இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3


படிப்படியாக நான் எனது புது வாழ்க்கையில் செட்டில் ஆனேன். தேவியின் (பார்க்க பகுதி 2) உதவியுடன் நான் ஒரு வீட்டைக் கண்டடைந்தேன். பூனை பிராண்டும் தூண் ஒன்றை பக்கத்திலிருந்த பிராணிகள் கடையிலிருந்து வாங்கினேன். வர்ணம் பூசப்பட்ட ஜாவானிய கேபினெட் ஒன்று வாங்கினேன். என் மகனை ஆங்கிலம், சீனம் மற்றும் பாஸா இந்தோனேசியா ஆகிய மொழிகளைக் கற்றுத்தரும் மும்மொழிப் பள்ளியில் சேர்த்தேன்.

கட்டுரைத் தொடர்
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

நாளடைவில் நானே பாஸா வகுப்புகளை (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Bahasa_Indonesia) நடத்த ஆரம்பித்தேன். இந்தோனேசியாவின் தேசீய மொழியான இது மலாய் மொழியில் ஒரு தரப்படுத்தப்பட்ட வடிவம் மற்றும் சமஸ்கிருதம், பாரசீகம், அரபி மற்றும் ஆங்கிலத்தின் ஒலியமைப்பைக் கொண்டது. Bahasa என்பதே ‘பாஷா’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் வழித்தோன்றலே. கடை பணியாளர்கள். நாடோடி வியாபாரிகள் தங்கள் தினசரி உரையாடல்களில் ‘மனுஷ்ய’ (மனிதன்), ‘காரண’ (காரணம்), ‘கஜா’ (யானை) போன்ற சொல்லகராதியிலிருந்து உயர்ந்த சொற்களைப் பயன்படுத்துவதைக் காணும்போது நாம் ஜகார்த்தாவில் நம்மை ஒரு பாமரனாகவே உணரவே முடியும்.

நான் பெயர்ச்சொல் மற்றும் உரிச்சொற்களை எளிதில் தொகுத்துக்கொண்டேன். ‘உத்தர’ (வடக்கு), ‘மஸ்ஜித்’ (மசூதி), ‘ரொட்டி’ (ரொட்டி பரோட்டா), ‘அஸ்லி’ (உண்மையான) மற்றும் ‘துனியா’ (உலகம்). இவையெல்லாம் இந்திய சொற்களே.  இந்தியாவும் இந்தோனேசியாவும் வெறும் சொற்களின் ஒலிகளை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. எங்களது கலாச்சாரமும் வரலாறும் ஆழ்ந்த முறையில் பின்னிப் பிணைந்திருந்தது என்பதை நான் விரைவாக உணர்ந்துகொண்டிருந்தேன். எங்களது நாகரீகங்கள் தம்மை விசாலமானதென்றும், கலவைகளின் தாக்கங்களினாலும் ஆனதென்றும் நிருபித்துள்ளன. யாத்ரீகர்கள், வியாபாரிகள், போர்வீரர்கள், அரேபிய, பாரசீக, சீன மற்றும் ஐரோப்பிய காலனியர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் இருக்கும் இந்த இரு நாடுகளிலும் ஹிந்து, புத்தம், அமானுஷ்யம், இஸ்லாமியம் மற்றும் கிறித்தவ சிந்தனைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அவர்களின் சிக்கலான வரலாற்றுடன் இணைந்துள்ளன. இந்தியா மற்றும் இந்தோனேசியா பெரும்பாலும் அடிப்படைவாதம் கொண்டு எதிர்ப்பைக் காட்டும் மனோபாவம் கொண்டவை. அதற்கு முரணாக, உள்நாட்டில் வெளிநாடுகளின் தாக்கத்தையும், பல மதங்களை வளர்த்தும், சகிப்புத்தன்மைப் பண்பாட்டையும் பெற்றுள்ளன.

ஜகார்த்தா நகரம் ஜாவா (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Java) என்கிற இந்னோசியாவின் (அல்லது உலகத்தின்) அதிக மக்கள்தொகை கொண்ட தீவில் அமைந்துள்ளது. அதுவே இந்த தேசத்தின் அரசியல் மற்றும் கலாச்சார மையமுமாகும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிக்கிடையேயான அதிகப்படியான வியாபாரத்தின் காரணமாக ஜாவா இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஹிந்து-புத்த கலாச்சாரத்தின் தாக்கத்தை அதிகமாகப் பெற்றது. கிபி 7ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவின் மேற்குத் தீவுகளில் ஹிந்து-புத்த அரசுகள் அமைந்தன.

