பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது என்று தெரிந்ததும்….
சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “A Christmas Carol” குறுநாவலால்தான். அதற்கு முன்னும் இப்படி வாழ்த்து இருந்ததா என்று சரியாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்த குறுநாவல் வெளிவந்த பிறகுதான் இந்த வாழ்த்து பிரபலம் ஆகி இருக்கிறது.
குறுநாவல் 1843-இல் – சரியாகச் சொன்னால் டிசம்பர் 19, 1843-இல் – வெளியாகி இருக்கிறது. டிக்கன்ஸ் இதை கிறிஸ்துமஸுக்காகவே எழுதினார்.
டிக்கன்ஸ் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் அவரது எழுத்து மெலோட்ராமா நிறைந்தது (Great Expectations-இன் மிஸ் ஹாவிஷம்). அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் (சிட்னி கார்டன்-சார்லஸ் டார்னே உருவ ஒற்றுமை) விலக்கல்ல. ஆனாலும் அவரது எழுத்து வீரியம் வாய்ந்தது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அவ்வளவாக பேசப்படாத, அவரது எழுத்தில் கொஞ்சம் வித்தியாசமான, Hard Times.
A Christmas Carol புத்தகத்தை முதன்முதலாகப் படித்தபோது எனக்கு 20 வயது இருக்கலாம். Christmas Carol என்றால் என்ன என்று கூடத் தெரியாது, ஒரு பாடலைக் கூட நான் கேட்டதில்லை. என் பொது அறிவு அந்த அளவில்தான் இருந்தது. ஆனால் ஸ்க்ரூஜ் என்ற படிமம் மனதில் இருந்தது, எங்கேயோ கேள்விப்பட்டிருந்தேன். ஒரு புத்தகத்தின் வழியாக, அதுவும் ஏறக்குறைய தீபாவளி மலருக்காக எதையோ எழுதி அது ஒரு படிமம் ஆகவே ஆகிவிட்டதா, இத்தனை தாக்கம் உள்ள எழுத்தா என்று வியந்து போனேன். பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது…
View original post 301 more words