The Faceless Woman | English translation of முகம் தெரியா மனுசி in StoryMirror


Hi, I am really happy that my translation of Tamil classic முகம் தெரியா மனுசி – from the nationalised short story collection Samuthira Kathaigal by Su Samuthiram as THE FACELESS WOMAN – has been approved by the editorial team at StoryMirror and is now published on their platform.

Please do read my story and leave your comment, like and rating there. If you like my story, then please share it with others also.

Here is the link – https://storymirror.com/read/story/english/8h8n9lg5/the-faceless-woman-su-samuthiram/detail

(சிறுகதை) புடவியின் சதி | தோமிச்சன் மதேய்கல்


My Tamil translation of the short story ‘Conspiracies of the Universe‘ by @matheikal is published.

புடவியின் சதி | Pudaviyin sathi

Sahana Magazine: Part 1, Part 2

StoryMirror: Click here to read

It was written initially for #WriteAPageADay organized by @blogchatter

My picture is given as author’s picture by mistake.

ஒளியிலே தெரிவது | வண்ணதாசன்


பவானி சிரித்த சிரிப்பை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா. புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே அந்தத் தீயை கடைசியாக எப்போது பார்த்தேன்.

-ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது
ஆசிரியர் – வண்ணதாசன்
பதிப்பு – அமேசான் மின் புத்தகம்
பார்க்க – vannathasan

இது வரை வண்ணதாசனின் இரு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். இது மூன்றாவது. இவ்வளவு எளிதான மொழி நடையில் இவ்வளவு இனிமையான நினைவுகளை, வண்ணங்களை, மனிதர்களை இத்தனை செரிவுடன் ஒரு மனிதரால் எழுத முடிகிறது. அந்த மொழி நடையை வாசிக்கையிலேயே நம்மை அறியாமல் புன்னகைக்க வைக்கிறார், பதைபதைக்க வைக்கிறார். ‘0கொஞ்ச நேரம் கழித்து அடுத்த கதையை வாசிக்கலாமே, அந்தக் கதையின் இனிமையில் திளைத்த பின்னர்’ என நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வைக்கிறார். சிக்கல் சிடுக்கல் இல்லாத இந்த கதையோட்டமே நம்மை ஆழ்ந்து போக வைக்கிறது.

நாச்சியாரிடமும் கிருஷ்ணம்மாவுடனும் சேது பேசிக்கொண்டிருக்கும்போது நாம் நம் கிராமத்தின் குளத்தங்கரையிலோ ஆற்றங்கரையிலோ இருப்பதாக உணர்கிறோம். ஒவ்வொருவரின் உள்ளும் பிறந்த வளர்ந்த மண்ணின் வேரைப் பிடித்து வைத்திருப்பது அம்மண்ணின் மனிதர்கள் அல்லவா. இன்றளவும் நம் ஊர்களின் நாச்சியாரும் கிருஷ்ணம்மாவும் இருந்துகொண்டுதானே இருக்கின்றனர். அவர்கள் இருக்கும் வரைதான் அம்மண்ணும் மங்காத நினைவுடன் நம்மிடையே நிற்கும்?

‘அப்படியே இருக்கீங்க’ என்று சொன்னதும் கிருஷ்ணம் மாவுக்கு ஒரே சிரிப்பு. ‘அப்பா.. இந்த நாற்பது வருஷத்தில் இன்றைக்குத்தான் வாயைத் திறந்து என்கிட்டே பேசத் தோணியிருக்கு போல’ கிருஷ்ணம்மா நாச்சியார் முதுகைத் தொட்டுக்கொண்டு என்னிடம் பேசினார்.