இந்த உண்மை இந்தியர்களின் சில பிரிவுகளை மார்பு அதிர வைத்தது. என்னுடைய கட்டுரையிலோ அல்லது பல ஆண்டுகளாக பதியும் சமூகவலைப் பதிவுகளிலோ இந்தோனேசிய கலாச்சாரம் அல்லது சமூகத்தின் நற்பண்புகளைப் பற்றி எழுதும்போது, ‘இந்தோனேசியாவின் நற்பண்புகள் அனைத்தும் இந்திய தாய்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே’ இந்திய தேசியவாதிகளின் ஹார்மோன் கொப்பளிக்கும் பதில்களைப் பெற்றிருக்கிறேன். ஆனால் ஜாவா மற்றும் சுமத்ராவை இந்திய கலாச்சாரத்தின் சுங்கச்சாவடிகள் என்று எண்ணுதல் தவறானது. தென்கிழக்கு ஆசிய மக்கள் தங்களுக்கென தனிப்பட்ட அம்சங்களையும், தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரத்தையும் பெற்றிருந்தனர். அவர்கள் முதலில் ‘ஹிந்துவாக்கப்பட்டு’ பிறகு 16ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியர்களாக மதமாற்றப் பட்டவர்கள்.

16ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்த அலைகளாக ஐரோப்பியர்கள் தங்களின் வருகையை தீவுக்கூட்டத்திற்கு உணர்த்தினர். போர்த்துக்கீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரித்தானியர்கள் என்று எல்லோரும் தங்கள் வியாபாரத்தை விரிவாக்க முயன்றனர். காலப்போக்கில் 18ஆம் நூற்றாண்டில்  டச்சின் ஒருங்கிணைந்த கிழக்கிந்திய கம்பெனி தன்னை இந்தப் பகுதியின் ஆக்கிரமிப்பு சக்தியாக்கிக் கொண்டது. 1800களில் தீவுக்கூட்டத்தில் உள்ள கம்பெனியின் சொத்துக்கள் டச்சு மணிமுடிக்குத் தாரைவார்க்கப்பட்டன – 1945ல் அவர்கள் விடுதலை ஆகும்வரை (1949ல்தான் டச்சு அதை அங்கீகரித்தது).

(தொடரும்)

ஜெய் ஹிந்த்

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2


ஜகார்த்தாவைக் கண்டுணர்தல்

ஜகார்த்தாவிற்கு நான் குடி பெயர்ந்தது திட்டமிடப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயல்பான ஒன்றாக இருந்தது. என் கணவர் ஜுலியோவிற்கு, ப்ரஸ்ஸல்ஸில் 3 வருட பணிக்குப் பிறகு ஜகார்த்தாவில் ஐரோப்பிய யூனியன் குழுவில் வேலை கொடுக்கப்பட்டது. நாங்கள் அதைப்பற்றி பேசி ஒத்துக்கொண்டோம், ஏனென்றால் இந்தோனேசியாவைப் பற்றி நாங்கள் கொஞ்சம் அறிந்திருந்தோம். இது ஒரு நல்ல வாய்ப்பாக எங்களுக்குத் தோன்றியது.  அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு. அந்த நாடு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட முக்கியமானதாகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அமையும் என்று எங்களது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. கடற்கரை சொர்க்கமான பாலி தீவு, இந்தியாவிற்கு வெளியே இந்து மதம் தழைத்தோங்கியிருக்கும் இடங்களில் ஒன்று என்பதையும் நான் அறிந்திருந்தேன். இந்தோனேசியாவைப் பற்றிய இந்த அற்ப அறிதலுடன் எனது அறிவு வரண்டுவிட்டது.

கட்டுரைத் தொடர்
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

எங்களது மூட்டை முடிச்சுகள், பூனைகள், குழந்தைகளுடன் பாதி உலகத்தைக் கடந்து 18 மணிநேரப் பயணம் செய்து, ஒரு புழுக்கம் நிறைந்த ஆகஸ்ட் பின்மாத மாலையில் ஜகார்த்தாவில் இறங்கினோம். வருடாந்திர லெபரான் (ஈத் பண்டிகை) பண்டிகைக்கான விடுமுறை ஒரு மாத கால நோன்பினை முடிவிற்குக் கொண்டிருந்தது. நகரம் திரும்ப தனது ட்ராபிக் ஜாமில் குமுறிக்கொண்டிருக்கும் வாழ்க்கைக்குள் மீண்டு கொண்டிருந்தது.

