“Merry Christmas!” என்ற வாழ்த்து எப்படி ஆரம்பித்தது?


பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது என்று தெரிந்ததும்….

சிலிகான் ஷெல்ஃப்

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “A Christmas Carol” குறுநாவலால்தான். அதற்கு முன்னும் இப்படி வாழ்த்து இருந்ததா என்று சரியாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்த குறுநாவல் வெளிவந்த பிறகுதான் இந்த வாழ்த்து பிரபலம் ஆகி இருக்கிறது.

குறுநாவல் 1843-இல் – சரியாகச் சொன்னால் டிசம்பர் 19, 1843-இல் – வெளியாகி இருக்கிறது. டிக்கன்ஸ் இதை கிறிஸ்துமஸுக்காகவே எழுதினார்.

டிக்கன்ஸ் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் அவரது எழுத்து மெலோட்ராமா நிறைந்தது (Great Expectations-இன் மிஸ் ஹாவிஷம்). அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் (சிட்னி கார்டன்-சார்லஸ் டார்னே உருவ ஒற்றுமை) விலக்கல்ல. ஆனாலும் அவரது எழுத்து வீரியம் வாய்ந்தது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அவ்வளவாக பேசப்படாத, அவரது எழுத்தில் கொஞ்சம் வித்தியாசமான, Hard Times.

A Christmas Carol புத்தகத்தை முதன்முதலாகப் படித்தபோது எனக்கு 20 வயது இருக்கலாம். Christmas Carol என்றால் என்ன என்று கூடத் தெரியாது, ஒரு பாடலைக் கூட நான் கேட்டதில்லை. என் பொது அறிவு அந்த அளவில்தான் இருந்தது. ஆனால் ஸ்க்ரூஜ் என்ற படிமம் மனதில் இருந்தது, எங்கேயோ கேள்விப்பட்டிருந்தேன். ஒரு புத்தகத்தின் வழியாக, அதுவும் ஏறக்குறைய தீபாவளி மலருக்காக எதையோ எழுதி அது ஒரு படிமம் ஆகவே ஆகிவிட்டதா, இத்தனை தாக்கம் உள்ள எழுத்தா என்று வியந்து போனேன். பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது…

View original post 301 more words

BOMB! | Jim Eldridge


வணக்கம்!
இன்று நான் BOMB! புத்தகத்தை ஒரு மனிதன் வெடிகுண்டைப் பார்த்த மாதிரி பதட்டத்துடன் படித்தேன். இது ஒரு சாகசக் குறுநாவல்.

jim

BOMB!
ஆசிரியர்: Jim Eldridge
படங்கள்: Dylan Gibson
பதிப்பு: Edinburgh : Barrington Stoke, 2011.

இந்தப் புத்தகத்தில் ராப் என்பவன் குண்டை செயல் இழக்க வைக்க வந்தான். ஆனால் டாம் என்பவன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டைச் செயல் இழக்க வைக்கப் போயிருந்தான். அங்கே அவன் தவறான ஒயரை வெட்டியதால் அங்கேயே இறந்துவிட்டான்.

Bomb

ராப் ஒரு இராணுவத்திலிருந்து வந்திருந்தான். அவன் வெடிகுண்டு செயல் இழக்க வைப்பதில் கிள்ளாடி. அவன் AC cleaner வேடத்தில் வந்தான். அது அவனால் செய்ய முடியுமா? அவன் இறந்துவிட்டானா என்பதுதான் கதை.

Kannan

The Knight Of Swords And Spooks | Terry Deary


பிறகு ராபின் ஆர்வமாக ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தான்.
“அந்த எலி, அந்தப் பூனை அப்புறம் அந்த லோவல் என்ற நாய்
எல்லா இங்கிலாந்தையும் ஆள்கின்றன, ஒரு காட்டுப் பன்றியின் கீழ்.”
“அதற்கு என்ன பொருள்?” ஜார்ஜ் வினவினான்.

The Knight Of Swords And Spooks 06

The Knight Of Swords And Spooks – Terry Deary’s Knights’ Tales
ஆசிரியர்: Terry Deary
பதிப்பு: A & C Black Publishers Ltd, லண்டன். முதல் பதிப்பு 2009.
NLBயில் முன்பதிவு செய்ய: The knight of swords and spooks / by Terry Deary ; illustrated by Helen Flook.
கன்னிமாராவின் முன்பதிவு செய்ய: இல்லை
அருஞ்சொற்கள்: கடினமான வார்த்தைகளின் தொகுப்பு

The Knight Of Swords And Spooks 01

இந்தக் கதை இங்கிலாந்தில் நடந்த கதை. இது ஒரு வரலாற்றுக் கற்பனை, சாகசக் கதை (thriller).