-சிநேகிதிகள்

நிறைய மனிதர்களைக் காட்டுகிறது இந்த தொகுப்பு. ஊதாரி தந்தையர்கள், உயிரான தோழிகள், ஏங்கும் மனிதர்கள், அழுத்தத்தில் பிதுங்கும் மனிதர்கள்…

‘இமயமலையும் அரபிக்கடலும்’ காதையில் வரும் தங்கம் அப்படிப்பட்டவள்தான். ஓடிப்போன தந்தை, அந்த எரிச்சலில் வாழ்க்கையை நடத்தும் தாய், படிப்பில் ஆர்வமாய் இருப்பவளை வேலைக்குப் போகவைக்கும் வறுமை… இத்தனைக்கிடையிலும் ‘அம்மா இப்படி சிரிச்சிட்டே இருந்தா எப்படி இருக்கும்’ என்று ஏங்குகிறாளே. நமக்கு என்னவோ செய்கிறது. கரிசனத்துடன் வந்த சைக்கிள் காரப் பெரியவர் செய்யும் உதவி என்னவோ சிறிதுதான் என்றாலும், தந்தை அற்ற பெண்ணின் அந்த கண்ணீர் துளிகள் வாசிப்பவர் மனதைக் கணக்கவே வைத்திருக்கும்.

‘புதையல் எடுத்துக்கிட்டு வந்திருக்கியாக்கும் உங்க அய்யா கிட்டேயே கொடு’ என்று சிரித்த அம்மா ‘சிரங்கு எல்லாம் ஆறிட்டுதா? கையைக் காட்டு’ என்று சொன்னாள். இப்போது சிரங்கு எப்படிப் போனால் என்ன? அம்மா ஏன் அப்படியே கொஞ்சநேரம் சிரித்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று தோன்றிற்று.

மெல்லிய உணர்வுகளை சொல்லிச் செல்கிறது அத்தனை கதைகளும். ‘சில ராஜா ராணிக்கப்பல்கள்’ கதையில் வரும் சுந்தரம் மாமாவிற்கும் சரோ அத்தைக்கும்தான் எத்தனை வித்தியாசம்?

அம்மாவைப் பார்த்ததும் சரோ அத்தை எழுந்திருந்தார்கள். முகம் கொள்ளாமல் சிரித்தாள். அம்மா பரிசு வாங்க வருவது போலவும், சரோ அத்தை பரிசு கொடுக்கப்போவது போலவும் நின்றார்கள். பக்கத்தில் வந்ததும் அம்மா கையை அத்தை பிடித்துக் கொண்டாள்.

எத்தனை நல்ல உவமை. கதையின் கரு மின்னலாக நம் மனதிற்குள் அடிக்கிறது. அதை ஒரு சிறிய பெண்ணின் பார்வையில் கதை சொல்லவேண்டும் என்று தோன்றியிருக்கிறது அவருக்கு.

oliyile therivathu vannathasan

இப்படி யாரும் இழுக்காமல் கதையில் கையில் கீரைக்கட்டுடன் பாஸ்கர பெரியப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் அம்மாவைப் பார்க்கும் நீலா, அவளுடைய காதலை எச்சரிக்கையுடன் அணுகும் அம்மா, பக்கத்து வீட்டு அக்காக்கள் நினைவைத் தரும் ஒரு கூழாங்கல் காந்தி, செம்பா, காணாமல் போகும் வாய்க்கால்கள் சிந்தாமணி அக்கா என சுற்றி வாழ்கிற மனிதர்களுடன் வாழ்ந்த உணர்வைத் தருகிறது இத் தொகுப்பு.

உணர்வுகளை நாசூக்குடன் வெளிக்கொணரும் சுலோச்சனா அத்தை, ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ எல்லை மீறிய ஒரு பெண்ணைக் காட்டுவது போலத் தோன்றும். நமக்கு இரண்டு நிமிடம் கழித்துதான் ஒரு மின்னல் அடிக்கிறது. ஆமா. ‘அவ அப்டின்னா இவன் ஏன் அதை எல்லாம் வளரவிட்டுகிட்டு இருக்கான்’ என்று உணரும்போது கதை நம்மை வேறொரு இடத்தில் நிறுத்திவிடுகிறது.

இப்படி விட்டால் ஒவ்வொரு கதையைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுயும் விஞ்சி இந்த நூலை வாசிக்க வைப்பது வண்ணதாசனின் அசை போடுவது போன்ற கடந்த கால நினைவுகள், வர்ணம் வாசனை என்று எல்லாவற்றையும் சற்றேனும் மிகை இன்றி அவர் நமக்குக் காட்டித்தரும் காட்சிகள், …. இன்னும் எவ்வளவே.. அவ்வளவு இனிமையாக இருக்கிறது இந்த நூல்.  இமைக்கணம் என்கிற தலைக்குள் ஏறாத தத்துவ நாவலை வாசித்துவிட்டு அரண்டு போன நம் மனதிற்கு இது தரும் ஆசுவாசத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

கடைசி பெஞ்சின் கோடானு கோடி வாசகர்களின் நலன் கருதி இத்துடன் முடித்துவிடுகிறேன். இன்னொரு நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே.

