையில் தெளித்துவிட்டு, கிளம்பிவிட்டோம்.
நாங்கள் மலையில் இறங்கிய பிறகு வெல்லவாய என்ற ஊரைக் கடந்தோம். அன்று புத்த மதத்தினருக்கு ஏதோ சிறப்பான நாளாம். அங்கு நிறைய மக்கள் திரண்டு இருந்தனர். அங்கே சிறுவயது புத்த துறவிகளைக் கண்டோம். அவர்கள் ஊருக்குள் சென்று மடத்தில் அன்னம் பெற்றுக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களைக் கடவுளாகப் பாவித்து உணவு மற்றும் பழங்களைக் கொடுத்தார்கள். துஷார ‘அந்த சிறுவயது புத்தர் பிக்குகள் புத்தர் மடாலயத்தில் இருக்கும் வயதான பிக்குகளுக்காக உணவு எடுத்து செல்வர்’ என்று கூறினார்.
நீண்ட பயணத்திற்குப் பிறகு திஸ்ஸமஹாராம சென்றடைந்தோம். வரும் வழியில் சீனப் புகழ்பெற்ற அம்பாந்தோட்டை வானூர்தி நிலையம் பற்றிய மைல் கற்களைப் பார்த்தோம்.
கதிர்காமம் கோயில் 18 கிமி என்று ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தோம். அது என் அம்மா கண்களை உறுத்தி இருக்க வேண்டும். ஏன் என்று அப்புறம் சொல்கிறேன்.
ஓரிடத்தில் இயற்கை அழைப்பிற்காக வண்டியை நிறுத்தினோம். அங்கே குண்டுமணிகளைப் பார்த்தோம். என் தம்பியின் பள்ளி வளாகத்தில் கூட இருந்தது. எங்கள் வீட்டுக் கொள்ளையிலும் முன்னர் இருந்தது என்று என் தந்தை கூறினார். அதில் கொஞ்சம் பிடுங்கி பையில் போட்டுக்கொண்டோம். அழகான நஞ்சு மணி!
திஸ்ஸமஹாராம நகரில் மதிய உணவிற்கு ஒரு சுற்றுலா உணவகத்திற்குச் சென்றோம். இந்த உணவகத்தில் நாங்கள் வயிறு நிறைய உண்டோம்! நானும் அம்மாவும் சப்பாத்தி கேட்டோம். என் அப்பா உள்ளுர் rice & curry கேட்டார். கடைசியில் மாற்றிச் சாப்பிட வேண்டி ஆகிவிட்டது.
நாங்கள் இலங்கையில் சாப்பிட்டதிலேயே அதிக விலை உயர்வான சாப்பாடு அது. கொழும்பு நட்சத்திர ஓட்டல் உணவகத்தைக் காட்டிலும் அதிகம்! பர்சு பழுத்துவிட்டது.
நாங்கள் உண்ட பின் யால தேசிய வனத்திற்க்குச் சென்றோம்.
யாலா தேசிய பூங்கா அமைதியாக இருந்தது. நாங்கள் வந்த வண்டியை உணவத்தியே நிறுத்திவிட்டு, ஒரு தனியார் ஜீப்பை எடுத்துக்கொண்டு, அந்த நாளின் மீதியை வனத்தில் கழித்தோம்.
யானைகள், முதலைகள், பறவைகள் போன்றவற்றை நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பார்த்தோம்.
சிறுத்தையைப் பார்த்துவிட்டு சோம்பல் முறிப்பது எனது முக்கிய இலக்கு :D.
நீங்கள் சீக்கரமாகவே விலங்குகளுடன் சூழப்படுவீர்கள். நீங்கள் சிறுத்தையைப் பார்க்காத வரை அந்த வனம் அழகாக இருக்கும். பார்த்துவிட்டால்….
வரண்டு போன வனம் இது. முள் காடு. கண்டியிலிருந்து, எல்ல வரை ஜில்லென்று இருந்த பிறகு, அதற்குத் தலைகீழான தட்பவெப்பம். வியர்த்துக் கொண்டியது. வெயில் உரைத்தது. புழுதி பறந்தது. கணேசர் தரிசனம் கிடைத்தது 🐘🐘🐘.
நாங்கள் பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பும் போது பொழுது சாய்ந்துவிட்டது. இரவு உணவிற்காக தயிர், வாழைப் பழங்கள் வாங்கிக் கொண்டு எங்கள் விடுதிக்கு சென்றோம். எங்கள் இராத்திரி உணவிற்காக வெந்த சோறு மட்டும் வாங்கிக் கொண்டோம். இலங்கைத் தயிர் ஊற்றி நீங்கள் அவசியம் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு முடித்த பின் உங்கள் கையில் வெண்ணெய் பிசுபிசுக்கும். மிக நல்ல உணவு 😋😋😋. ரூஸியோ தனி!