முக்கியமான கதாபாத்திரங்கள்

The Knight Of Swords And Spooks - ரிச்சர்டு - III - இங்கிலாந்து அரசர்
The Knight Of Swords And Spooks – ரிச்சர்டு – III – இங்கிலாந்து அரசர்

ஹென்றி டூடர் – கிளர்ச்சியாளன்

The Knight Of Swords And Spooks - சர் தாமஸ் ஸ்டான்லி - அரசர் ரிச்சர்டின் போர்படைத் தலைவன், ஹென்றி டூடரின் தந்தை.
The Knight Of Swords And Spooks – சர் தாமஸ் ஸ்டான்லி – அரசர் ரிச்சர்டின் போர்படைத் தலைவன், ஹென்றி டூடரின் தந்தை.
The Knight Of Swords And Spooks - ஜார்ஜ் - தாமஸ் ஸ்டான்லியின் மகன்
The Knight Of Swords And Spooks – ஜார்ஜ் – தாமஸ் ஸ்டான்லியின் மகன்
ராபின் - ஜார்ஜின் பணியாளன் - The Knight Of Swords And Spooks
ராபின் – ஜார்ஜின் பணியாளன் – The Knight Of Swords And Spooks
சர் ரிச்சர்டு ராட்கிளிஃப் - அரசன் ரிச்சர்டின் நம்பிக்கைக்குரிய தளபதி - The Knight Of Swords And Spooks
சர் ரிச்சர்டு ராட்கிளிஃப் – அரசன் ரிச்சர்டின் நம்பிக்கைக்குரிய தளபதி – The Knight Of Swords And Spooks

இந்தப் புத்தகத்தை நான் கரடி தேன் சாப்பிடுவது மாதிரி படித்தேன்.

ஜார்ஜின் அப்பா ஒரு தேச துரோகி. ஜார்ஜின் அப்பா சர் தாமஸ் ஸ்டான்லிக்கு முதல் திருமணத்தில் பிறந்தவன் ஹென்றி டூடர்.

இந்த நூலில் அழகிய ஓவியங்கள் உள்ளனஎனக்கு இந்தக் கதையில் எல்லாம் பிடித்திருந்தது. என் கற்பனையில் இது வேறு மாதிரி இந்தக் கதை இருக்கும் என்று நினைத்தேன்.

ரிச்சர்டு – III தான் ராஜாவாக அவன் குடும்பத்தையே கொன்றவன். அதில் எல்லாரும் 10 பிள்ளைகள்.

எனக்கு இதைப் படித்தவுடன் ஒரு போர் வீரர் ஆகவேண்டும் என்று மனதில் பதிந்தது. ஆனால் அது பழைய காலத்தில் தான் நடக்கும். அதனால் அது ஒரு நொடியில் அழிந்து போனது. ஆனால் போர் வீரராய் இருக்கும் வாழ்க்கையே தனி. ஆனால் அது ஜெயிக்கும் பக்கம் இருந்தால்தான் உண்டு.

கடைசியில் ஜார்ஜுக்கு என்ன ஆனது? இங்கிலாந்து என்ன ஆனது? என்பதுதான் கதை.

Kannan

Storm | Kevin Crossley-Holland


“அப்புறம் அந்தப் பேய்?” ஆனி கேட்டாள்.

“அது மேலும் கீழும்  போய் சுற்றிவரும். இவ்வழியாக செல்பவர்களை பயமுறுத்தும்” என்றாள் விள்ளா. சகோதரிகள் இருவரும் அமைதியானார்கள், ஒளிர்ந்து கொண்டிருந்த நீர் பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Storm – குறுநாவல்
ஆசிரியர் – Kevin Crossley-Holland பிரிட்டிஷ் மொழி பெயர்ப்பாளர், சிறார் இலக்கிய ஆசிரியர்
விக்கி – Storm (novella)
NLB முன்பதிவு – Storm / Kevin Crossley-Holland ; illustrated by Alan Marks.
கன்னிமாரா முன்பதிவு – NA

Storm Kevin Crossley-Holland 2

வணக்கம் நண்பர்களே,

நான் இன்று புயல் என்று ஒரு கதையைப் பற்றி எழுதப்போகிறேன். எனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஏன் என்றால் –

  1. இது ஒரு பேய் கதை.
  2. எப்படி கதையை விளக்கி எழுதுவது என்று நான் புரிந்து கொண்டேன்.