 

பூக்கதைகள் | ஜெ தேவிகா


“திட்டாதே அம்மா! மணிக்குட்டி வருத்தப்படுவாள். என்ன மணிக்குட்டி, இவன் பாவம், உன் தம்பியல்லவா பொறாமைப்படக்கூடாது..” மணிக்குட்டி விழித்துப் பார்ததாள். இது எவ்வளவு பெரிய துன்பம்! சின்னத்தம்பியை அம்மா தன்னுடனேயே வைத்துக்கொண்டு படுப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அழுதபோது, “என்னடீ, நீ அக்கா அல்லவா, அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை!..?” என்று அம்மா அதட்டினாள். சரி போகட்டும் யாருடனும் எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தாள்.. “கவலையாக ஒரு மூலையில் இப்படி உட்கார்ந்து ஏன் தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய்..?” என்று மீண்டும் புத்தி சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்!
-எனக்கொரு கதை சொல்

pookathaikal 2

பூக்கதைகள்
ஆசிரியர்: ஜெ தேவிகா (மலையாளம்)
தமிழாக்கம்: யூமா வாசுகி
பதிப்பு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை – நான்காம் பதிப்பு ஜுன் 2015.
NLB முன்பதிவு: Pūkkataikaḷ / Je. Tēvikā ; mol̲iyākkam, Yūmā Vācuki.
கன்னிமாரா முன்பதிவு: இல்லை

pookathaikal 1

இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. இதில் மொத்தமாக 4 சிறுகதைகள் உள்ளன.

முதல் சிறுகதை – எனக்கொரு கதை சொல்.

மணிக்குட்டிக்குத் தம்பிப் பாப்பா பிறந்ததால் தனிமையாக உணர்ந்தாள். அதை எல்லாம் மாற்ற செம்பருத்திப்பாட்டி கதை சொல்லி மாற்ற வந்தாள்.

pookathaikal 3

இந்தக் கதை என் வாழ்க்கையோடும் பொருந்தி வந்தது. ஏனென்றால் எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். என் தாயும் தந்தையும் அவனைத் தான் எப்பொழுதும் பார்த்துக்கொள்கிறார்கள். என்னை அவர்கள் பார்த்துக் கொள்வது இல்லை. எனவே மணிக்குட்டி மாதிரி நானும் தனிமையாக உணர்கிறேன். தம்பி ஒரு சின்னப் பையன். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. அதனால் என்னுடைய தாயும் தந்தையும் அவனைத்தான் கவனித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாவது கதை – ஆகாயத்துப் பெண்ணும் பூலோகத்துப் பையனும்

இது செம்பருத்திப் பாட்டி மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. இது ஒரு பேராசைப் படும் பெண்ணைப் பற்றியது. சூரியன் மாமா ஒரு வானவில்லை ஆகாயத்துப் பெண்ணுக்குப் பரிசாகத் தருவான். பூலோகத்துத் தம்பி அதை விளையாடக் கேட்பான். அவனை ஏமாற்றி விடுவாள். சூரியன் மாமா அவளுடைய மனதை மாற்ற ஒரு தந்திரம் செய்கிறான்.

rainbow

வானவில் எப்படி உருவாகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை இது.

மூன்றாவது கதை – மழை மேகமும், குறிஞ்சிப் பையனும்

இது செம்பருத்திப் பாட்டியின் தோழியான மழை மேகம் மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. இது அக்காவிற்கும் தம்பிக்கும் உள்ள பாசத்தைப் பற்றிய கதை. அக்கா மழை மேகம். தம்பி குறிஞ்சிப்பூ. அம்மா நீலமலை. காற்று ஊதித் தள்ளிய தன் அக்காளைக் கூட்டி வர குறிஞ்சிப் பூ தம்பி எப்படி மீட்கிறான் என்று நான் படித்தேன்.