ஒரு மலையின் நடுவில் ஒரு சிறிய தோட்டத்தைக் கொண்ட ஒரு விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம்.அந்த தோட்டத்தில் சிறிய ரோஜாப்பூ முதல் கற்றாழை வரை அங்கு இருக்கின்றன.சிறந்த நடைக்குப் பிறகு சிறந்த பார்வை. தோட்டம் அழகாகவும், மேகங்களுடன் எல்லாம் கனவு போல்இருந்தது. அங்கு உள்ள எல்லா ஊழியர்களும் நட்பாகவும் உதவியாகவும் இருந்தனர்.
அவர்களில் அதிகாரி என்று ஒருவர் – எங்களுக்கு எல்லவில் எங்கு செல்லலாம், என்ன செய்வது போல சில ஆலோசனைகளை வழங்கினார். பயனுள்ளவர்! மொத்தத்தில் இந்த விடுதியில் தங்கிய எனக்கு இது ஓர் புதிய அனுபவமாக இருந்தது.சரி, இந்த விடுதியைப் பற்றி நாம் பாத்து விட்டோம். இனி நாம் இந்த இனிய நாளை தொடங்கலாம்!இன்றுநான்உங்களைஇங்குசந்திப்பதுஎனக்குமிக்கமகிழ்ச்சிமற்றும் புத்துணர்ச்சியைத் தருகிறது!இன்று என்ன செய்யலாம்?
விடியற்காலையில் லிட்டில் ஆதம்ஸ் பீக் எனப்படும் சிவனொலிபாதத்தில் ஏறப் போகிறோம்.
பிறகு ஒன்பது கண் பாலத்திற்குப் போகலாம்
சரி.நான் போய் பல் துலக்கி வந்து விடுகிறேன்.
வாருங்கள் சிறிய சிவனொலி பாதத்தில்ஏறலாம்.
Little Adams Peak (சிவன் ஒலி பாதம்)2,234m உயரம். அதுஸ்ரீபாதாஎன்றுஇலங்கையில்கூப்பிடுவார்கள்.இப்பொழுதுமணி காலைஐந்து. நம்பகதிர் எழுகையைப் பார்க்கப்போகிறோம்.
Little Adams Peak (சிவன் ஒலி பாதம்)ல் மலை வழிகளும் படிக்கட்டுமாகவும் இருந்தது. பாதை முழுவதும் இருட்டாக இருந்தது. என் தம்பி அஞ்சுவான் என்று நினைத்தோம். ஆனால் அவன் அஞ்சவில்லை. இருளில் கைபேசி ஒளியில் நாங்கள் நடந்து சென்றோம். ஊர் இன்னும் எழவில்லை. ஆழ்ந்து உறங்குகிறது.
செல்லும் வழி ஏகாந்தமாக இருந்தது. ஒரு ஈ காக்காய் இல்லை. சிகரத்தின் உச்சிக்கு நடந்து செல்ல அதிக நேரம் எடுத்தது. மூச்சு வாங்கியது. வியர்த்து வழிந்தது. ஆனால் நான் கண்டவை அனைத்தும் அற்புதமான காட்சிகள்! தேயிலைத் தோட்டத்தின் ஊடாக ஒரு அழகிய நடை.
மலை உச்சிக்கு ஏறிவிட்டோம். உச்சியில் ஒரு புத்தரின் சிலை இருந்தது. நீங்கள் மேலே வந்தவுடன் காட்சிகள் ஆனந்தம் தரும். அங்கு நீங்கள் காலையில் சென்றால் கதிர் எழுகையைக் காணலாம், எல்ல பாறையையும் காணலாம். “ஒரு கல்லுல இரண்டு மாங்கா”. நீங்கள் காலையில் செல்வது ஒரு நல்ல முடிவு என்று துஷார கூறினார். நீங்கள் அங்கு செல்லும்போது நீங்கள் மலை ஏறுவதற்கான காலணிகளை மறக்காதீர்கள் (Hiking Shoes).
அங்கு இரண்டு மூன்று வெளிநாட்டவர்கள் வந்து சேர்ந்தனர். அங்கு எப்பொழுதும் பல பறகலங்களை (drone) பயணிகள் பறக்கவிட்டு நிழற்படம் எடுத்துக் கொள்வார்கள் என்று எங்கள் பயண வழிக் காட்டி துஷார அவர் சொன்னார். அப்படி இருந்த இடம் அன்று சந்தடி இல்லாமல் இருந்தது.
சில நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம். திரும்பி வரும் வழியிலும் யாரும் எதிர்படவில்லை. ஒரே ஒரு வயதான தாய்லாந்து தம்பதிகளைத் தவிர.