முக்கியமான கதாபாத்திரங்கள்

Storm Kevin Crossley-Holland 3

  • ஆனி – ஒரு சிறிய பெண்
  • விள்ளா – ஆனியின் அக்காள்
  • திரு. கார்ட்டர் – ஆனியின் தந்தை
  • திருமதி. கார்ட்டர் – ஆனியின் தாயார்
  • திரு எல்க்கின் – வயல் வைத்திருப்பவர்
  • ஸ்டார்ம் – மர்ம மனிதர்
  • குதிரை – ஸ்டார்மின் குதிரை
  • டாக்டர் கிராண்ட் – ஒரு டாக்டர்

Storm Kevin Crossley-Holland 4

எனக்கு 22, 23 ம் பக்கங்கள் மிகவும் பிடித்திருந்தன. ஆனி ஓர் சதுப்பு நிலத்தின் பக்கத்தில் வாழ்ந்து வந்தாள். ஆனியின் சிகை அலங்காரம் ஏபிஜே அப்துல் கலாம் மாதிரி இருந்தது. திரு எல்க்கினின் வயலை குத்தகைக்கு வைத்திருந்தவர், ஒரு சிலரால் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவர் பேயாக அங்கே அலைந்தார். அந்தப் பேய்க்கு கடவுள் மாதிரி ஒரு மனசு.

Storm Kevin Crossley-Holland 5

ஆனி பேய்க்குப் பயப்படுவாள். அவள் ஒரு மோசமான ராத்திரியில் அந்த சதுப்பு நிலத்தைக் கடக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. ஒரு மோசமான புயலில் ஆனியின் அக்காவிற்கு ஒரு மருத்துவ அவசரம் வந்தது. யாராலும் போகமுடியாத சூழலில், சிறிய பெண் ஆனி வீட்டிலிருந்து புறப்பட்டாள். அவ்வளவு பயப்படுகிற சிறிய பெண், ஒரு மோசமான புயலில் தனியாக டாக்டர் கிராண்டைக் கூட்டி வருவதாகச் சொன்னாள். அவள் எப்படிச் சொன்னாள், பேய்தான் சொல்ல வைத்திருக்குமோ என்று நினைக்கிறேன். அங்கே பேய் வந்ததா? ஆனியால் டாக்டர் கிராண்டைக் கூட்டி வர முடிந்ததா என்பதுதான் கதை.

தீபாவளி வாழ்த்துக்கள் 🍪 🍮 🎆 🎇

Kannan

 

எட்டுக்கால் குதிரை – கொ.மா.கோ. இளங்கோ


வணக்கம் நண்பர்களே.

என் பெயர் கண்ணன். நான் எட்டுக்கால் குதிரை பற்றி எழுதப் போகிறேன்.

எட்டுக்கால் குதிரை
ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ
பதிப்பு: பாரதி புத்தகாலயம், சென்னை. முதல்பதிப்பு டிசம்பர் 2014
NLBயில் முன்பதிவு செய்ய:  Eṭṭukkāl kutirai / Ko. Mā. Kō. Iḷaṅkō.
கன்னிமாராவில் முன்பதிவு செய்ய: கிடைக்கவில்லை

ettukal-kuthirai-1

இந்த புத்தகம் எண்களைக் கதாபத்திரங்களாகக் கொண்ட விசித்திரமான புத்தகம்.

இந்தப் புத்தகத்தை நான் வாசித்து முடித்த உடன் இன்னொரு கதை நியாபகத்துக்கு வந்தது. அந்தக் கதையின் தலைப்பு நல்ல பேய் கதை. ஏன் என்றால் எனக்கு கதை எழுதவேண்டும் போல தோன்றுகிறது.

ettukal-kuthirai-2

முக்கியமான கதாபாத்திரங்கள்

  1. ஒன்று
  2. இரண்டு
  3. மூன்று
  4. நான்கு
  5. ஐந்து
  6. ஆறு
  7. ஏழு
  8. எட்டு
  9. ஒன்பது
  10. பத்து
  11. கணக்கு ஆசிரியர்

ettukal-kuthirai-8

இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. ஏன் என்றால் அதில் நிறைய சிரிப்பான பக்கங்கள் உள்ளன.

எட்டு ஏழுக்கு என்ன தொந்தரவு செய்தாலும் ஏழு எட்டுக்கு நல்லதுதான் செய்வான். ஏன் என்றால் அது ஒரு நல்ல பழக்கம்.

நான் இந்தப் புத்தகத்தை அங் மோ கியோ நூலகத்தில் இருந்து எடுத்து வந்தேன்.