Strobilanths kunthiana குறிஞ்சி
Strobilanths kunthiana குறிஞ்சி

தமிழகத்தின் நீலகிரி மலையில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூவை அடிப்படையாகக் கொண்ட கதை இது.

நான்காவது கதை – முத்தும் பவழமும்

இது செம்பருத்திப் பாட்டியின் இன்னொரு தோழியான பவழமல்லிப் பாட்டி மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. சூரிய அக்காவும், சந்திர தம்பியும் எப்பொழுதும் சேர்ந்து இருக்க விரும்புவார்கள். ஆனால் சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரே நேரத்தில் வராது அல்லவா? இயற்கை தேவதை இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்து, அக்கா தம்பியை ஒன்றாக சேர்க்கிறாள் என்பதே கதை.

pavalamalli - (c) http://blog.nurserylive.com/2016/06/28/let-us-grow-d-kalp-vriksha-or-parijat-in-our-homes-and-gardening-in-india
pavalamalli – (c) http://blog.nurserylive.com/2016/06/28/let-us-grow-d-kalp-vriksha-or-parijat-in-our-homes-and-gardening-in-india

பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட கதை இது.

இந்தக் கதைகள் மணிக்குட்டியின் மனதை மாற்றியதா? அவள் தம்பிமீது பாசம் கொண்டாளா? என்பதை வாசித்துத் தெரிந்து கொள்க.

அன்புடன்
கண்ணன்.

kannan

Launch Pad|Shelly Bryant


‘அதைப் பார்த்தாயா’ தந்தை கேட்டார்
‘எதை’ திரும்ப ரோபோ கேட்டது. அம்மா செய்தித்தாளை வாசித்தபடியே, இங்கு நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தார்.
‘செய்தியில் காட்டிய வீடியோவை’ ரோபோவைப் பார்த்தபடியே சொன்னார் தந்தை.
‘இல்லை நான் பார்க்கவில்லை’
‘அவர்கள் தென்னிந்தியக் கடலில் மீண்டுமொரு தீவு அமைக்கப் போகிறார்களாம். 2042ல் முடித்துவிடுவார்களாம்.’
‘ஆம். நான் கேட்டேன்.’
தந்தை, ரோபோவை இன்னும் கூர்ந்து பார்த்தார். ‘நீ பார்க்கவில்லை என்று இப்பொழுதுதான் என்னிடம் சொன்னாய்.’ தாய் நடுக்கத்துடன் தன் புருவங்களின் கீழே தன் கணவரைப் பார்த்தாள்.

Launch Pad
Author: Shelly Bryant
Publisher: Epigram Books, Singapore.
இரவல் வாங்க: NLB | கன்னிமாரா

launchpad shelly bryant

ஷெல்லி ஒரு மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர். ஷாங்ஹாய் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். சிங்கையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய 13 அறிவியல் புனைகதைகள் இதில் உள்ளன. 2017 எழுத்தாளர் திருவிழாவில் இவருடைய நூல் அறிமுகத்தில் இவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

shelly bryant.jpg

பல்லின கலாச்சாரம், அறிவியல், பணியாளர்கள் என்று எத்தனை முறை இதே சரக்கை வைத்து இங்கே ஓட்டுவது? படிக்கலாம். தவறில்லை.

இருதயம் என்பது எனக்கில்லை..
இருந்தும் லஞ்சம் வாங்கவில்லை
ஓ மனிதா.. மனிதா.. ஓ மனிதா
அந்த இருதயம் என்பது இருந்தும்
லஞ்சம் வாங்காமல் நீ தூங்கவில்லை
ஓ மனிதா.. மனிதா.. ஓ மனிதா
இருதயம் இன்பது இல்லாவிட்டால் இப்படி லஞ்சம் வருமா
இருதயம் இல்லா மனிதரை மட்டும் இனிமேல் படைத்திடு ப்ரம்மா

என்று 4 வரியில் வைரமுத்துவால் கீற முடிகிறது. அந்த எதிர்பார்ப்பில்தான் நாம் ஒவ்வொரு நூலின் உள்ளே போகிறோம். அதை பூர்த்தி செய்ய வேண்டியது புனைவாளர்களின் பொறுப்பு.

மீண்டும் ஒரு நூல் அறிமுகத்தில் சந்திப்போம் நண்பர்களே.