கடும் பசியுடன் இறங்கி வந்து, குளித்துவிட்டு கீழே போய் ஏதாவது நல்ல உணவு இருக்கும் என்று எண்ணிச் சென்றால், இட்லி இருந்தது. ‘ஹய்யா’, என்று நான் இட்லி எடுத்து என் தட்டில் வைத்து கண்ணை முடி நினைத்தேன் – ‘ஹப்பா இலங்கை வந்தால் இந்தியா சப்பாத்தி கிடைக்குமா என்று நினைத்தாயே கண்ணா! இப்போ இட்லியே கிடைத்துவிட்டது பூந்து விளையாடு’ என்று நினைத்து வாயில் வைத்தால் இட்லி உடைந்தது. ‘என்னடா நம்ம பசில கல்லை சாப்பிட்டோமா?’ என்று நினைத்தேன். ஆனால் அது இடலிங்க . இட்லி உடைந்தது. இட்லிய கல்லு மாதிரி ஊத்தி வெச்சுறுக்காங்க. அந்த இட்லிக்கு என் அம்மா ஊத்தும் இட்லி பரவாயில்லை என்று எனக்கு தோன்றியது 😦 😦 . வெளியூர் சென்றால் உள்ளுர் உணவை உண்ண வேண்டும் என்று எனக்கு அப்பொழுதுதான் மண்டைக்கு எட்டியது.
ஒன்பது கண் பாலத்திற்கு செல்லலாமா? தயாரா?
பாலத்திற்கு செல்வதற்குப் பல பாதைகள் உள்ளன. நாம் காட்டு வழியாக செல்லப் போகிறோம். காட்டுக்குள்ள சென்றால் நீங்கள் ஆபத்தான விலங்குகள் பார்க்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
வயல் வரப்பு, ஒத்தயடிப் பாதை, பாதை மறித்து விழுந்து கிடக்கும் மரம், பாதையை ஒட்டியே வரும் சிறு ஓடை, அதில் ஓடும் தெளிவான நீர், ஆங்காங்கே ஊர்ந்து செல்லும் அட்டைகள், ஓரத்தில் புதர்கள், உயர்ந்து வளர்ந்த மரங்கள் என்று இந்த நடை பயணம் சாகச உணர்வைத் தந்தது.
பாலம் நன்றாக இருக்கிறது. தேவதை கதை போல இருந்தது. சற்று கீழே பாருங்கள் பள்ளத்தாக்கு!
நான் ஒரு 500m ரயில் தளத்தில் ஓடினேன்! நான் சென்று வர சுளையாக பத்து நிமிடம் ஆனது. ரயில் வரும் நேரம். என் அம்மா பயந்து விட்டார்!
பாலத்தின் வழியாக நடந்து ஒரு ரயிலுக்காக காத்திருந்தோம். ரயில் வந்தது. நாங்கள் பாத்தது ஒரு சிவப்பு ரயில். ஆனால் அதை பார்ப்பதற்க்கு நாங்கள் ஒரு மணி நேரம் கிட்ட காத்திருந்தோம்! நீங்கள் பாலத்திற்கு வந்தால் ஒன்றில் இருந்து ஒன்னரை லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் சிறிதளவு தான் தண்ணீர் கொண்டு வந்தோம். அதனால் நாங்கள் இளநீர் குடித்தோம். எனக்கு இரண்டு. மற்றவர்களுக்கு ஒன்று. இதை வைத்து நினைத்துப் பாருங்கள் எனக்கு எவ்வளவு தாகமாக இருந்திருக்கும் என்று!
பக்கத்தில் ஒரு காத்திருக்கும் இடம் இருந்தது. அங்கு உட்கார இடம் இருந்தது மேலும் அங்கு நுவரெலியாவைப் போல ஒரு சிறிய உருளைக்கிழங்கு தோட்டம் இருந்தது.
மதிய உணவிற்கு ஒரு உள்ளூர் உணவகத்திற்குச் சென்றோம். அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது – அங்கு கூட்டமே இல்லை. எங்கள் தயிர் சாதம், பருப்பு கறி, தேங்காய் சாம்பல், உருளைக்கிழங்கு வறுவல், எல்லா காய்களும் போட்டு ஓரு கறியும் வாங்கினோம். ஆளே இல்லை. ஆனாலும் சாப்பாடு தாமதமாகத்தான் வந்தது. நாங்களும் களைப்பாக இருந்ததால் ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது. (காலை இட்லி போன்று இல்லை!!)
சரி நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு ஒரு வலுவான உறக்கம்.
மாலையில் திரும்ப ஊருக்குள் சென்று அதே கடையில் தயிர், தேங்காய் சாம்பல் வாங்கிக் கொண்டோம். அமைதியான இரவில், தூரத்தில் மலை நகரில் விளக்குகள் ஒளிர்வரைப் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது இருட்டுக்குள் செல்லும் மலை ரயிலைப் பார்த்துக்கொண்டே, சில்வண்டுகளின் சத்தங்களுடன் இரவு உணவும் இனிதாக அமைந்தது.