Jakarta-Soekarno-Hatta-International-Airport2

ஜகார்த்தாவில் எனது முதல் சில வாரங்கள் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவே இருந்தது. ஒரு கசகசப்பான தாற்காலிகக் குடியிருப்பில் எனது ஒரு ஜெட்லாக் பாதிப்பு கொண்ட 15 மாதக் குழந்தையுடனும், வாய் ஓயாத ஒரு நான்கு வயது குழந்தையுடனும், மனம் கலைந்த பூனைகளுடனும்…. ஒன்றும் சொல்லிக்கொல்கிறமாதிரி இல்லை. ஜுலியோ அலுவலகத்திற்குள்ளும், வயது வந்தவர்களுக்கான வாழ்க்கைக்குள்ளும் மறைந்துவிட, நான் விளையாட்டுக்குழுக்களையும், பள்ளிகளையும், வீட்டுப் பணியாளர்களையும் மற்றும் ஒரு நிலையான வீட்டையும் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தேன்

அந்த நாட்டைப் பற்றி வாசித்துணர எனக்கு மிகக் குறைந்த நேரமே செலவிட முடிந்தது. அழுகும் குழந்தையை சாந்தப்படுத்தவும், டயனோசரின் வகைகளைப் பற்றிய முடிவில்லாக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் வேண்டியிருந்ததால், என் வழியில் நகரத்தை ஆராய மிகக் குறைந்த வாய்ப்புகளே அமைந்தன. ஆகவே நான் கண்டவை சிதறியிருந்த புதிர்பாகங்கள் போல இருந்தன. அவற்றையே ஒன்று கோர்த்து பிற்பகுதியில் தந்திருக்கிறேன்.

முதன்முதலில் என்னை அறிந்தது, பல்வேறு மதங்களை, கலாச்சாரத்தை அடைந்ததற்கான அடையாளமாக உள்ள மனிதர்களின் வெவ்வேறு பெயர்கள். எந்த ஒரு நாளின் செய்தித்தாளைப் புரட்டினாலும், வகை வகையான சாண்ட்விச்களைப் பிரித்து வைத்தார் போல இருக்கும், வேறெங்கும் காண வாய்ப்பே இல்லாத பெயர்கள் அல்லது புனைப் பெயர்கள் – டெடி அன்வர், விஸ்ணு அலி, வெரோணிகா கொலோண்டம், லியனார்டஸ் நியோமேன், ஜியோநவன் முகம்மது.

இந்த பெயர் வைக்கும் கலை அங்கே வளர்ப்பிக்கப்டுகிறது. நாட்டின் தேசீயவாதிகளின் சின்னமாக மோனாஸ் (டெல்லியின் இந்தியா கேட் போல) என்கிற வானில் 100 மீட்டர் உயர்ந்த ஒரு சதுர ஸ்தூபி மத்திய ஜகார்த்தாவில் ஜனாதிபதி மாளிகையின் அருகில் பிராண்டமானதாக இருக்கிறது (பார்க்க விக்கி – மோனாஸ்).  இந்தோனேசியாவின் அதிகார அடையாளத்தைத் தெளிவாகச் சொல்லும் இதயத்துடிப்புபோல அமைந்துள்ளது.

monas

ஒரு வாரநாளின் காலைப்பொழுதில் நான் மோனாஸைச் சுற்றிப் பார்த்தேன் (குழந்தை புதிதாக பணியமர்த்தப்பட்டிருந்து ஆயாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது). இந்த நினைவுச் சின்னத்தின் தென்மேற்கு மூலையில் ஹிந்து கடவுளான கிருஷ்ணன் ஒரு மிகப்பெரிய சிலையாக இருந்து ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார், பாண்டவ இளவலான அர்ஜுனனை தேரில் அழைத்துக்கொண்டு, விரையும் குதிரைகளுடன் போருக்குச் செல்வது போல! அதற்கு நேர் எதிரில் ஜகார்த்தாவின் பெரிய மசூதி, இஸ்திக்லாலின் ஸ்தூபி (பார்க்க விக்கி – இஸ்திக்லால் மசூதி) மற்றும் நகரின் கத்தோலிக்க தேவாலயத்தின் உருக்கு இரும்பால் செய்யப்பட்ட சர்ச் டவரும் வான்வெளியைக் கூட்டாகப் பகிர்ந்திருந்தன.

