வணக்கம் நண்பர்களே,
நான் இப்பொழுது படக்கதைகளைப் பற்றி எழுதப்போகிறேன்.
இந்தப் புத்தகங்கள் எல்லாம் என் பெரியப்பா கொடுத்தது. அதில் 9 புத்தகங்கள் இருந்தன.
- செல்வியின் ஓவியம்
- பூரி மசால்
- முட்டாள் சேவல்
- ராஜாவின் பல்வலி
- புறா புறா ஓடிவா!
- ட்ரிங் ட்ரிங்
- வெட்டலாம் நெய்யலாம்
- இபுன் பதூதா
- பென்சில் ரப்பர்
இதில் வரும் பென்சில், ரப்பர், டீச்சர், மாலு, வாசு, பாபு, ராஜா, எலி, சிங்கம், ரம்யா, ராணி, சேவல், இபுன் பதூதா எல்லாரையும் எனக்குப் பிடித்திருந்தது.
இதில் எல்லா புத்தகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ரொம்பப் பிடித்த புத்தகம் இபின் பதூதா, ட்ரிங் ட்ரிங்.
எழுதியவர்கள் – பவன், ராஷ்மி, சஞ்சீவ் ஜெய்ஸ்வால் சஞ்சய், மனீஷா சவுத்ரி, வினிதா கிருஷ்ணா, வினோத், சர்வேஸ்வர் தயாள் சக்சேனா
படம் வரைந்தவர்கள் – பவன், அஜித் நாராயண், சுவிதா மிஸ்திரி, வினோத்,
தமிழ் மொழி பெயர்ப்பு – என் சொக்கன்
பதிப்பு – Pratham Books, Bangalore.