பிரபல பதிவர் விடுப்பில் செல்வதால் பதட்டம்


கோடானு கோடி வாசகப் பெருங்குடி (சிறுகுடி, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி….) மக்களே,

ஒரு செயல்திட்ட வேலைக்காக மூழ்கி முத்தெடுக்கப் போவதால் எதிர் வரும் சில மாதங்களுக்குப் பெரிசா பதிவுகள் வராது. (டேய். யாருடா அங்க சீட்டி அடிக்கிறது..)

03

இத்தகு கடுமையான முடிவை எதிர்கொள்ள முடியாமல் யாரும் தீக்குளிக்கக் கூடாது.

பால் வண்டி, குப்பை லாரிகள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது.

இதுவும் மோடியின் சதி என்று புதிய கொலைமுறை மற்றும் தொந்தி டிவிக்கள் செய்தியைத் திரித்து மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தக்கூடாது.

இதற்காக எல்லாம் ஆசிய சுற்றுப் பயணத்தை கான்சல் செய்துவிட்டு வரக்கூடாது என்று PMOவிற்கும், ஆத்திரத்தில் கண்ணை உருட்டி, நாக்கைத் துருத்தி டிவி பார்க்கும் குழந்தைகளை திகிலில் ஆழ்த்தக்கூடாது என்று கேப்டன் அலுவலகத்திற்கும் செய்திகளை ஏற்கனவே அனுப்பியருக்கிறோம்.

சுதந்திர தினத்தன்று சந்திப்போம் நண்பர்களே.

வளர்க பாரதம்.

7 thoughts on “பிரபல பதிவர் விடுப்பில் செல்வதால் பதட்டம்

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    • நன்றி பாவாணரே. தங்களுக்கும் 2016 வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

      • 2016 தைப்பொங்கல் நாளில்
        கோடி நன்மைகள் தேடி வர
        என்றும் நல்லதையே செய்யும்
        தங்களுக்கும்
        தங்கள் குடும்பத்தினருக்கும்
        உங்கள் யாழ்பாவாணனின்
        இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

Leave a comment