chariot_monas_jakarta_indonesia

அந்த பின்மதியத்தில் நான் வசிக்கக்கூடிய வீடுகளைக் காட்டுவதற்கு வீடு புரோக்கரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அவள் பெயர் Dewi (தேவி) என்ற பெயருடைய ஒல்லியான இளம் இஸ்லாமியப் பெண் – மேற்கத்திய பாணியில் உடை, பாவனையுடன் சாடின் கவுன் அணிந்திருந்தாள்.  அப்போதுதான் ஒரு திருமணத்திற்குப் போய் திரும்பியிருப்பதாகச் சொன்னாள். நாங்கள் வீடுக்காக அலைந்து கொண்டிருந்த போது ஒரு பாழடைந்த வீட்டைக் கடந்தோம். அந்த வீட்டில் பேய் குடிகொண்டுள்ளதாக தேவி சொன்னாள். ஒரு இஸ்லாமியப் பெண் – ஹிந்துப் பெயர் வைத்திருக்கிறாள் – ஐரோப்பிய உடை அணிந்திருக்கிறாள் – பேய்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாள். ஒரு வினோத மனச்சிதைவாகத் தோன்றலாம். ஆனால் அது மாதிரி ஏதும் கிடையாது. தேவி (Dewi) ஏனைய இந்தோனேசியர்களைப்போன்றே தானும் ஒரு முரண்பாடாக இருக்கிறோம் என்றே அறியாதவள்!

(தொடரும்..)

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1


Forget China, India Should Look towards Indonesia என்று பல்லவி அய்யர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

மூலக்கட்டுரை – https://in.news.yahoo.com/forget-china–india-should-look-towards-indonesia-060805127.html

கட்டுரைத் தொடர்
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2
இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3

(முடிந்த வரை எளிமைப்படுத்தி உள்ளேன். பொருள் மயக்கம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். – பாண்டியன்)

பொதுவாக இந்தியர்கள் பலரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் அல்லர். ஆனாலும் இந்தியாவின் “தனித்தன்மை” என்கிற நம்பிக்கையில் இவர்கள் காணக்கிடைக்காத ஒருமித்த நம்பிக்கை கொள்ள முயல்பவர்கள். வலது சாரிகள், இடது சாரிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் என்று அனைத்து தரப்பினரும் தழுவிக்கொண்ட ஒரு நம்பிக்கை – இந்தியா “தனித்தன்மை” வாய்ந்த வேறுபாடுகள் கொண்டது, பறவைகள் பலவிதம் என்று பாடக்கூடியது, ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று முரண்படக்கூடியது; பெரியது; சகிப்புத்தன்மை கொண்டது மற்றும் சிக்கலானது.

ஒரு உணர்வுப் பூர்வமான கல்வியைக் கற்ற எனக்கு, இந்தியாவின் “தனித்தன்மை” வாய்ந்த மதநல்லிணக்க வாழ்வுமுறை சொல்லித்தரப்பட்டது. பல ஆண்டுகளாக நான் பெற்ற தண்டனை இது. இந்தியாவைத் தொடர்ந்து வதைத்து வரும் ஏழ்மை, பெண் வெறுப்பு, சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஏனைய மனிதத் தன்மையற்ற செயல்களுக்குப் பூசப்பட்ட ஒரு வகையான மருந்து இது.

பத்தாண்டு காலம் நான் சீனாவிலும், பிறகு ஐரோப்பாவிலும் பத்திரிகையாளராகப் பணியாற்றியது இந்த நம்பிக்கையைத்தான் வளர்த்தது. Smoke and Mirrors என்கிற சீனாவைப் பற்றிய நூலில், நான் இந்தியாவையும் சீனாவையும் பல்வேறு அளவுருக்களில் ஒப்பீடு செய்திருப்பேன்.  இரு நாடுகளும் மகத்தான புவியியல் அமைப்பைக் கொண்டவை. தாராளமான மக்கள்தொகை கொண்டவை மற்றும் பழங்கால வரலாற்று நாகரீகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை. இருந்தாலும் ஒரு இந்தியனாக என் பார்வையில் – ஒரே அதிகாரப்பூர்வ மொழி (இந்தியாவில் 23 அதிகாரப்பூர்வ மொழிகள் இருக்கின்றன), தரப்படுத்தப்பட்ட ஒரே எழுத்து வடிவம், ஒரே பெரும்பான்மை இனம், சீர்மையை அல்லது ஒரே தன்மையை திணிக்கும் அரசியல் மனோபாவம் எல்லாம் சேர்ந்து – சீனா ஒரே சீரான நிறுவனமாகத் தெரிகிறது.

அந்த நூலுக்கு நான் எழுதிய முடிவுரையில், முன் எப்போதுமில்லாத சீனாவின் பொருளாதார சாதனைகளைப் பாராட்டியும் ஆராய்ந்தும் எழுதுவதில் நேரம் செலவிட்டேன். இதில் இந்தியா வெற்றி பெற தெளிவாகத் தவறியிருந்தது. அப்படி இருந்த போதிலும், இந்தியாவின் ‘வரலாற்றுப் பூர்வமாக ஈடு இணையற்ற’ சரித்திர சாதனையையும் உலகம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்று வாதிட்டிருப்பேன். முரண்பாடுகளைக் கடந்து இந்தியா ஜீவித்திருப்பது – புவியியலினாலோ, மொழியினாலோ, மதம் அல்லது இனத்தினாலோ அல்ல – பன்முகத்தன்மைக்கான வாய்ப்பினாலோ அல்லது விருப்பத்தினாலோதான் என்று தேன் ஒழுக மழுப்பி எழுதியிப்பேன்.

2009ல் நான் ஐரோப்பிய யூனியனின் தலைநகரான ப்ரஸ்ஸல்சுக்கு இடம்பெயர்ந்தேன். ஐரோப்பாவிற்கான பத்திரிக்கையாளராக அடுத்த மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளுக்கான வரலாறு, இப்படி அவர்களது சிக்கலான மக்கள் வேறுபாடுகளைக் கலைந்து, ஒரு மொழி, ஒரே மதம் அடிப்படையிலான நாடுகளானது என்பதைக் கண்டறிந்தேன். மக்கள் வேறுபாடுகளைக் கலைந்து எளிமையாக்கினால்தான் ஒரு அரசியல் அலகு வாழமுடியும் என்கிற கருத்திலியற்கு 1947லிருந்து வலுவான மறுப்பாக இந்தியா விளங்கி வருகிறது.

Punjabi Parmesan என்கிற எனது அடுத்த நூலில், இந்தியா ஐரோப்பிய யூனியனுக்குக் கொடுக்கவேண்டிய சிலவற்றை வைத்துள்ளது என்று முடித்திருப்பேன். வெளித்தோற்றத்தில் வேறுபட்ட பன்முகத்தன்மை கொண்டவற்றை வைத்து நன்கு இயங்கக்கூடிய, பொதுவான அடையாளத்தை வெற்றிகரமாக உருவாக்க முடியும் என்று பொருள் தரக்கூடிய வகையில், நான் இந்தியாவை முன்னோடி ஐரோப்பா என்று அழைத்தேன்.

ஆனால் 2012களின் மத்தியில் நான் ஜகார்த்தாவிற்கு இடம் பெயர்ந்த போது, உலகத்தோர் அறியாமையில் மூழ்யிருப்பதை உணர்ந்தேன் – இந்தியர்கள் உட்பட. வளர்ந்து கொண்டிருக்கும் சீனா மற்றும் பணக்கார மேலைநாடுகளின் பால் நமக்குள்ள ஆவேசம், நமது கலாச்சாரப் பங்காளி மற்றும் மக்களாட்சி அண்டை நாடான இந்தோனேசியாவை மறைத்துவிட்டது. இந்தியாவைப் போன்றே பல கோட்பாடுகளையும் தேர்ந்து எடுத்துக்கொள்கிற, கட்டுக்கடங்காத, சகிப்புத்  தன்மை வாய்ந்த, பரந்து விரிந்த சிக்கலான நம்பமுடியாத அமைப்பைக் கொண்டது இந்த நாடு. சிந்தியா என்கிற பொருத்தமற்ற கலவைக்குள் இந்தியாவும் சீனாவும் திணிக்கப்பட்டபோதும், இந்த நாடு மிக அறிதாகவே இந்தியாவுடன் தொடர்புடையதாக காட்டப்படுகிறது.

ஜகார்த்தாவைக் கண்டுணர்தல்….

Indonesia Image (c) http://www.operationworld.org
Indonesia – Image (c) http://www.operationworld.org

(தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்

சீனா – விலகும் திரை – IV (இறுதி)


சீனா – விலகும் திரை
ஆசிரியர்பல்லவி அய்யர்
தமிழில்ராமன் ராஜா
பரிந்துரைத்தவர்தமிழ் பயணி
பதிப்புகிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-164-8

Thanks Dinamani – http://dinamani.com/blogs/submit_blog_article/article1479823.ece

china01

Read More »

சீனா – விலகும் திரை – III


சீனா – விலகும் திரை
ஆசிரியர்பல்லவி அய்யர்
தமிழில்ராமன் ராஜா
பரிந்துரைத்தவர்தமிழ் பயணி
பதிப்புகிழக்கு பதிப்பகம், 2009
பிரிவு – அரசியல்
ISBN 978-81-8493-164-8

china01

Read More »